தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி வருகிறது.
அவரின் 70-வது பிறந்தநாளையொட்டி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் `எளிமை மனிதரின் 70வது பிறந்தநாள் விழா’ என்ற தலைப்பில் பிரமாண்டமாக விழா கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி இந்த விழாவை ரஜினி ரசிகர்களுடன் நடத்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் கலந்துகொண்டனர். ரூ.6 லட்சம் மதிப்பில் 70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பாரதிராஜா பேசியதாவது…
ரஜினி என் மூச்சுக்கும் மேலானவர். சூப்பர் ஸ்டாருக்காக வரவில்லை. சூப்பர் மனிதருக்காக இங்கு வந்துள்ளேன். அடுத்தவர் மனதை காயப்படுத்தாத ஓர்மனிதர் என்றால் அது ரஜினி தான்.
16 வயதினிலே’ படத்தில் ரஜினியை ஒப்பந்தம் செய்தபின் அவருக்கு ரூ.3,000 சம்பளம் பேசினேன். ஆனால் ரூ.2,500 கொடுத்தேன். 500 ரூபாய் பாக்கி இருக்கிறது.
குரு சிஷ்யன்’ பட ரிலீஸ் சமயத்தில் என்னை படம் பார்க்க அழைத்தார். `இதெல்லாம் ஒரு படமா?’ என பார்த்துவிட்டு திட்டிடேன். `நீங்கள் படத்தை ரசிக்கவில்லை என்றால், படம் நிச்சயம் வெற்றிபெறும்’ என்றார் ரஜினி. அந்த அளவுக்கு நல்ல மனிதர், எளிமையானவர்.
அவருடன் 2 முறை முரண்பாடு ஏற்பட்டது. அப்போதும் ரஜினி என் மீது கோபப்படாமல் இருந்தார்.
கடவுள்களுக்கு உள்ளது போல் ரஜினிக்கும் ஒரு பவர் உள்ளது. அது தான் அனைவரையும் ரஜினியிடம் இழுக்கிறது’’ என பேசினார் ரஜினிகாந்த்.
Rajinikanth has some power like our Gods says Bharathiraja