தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் பல படங்களில் ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராகவும் நடித்தவர் நிதின் சத்யா.
தற்போது இவரே தயாரிப்பாளராகி தன் நெருங்கிய நண்பரான ஜெய்யை வைத்து ஜருகண்டி என்ற படத்தை தயாரித்துள்ளார்.
பிச்சுமணி இயக்கியுள்ள இப்படத்தில் ரெபா மோனிகா, ரோபோ சங்கர், இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிக்க, போபோ சாசி இசையமைத்துள்ளார்.
இந்த படம் வருகிற அக்டோபர் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது.
பொதுவாக ஒரு ஹீரோ தயாரிப்பாளர் ஆகிறார் என்றால், அவரே தான் தான் தயாரிக்கும் படங்களில் நாயகனாக நடிப்பார். இதில் அவரின் நண்பரை ஹீரோவாக்கி அழகு பார்த்துள்ளார்.
அப்படியிருந்தும் நேற்று நடைபெற்ற ஜருகண்டி பிரஸ்மீட்டுக்கு ஜெய் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்யை தவிர நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jai starrer Jarugandi Press meet and release updates