தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ப்ரேமம் சாய் பல்லவி, ஜிமிக்கி கம்மல் ஷெரில் பட்டியலில் அடுத்ததாக தற்போது கேரளாவை கலக்கியவர் பிரியா வாரியர்.
ஒரு பாடலின் ஒரு சில நொடி காட்சிகளில் காட்டிய எக்ஸ்பிரஷினிலேயே இளைஞர்களைத் தவிக்க விட்டுள்ளார் இவர்.
பிரியா வாரியரின் முகநூல், இன்ஸ்ட்கிராம், ட்விட்டர் எல்லாமும் லைக்ஸ்களாலும், பாலோயர்ஸ்களாலும் நிரம்பி வழிகிறது.
பிரியா வாரியரை பார்த்து கண்ணடித்த அந்த புதுமுக நடிகர் யார் என்கிற கேள்விக்கு இப்போது எல்லோரும் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ரோஷன் அப்துல் ரஹூஃப் என்பவர் தான் அந்த இளைஞர். பிரியா வாரியரைத் தொடர்ந்து தற்போது ரோஷனும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றார்.
கேரளா, திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஷன் அப்துல் ரஹூஃப்பிற்கு வயது 20. இவர் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலமாக திரை உலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
இதையடுத்து, ரோஷன் அப்துல் ரஹூஃப் தனது, இளங்கலை பட்டத்தை தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு நடன கலையில் ஆர்வம் அதிகம் இருந்ததினால் முறையான பயிற்சியினை மேற்கொண்டு, D3-D4 சிசன்3 என்ற நடன நிகழ்ச்சியில் தன்னுடன் பிறந்த அண்ணனோடு கலந்து கொண்டு ஜோடி நம்பர் ஒன் டைட்டில் பெற்றிருக்கிறார்.
நடன கலைஞராக வலம் வந்த நிலையில் இவரை தேடி வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.