தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தாக்கினால் தமிழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்களை தாக்குவோம் என்று 2010ல் பேசினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
எனவே அவர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது.
அந்த வழக்கு விசாரணைக்காக இன்று பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.
அவர்… “ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது.
நடிகன் என்ற ஒரே தகுதியை வைத்து நாடாள நினைக்க கூடாது.
நல்லக்கண்ணு அய்யா ஒருவருக்குத் தான் அந்த தகுதி் உள்ளது. ஆனால் அவரை பற்றி யாரும் பேசுவதில்லை.
நானும் நடிகன் தான். ஆனால் நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. மக்களை சந்தித்தேன்..
எம்.ஜி.ஆர். பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார். அதனால் அவரை மதிக்கிறோம்.
மற்றபடி எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி கொடுத்தார்.?
கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது எம்.ஜி.ஆர். தான்.
முல்லை பெரியாறு உரிமையை கேரளாவிற்கு கொடுத்ததும் எம்.ஜி.ஆர். தான்.”
இவ்வாறு சீமான் பேசினார்.
NTK leaderSeeman slams Rajinikanth , Kamalhaasan and Vijay