தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.
இப்பட சூட்டிங் ஸ்பாட்டில் நுழைந்து விஜய்யை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிகில் பட சம்பளம் & வசூல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
அதன் பின்னர் மார்ச் மாத தொடக்கத்திலேயே மாஸ்டர் பட சம்பளம் குறித்து 2 முறை விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது சோதனைகள் அனைத்தும் முடிந்த பின்னர் விஜய் சரியாக வருமான வரி செலுத்தியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே மிஸ்டர் க்ளீன் விஜய் என ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்தனர்.
ஆனாலும் விஜய்யிடம் தொடர்ந்து இதுபோல் சோதனை நடப்பதால் இது அரசியலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நாளை (மார்ச் 15) மாலை ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
இதில் விஜய் ரசிகர்களுக்கு அனுமதியில்லை.
செய்தியாளர்கள் & படக்குழுவினருடன் கூடிய விழாவாக வடிவமைத்துள்ளனர்.
இதன் நேரலை சன் டிவியில் ஒளிப்பரப்பாகிறது.
இது போன்ற விழாக்களில், விஜய் அரசியல் பேசுவார். இந்த முறை வருமான வரித்துறை சோதனை குறித்து அதில் தன் தரப்பு நியாயங்களை சொல்வார் என சொல்லப்படுகிறது.
இதனை வழக்கம்போல ஒரு குட்டிக் கதை மூலமாக சொல்வார் என எதிர்ப்பார்க்கலாம்.





