தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரைத்துறை ஒரு பக்கம் சரிவை சந்தித்து வருவதால், தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன.
ஆனால் ஒரு சில அரங்குகளோ, புத்தம் புது பொலிவுடன் மீண்டும் உதயமாகி வருகிறது.
இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள கோபால கிருஷ்ணா திரையரங்கம் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
தற்போது இரண்டு அரங்குகள் வசதிகளுடன் புதிததாக திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரூபன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…
“நிறைய இருக்கை வசதிகள் மற்றும் கார் பார்க்கிங் வசதிகளுடன் இந்த புதிய அரங்கை திறந்துள்ளோம்.
டால்பி தொழில்நுட்பத்துடன் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு வசதிகள் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களும் அமைக்கப்படவுள்ளன” என்று தெரிவித்தார்.
தற்போது இறைவி மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய இரண்டு படங்கள் திரையிடப்பட்டுள்ளது.