தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எட்டு ஆண்டுகளுக்கு பின் தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவிருக்கிறார்.
இந்த சந்திப்பானது வரும் மே 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் மாவட்டந்தோறும் உள்ள ரசிகர் மன்ற ஒன்றிய, நகர நிர்வாகிகளை ரஜினி சந்திக்கிறார்.
இந்த சந்திப்பு கலந்துக் கொள்ள சில விதிமுறைகள் உள்ளது என்பதே நம் தளத்தில் பார்த்தோம்.
மேலும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய பிரத்யேக அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினி மன்ற நிர்வாகியான சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..
“ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி.
அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.
Rajinikanth fans association announcement regarding fans meet