தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மே 15ஆம் தேதி முதல், தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.
இன்றுடன் நான்கு நாட்கள் ஆகியுள்ளது. அந்த சந்திப்பின் நடந்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே பதிவிடுகிறோம்.
எல்லா ரசிகர்களுக்கும் பார் கோடு கொண்ட அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காலை முதலே வந்துவிடுகின்றனர்.
ரசிகர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சேர்களில் மட்டுமே அவர்கள் அமர அனுமதிக்கப்படுகின்றனர்.
மண்டபத்திற்குள் வந்தபிறகு வெளியே செல்ல அனுமதியில்லை.
சில ரசிகர்கள் ரஜினியிடம் காதோரம் ரகசியம் சொல்கின்றனர்.
அதனை ஆர்வமுடன் கேட்டுக் கொள்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினியை பார்த்தும் அவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆர்ப்பரிக்கின்றனர்.
தலைவா வா, தலைமையேற்க வா.. வருங்கால முதல்வர் என்று கோஷமிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ரசிகருடன் ஒரு குழந்தை வர அனுமதி தரப்பட்டுள்ளது.
குழந்தைகளை ஆரத்தழுவி தன் மடியில் வைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்.
சில ரசிகர்கள் நின்றுக் கொண்டும், சில ரசிகர்கள் உட்கார்ந்துக் கொண்டும், சில ரசிகர்கள் ரஜினியை தொட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
சில ரசிகர்கள் தன்னுடன் கொண்டு வரும் மோதிரம், செயின், வாட்ச், ருத்ராட்சை மாலை ஆகியவற்றை ரஜினியிடம் கொடுத்து அணிவிக்க சொல்கின்றனர். அவரும் அசராமல் செய்து வருகிறார்.
ஒவ்வொரு ரசிகர்கள் மேடைக்கு வரும்போது அவர்களை இன்முகத்துடன் இருகரம் கூப்பி வரவேற்கிறார்.
சில ரசிகர்கள் ஆர்வமிகுதியால் ரஜினி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகின்றனர். காலில் விழக்கூடாது என முன்பே தெரிவித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.
சந்திப்பின் போது அறுசுவை உணவுகள் தரப்படுகிறது.