தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
38 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வருகிறது.
இளையராஜாவின் இசைக்கு ரொம்பவே நெருக்கமான இடம் அது கூறப்பட்டது.
அந்த இடத்தை இளையராஜா காலி செய்ய வேண்டும் என நிர்வாகம் தெரிவித்தது. இதனால் நிர்வாகம் – இளையாராஜா இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தன் இசைக் கருவிகளை எடுக்கவும் தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
சில நிபந்தனைகளுடன் நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 28) காலை இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
ஆனால், திட்டமிட்டபடி இளையராஜா வரவில்லை.
ஆனால் இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் வந்தனர்.
இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால், அவர் வரவில்லை என்று அவருடைய பிஆர்ஓ தெரிவித்தார்.
Ilayaraja visit to Prasad lab cancelled