கர்மா திருப்பி அடிக்கும்..; சொல்வது ‘ஜீவி-2’ நாயகன் வெற்றி

கர்மா திருப்பி அடிக்கும்..; சொல்வது ‘ஜீவி-2’ நாயகன் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..

இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.

மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.

முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட கலைஞர்களும் அதே தொழில்நுட்பக் குழுவினரும் தான் இந்தப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

ஒய்ஜி மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் உள்ளிட்ட வெகு சிலர்தான் இந்த இரண்டாம் பாகத்தில் புதிதாக இணைந்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்தப்படம் நேரடியாக “ஆஹா” ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் நாயகன் வெற்றி இரண்டாம் பாகத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியஸான படங்களிலேயே நீங்கள் நடிக்கிறீர்களே?! எனக் கேட்கிறார்கள்..

“அப்படி படம் பண்ணினால் தானே கூட்டத்தை கூட்ட முடியும்? முதலில் ஒரு பார்வையாளராக, படம் பார்க்கும்போது எனக்கு போர் அடிக்காமல் இருக்க வேண்டும்..

நாலு நண்பர்கள், ஒரு காதலி, டூயட் இவற்றுடன் வலுவான கதையும் இருந்தால் அதிலும் நடிப்பதற்கு எனக்கு தயக்கம் இல்லை. நான் தற்போது நடித்துவரும் பம்பர் படம் அப்படிப்பட்ட ஒன்றுதான்”.

“ஜீவி-2 எடுக்கப் போகிறோம் என்று சொன்னதுமே எல்லோருமே சொன்ன ஒரே பதில் ‘நாங்கள் வெயிட்டிங்’ என்பதுதான்”..

“ஆஹா” ஓடிடி தளத்தில் 19ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் போல் இதுவும் ரசிகர்களை இழுத்துக் கொள்ளும்.”

“படத்தில் இடம் பெற்றுள்ளது போல முக்கோண விதி, தொடர்பியல் போன்ற விஷயங்களை நிஜத்தில் நான் உணர்ந்ததில்லை.

ஆனால் கர்மா என ஒன்று இருப்பதையும் நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கு அது திருப்பி அடிக்கும் என்பதையும் நம்புகிறேன்”..

“அதே சமயம் ஜீவி படம் பார்த்துவிட்டு நிறைய பேர், தங்கள் வாழ்க்கையில் இதுபோன்று நிகழ்வுகள் நடந்திருப்பதாக கூறியபோது ஆச்சரியப்பட்டேன்”.

“ஜீவி 2 படப்பிடிப்பை திட்டமிட்டு அழகாக அதே வேளையில் படத்தின் பிரமிப்பில் குறைவில்லாமல் முடித்துள்ளோம்”.

” இந்த படத்தில் நடித்தது ஒரு ரீ-யூனியன் போல தான் இருந்தது”.

“எங்கள் குழு “ஜீவி” இவ்வளவு வரவேற்பு பெறும் என்றோ அதற்கு இரண்டாம் பாகம் உருவாகும் என்றோ நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை என்று கூறி தங்களது வியப்பை வெளிப்படுத்தினார்கள்”.

“ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற சீனியர் நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது”.

“முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக இடம் பெற்ற மலையாள நடிகர் அணில் முரளியின் மறைவு துரதிஷ்டவசமானது. அவருக்குப் பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் நடித்துள்ளார்.”

லாக்டவுன் சமயத்தில் தான் ஜீவி-2 எடுக்கலாம் என இயக்குநர் கோபி முடிவு செய்தார். அதே சமயம் இந்த படத்தின் முதல் பாகத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ் அடுத்ததாக புதிய படம் இயக்கும் வேலைகளில் இறங்கி விட்டதால் ஜீவி 2 படத்தில் அவரால் பங்களிக்க இயலவில்லை. அதனால் கோபிநாத்தே இந்த முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி விட்டார்.

இப்போது ஜீவி-2 முடிந்ததுமே இதற்கு மூன்றாம் பாகம் உருவாகுமா என பலரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த படத்திற்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பும் விமர்சனங்களும் தான் அதை முடிவுசெய்ய வேண்டும்.
.
இந்த படத்தில் நடித்து முடித்தபோது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை மிக திருப்தியாக முடித்துள்ளோம் என்கிற எண்ணம் தான் எழுந்தது.

மீண்டும் இதே குழுவுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்றும் ஆசையும் இருக்கிறது. ஆனால் அது மூன்றாம் பாகமா என்பது தெரியாது” என சஸ்பென்ஸ் வைத்து முடிக்கிறார் நடிகர் வெற்றி.

ஜீவி-2

Karma will strike back..; Saying ‘Jiivi2’ hero vetri

‘கோச்சடையான்’ விவகாரம்.; லதா ரஜினி தொடர்பான வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

‘கோச்சடையான்’ விவகாரம்.; லதா ரஜினி தொடர்பான வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2011ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டபோது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பின்னர் குணமடைந்து வந்தபின் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

அப்போது அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தில் சில தினங்கள் நடித்துக் கொடுத்தார்.

