தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வைகாசி பொறந்தாச்சு என்ற தமிழ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தியாகராஜனின் மகன் நடிகர் பிரசாந்த்.
முதல் படத்திலேயே கிராமத்து ரசிகர்களை வரை கவர்ந்தார்.
இதற்கு அடுத்து வெளியான செம்பருத்தி படமும் இவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது.
இதன்பின்னர் ஒரு சில படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் இதன் பின்னர் வெளியான ஷங்கரின் ஜீன்ஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்து இந்தியா முழுக்க பிரபலமானார்.
தற்போது விஜய், அஜீத் இருக்கும் ரசிகர்களைவிட அதிகளவில் பேரும் புகழும் பெற்றார்.
முக்கியமாக ரசிகைகளை அதிகம் பெற்றார். இவருக்காகவே வெளிநாடுகளில் ஸ்டார் நைட் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
ஆனால் சில தோல்வி படங்களால் தன் மார்கெட்டை இழந்தார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜானி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதுவரை 49 படங்களில் நாயகனாக நடித்துள்ளார் பிரசாந்த்.
தற்போது ராம்சரண் உடன் வினய விஜிய ராமா என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு நண்பராக நடித்துள்ளார் பிரசாந்த். இது அவருக்கு 50 வது படம் என கூறப்படுகிறது.
Actor Prashanth act as Heros friend in his 50th movie