தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று அக்டோபர் 25 டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
ரஜினி விருது பெற மேடைக்கு வந்த போது விழாவில் பங்கேற்ற அனைவருமே எழுந்து நின்று வாழ்த்தினர்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்ட பின் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம்.
இந்தியாவின் கௌரமிக்க இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி.
இந்த தாதா சாஹேப் பால்கே விருதை எனக்குக் கொடுத்து கவுரவித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி.
இந்த விருதை எனது குரு கே பாலச்சந்தர் சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவரை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
எனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட், என்னை ஒரு தந்தை போல வளர்த்தவர். நல்ல பண்புகளையும், ஆன்மிகத்தையும் எனக்குப் போதித்தவர்.
கர்நாடகாவில் என்னுடன் பணியாற்றிய பஸ் டிரைவர் என் நண்பர் ராஜ் பகதூரை நினைத்துப் பார்க்கிறேன்.
நான் கண்டக்டராக இருந்தபோது ராஜ்பகதூர் தான் என் நடிப்புத் திறனை பார்த்து திரைத்துறையில் நான் சேர ஊக்கம் கொடுத்தார்.
எனது படங்களைத் தயாரித்த, இயக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை, அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், என் அத்தனை ரசிகர்களையும் நினைவுகூர்கிறேன்.
தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்.”
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
Super Star Rajinikanth speech at National Film Awards