இந்த படத்தை அவரது இளைய மகள் சௌந்தர்யா இயக்கி இருந்தார்.

‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது.

இப்படத்திற்காக ஆட்புரு அண்ட் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார்.

ஆனால் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.8½ கோடியை லதா ரஜினி திருப்பி செலுத்த வேண்டும்.

எனவே இது தொடர்பாக ஆட்புரு அண்ட் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடுத்தது.

இதனையடுத்து 2014ஆம் ஆண்டு பெங்களூர் நீதிமன்றத்தில் லதா ரஜினி அவர்கள் ‘கோச்சடையான்’ படத்தின் நிதி விஷயங்கள் குறித்து தயாரிப்பு நிறுவனம் கருத்துக்கூற தடை உத்தரவு பெற்றார்.

இதனை எதிர்த்து பெங்களூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் புகார் ஒன்றை அளித்தது.

அந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினி பெற்ற தடை உத்தரவை நீக்கியதுடன், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு கர்நாடக ஹைகோர்ட் லதா ரஜினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர அனுமதியும் வழங்கியது.

இந்த நிலையில் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டுமென கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் லதா ரஜினி.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் லதா ரஜினிக்கு எதிராக ஏமாற்றுதல் & தவறான தகவல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ’கோச்சடையான்’ படத்திற்கு கடன்பெற்ற விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு விசாரணையில் இருந்து லதா ரஜினிகாந்துக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என கர்நாடகா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Court verdict in the case related to Latha Rajinikanth on Kochadaiyyaan issue

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘கட்டம் சொல்லுது’ பட ரிலீஸ் மீம்ஸ்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘கட்டம் சொல்லுது’ பட ரிலீஸ் மீம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதியவர்களின் புதிய முயற்சியில் வித்தியாசமான கதைக் களததில் உருவான படம் ‘கட்டம் சொல்லுது’.

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார் எழிலன்.

இந்த படத்தில் தீபா ஷங்கர், எழிலன், சின்னதுரை, திடியன் சகுந்தலா, ராஜா அய்யப்பன் மணிவாசகம் ராணி ஜெயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமீம் அன்சாரி இசையில் சபரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் நாளை ஆகஸ்ட் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாவுள்ளது.

இந்த நிலையில் ‘கட்டம் சொல்லுது’ படம் தொடர்பாக மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘Kattam Solluthu’ movie release memes going viral on social media

முதன்முறையாக ரஜினிகாந்துடன் டூயட் பாட ரெடியாகும் தமன்னா

முதன்முறையாக ரஜினிகாந்துடன் டூயட் பாட ரெடியாகும் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார் என பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளப் போகிறாராம்.

இந்த நிலையில் இதில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இது உறுதியானால் ரஜினியுடன் தமன்னா இணைவது முதன்முறையாகும்.

விஜய் அஜித் விக்ரம் சூர்யா தனுஷ் விஷால் ஆகிய முன்னணி நடிகர்களுடன் தமன்னா நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Tamannah to play female lead in Jailer ?

பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி – கமல் – அமிதாப்.; எப்போ.? எங்கே.?

பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி – கமல் – அமிதாப்.; எப்போ.? எங்கே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.

தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பான் இந்தியா படங்களுக்கு சவால் விடும் வகையில் தமிழ் சினிமாவில் மிகப்பிரமாண்டமாக பான் இந்தியா படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல்பாகம் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீசாகிறது.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஜெயராம் விக்ரம் பிரபு பார்த்திபன் சரத்குமார் ஆதேஷ் பாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும் பொன்னி நதி என்ற சிங்கிள் ட்ராக் பாடலும் வெளியானது இதற்கும் ஒரு விழா நடத்தியது படக்குழு.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செனரனையில் பிரம்மாண்டமாக செப்டம்பர் 6-ல் நடைபெறுகிறதாம்.

இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொள்வார்கள் என தெரிய வந்துள்ளது.

Rajini – Kamal – Amitabh at Ponniyin Selvan’s Festival; When? Where?

இரட்டை வேடங்களில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும்.; நாயகியாக ரிது வர்மா!

இரட்டை வேடங்களில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும்.; நாயகியாக ரிது வர்மா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், ’மார்க் ஆண்டனி’.

எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இதில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘ பட நாயகி ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாடலும் ஆக்‌ஷனும் சேர்ந்த காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர்.

நேற்று நடந்த படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்ற போது நடிகர் விஷாலுக்கு அவரது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இப்போது ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘லத்தி’ படத்தின் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பின்போதும் நடிகர் விஷால் சில முறை காயமடைந்திருந்தார்.

Vishal and SJ Suriya in dual roles. Ritu Varma as the heroine!

More Articles
Follows