தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கில் பிரபல நடிகரான சந்தீப் கிஷன் தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு ஆந்திராவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
இவரது ஆந்திர மாநில ரசிகர் மன்றத் தலைவராக இருந்தவர் கடப்பா ஸ்ரீனு. இவர் நேற்று மாரடைப்பால் காலமாகி விட்டார்.
எனவே கடப்பா ஸ்ரீனுவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார் சந்தீப் கிஷன்.
இதனையடுத்து சந்தீப் கிஷன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில்…
கடப்பா ஸ்ரீனு ஒரு விசுவாசமுள்ள ரசிகர். நான் ஒரு சகோதரனை இழந்திருக்கிறேன். எனது வளர்ச்சிக்காக நிறைய உழைத்திருக்கிறார். அதனால் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
ஸ்ரீனுவின் சகோதரிக்கு திருமணமாகி விட்டது. அதனால் தற்போது ஆதரவின்றி இருக்கும் அவரது அம்மாவுக்கு மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் தான் வழங்க உள்ளேன்” என சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
Actor Sundeep Kishan decided to take care of his fans mother