தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா பொது முடக்கத்தின் 2ஆம் கட்டமான UNLOCK 2.0 தொடங்கிவிட்டது என பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
ஊரடங்கு தொடர்பாக 6வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மேம்பாடு குறித்தும் பேசினார்.
* நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு
அவரின் உரையின் முக்கிய துளிகள் இதோ…
* ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் தொடர்ந்து அஜாக்கிரதையாக செயல்பட்டு வருகின்றனர்
* பொறுப்பற்ற நடவடிக்கை நிச்சயம் கவலை அளிக்கக் கூடியது
* விதிமுறைகள் சட்டங்கள் என்பது அனைவருக்கும் பொதுவானது
ஊராட்சி தலைவரோ, பிரதமரோ விதிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டும் * நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது
* செய்யக்கூடிய சிறிய தவறுக்கு மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடலாம்
சிறிய தவறுக்கு கூட மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம்.
அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை.
கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது;
* இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது
* விவசாயிகளின் வங்கிக்கணக்கில் இதுவரை 18 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் கரீப் கல்யாண் திட்டம் குறித்தும் பேசினார் பிரதமர்.
‘இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
இதற்காக கடந்த 3 மாதங்களில் மட்டும் 31 ஆயிரம் கோடி ரூபாய் பணஉதவி வழங்கப்பட்டுள்ளது. அதே போல கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.
அதே போல நவம்பர் மாதம் வரை 80 கோடி மக்களுக்கு அடுத்த இலவச ரேஷன் பொருட்கள் சென்று சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பு இதன் மூலம் இலவசமாக நாடு மக்களுக்கு வழங்கப்படும்.
இதனால் நாட்டின் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்த அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.