தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமா போற்றும் வகையில் தரமான படங்களை இயக்கியவர் சேரன்.
இவர் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பொற்காலம், வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிஃராப், தவமாய் தவமிருந்து என பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
இதில் ஆட்டோகிராப் படத்திலிருந்து அவரே நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் இயக்குநர்-நடிகர் சேரனின் தந்தை எஸ். பாண்டியன் இன்று (நவம்பர் 16) காலை 6 .30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் இயற்கை எய்தினார்.
84 வயதான பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று நவம்பர் 16 காலை உயிரிழந்தார்.
அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் 1/14 ஏ, பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் நடைபெறும்.
சேரன் தந்தை பாண்டியன் மறைவை தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Director Actor Cherans father Pandiyan passes away
G-map:
https://maps.app.goo.gl/LdFdGMYcLMZbE1qe6