தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்..
கிராண்ட் மதர் என்பதின் சுருக்கம் தான் ‘கிராண்மா’. தமிழில் சொன்னால் பாட்டி.
இந்த படத்தில் விமலா ராமன் அவருடைய மகள் பௌர்ணமி ராஜ் அவரின் பாட்டியாக சர்மிளா.
கதைக்களம்..
பேய் படம் என்றாலே ஓர் அடர்ந்த காட்டுக்குள் யாருமே எளிதில் செல்ல முடியாத அளவிற்கு ஒரு பங்களா ஒன்று இருக்கும் தானே. அது இந்த படத்திலும் உண்டு. இந்த படத்தில் அந்த வீடு மட்டும் தான் கதைக்களம் கதை எல்லாமே.
பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் ஒரு காட்டுக்குள் ஒரு வீடு.
வழக்கறிஞர் விமலாராமனும் அவருடைய மகள் பௌர்ணமியும் வசிக்கின்றனர்.
இரண்டாம் வகுப்பு படிக்கிற சிறுமி ஆகிய இருவர் மட்டும் உள்ளனர். வீட்டில் ஒரு வாய் பேச முடியாத வேலைக்காரி இருக்கிறாள். ஆனால் அவர் இரவில் அங்கு தங்குவதில்லை.
அந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாடம் நடத்த ஆசிரியராக வருகிறார் சோனியா அகர்வால்.
எங்கள் பாட்டி இந்த வீட்டில் தான் ஆன்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறாள் அந்த சிறுமி. இதுவரை எந்த ஆசிரியரும் இந்த வீட்டில் தங்குவதில்லை. பேய்க்கு பயந்து உடனே ஓடி விடுவார்கள் என சொல்லி சோனியாவை மிரட்டுகிறார்.
அதன் பிறகு சோனியா என்ன செய்தார்.? சோனியாவை அந்த பாட்டி ஆவி என்ன செய்தது? அந்த வீட்டில் என்ன என்ன நடந்தது? என்பதுதான் நீதி கதை.
கேரக்டர்கள்..
நீண்ட நாட்களுக்கு பிறகு சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். விதவிதமான ஆடைகளை போட்டு வருகிறார். ஏற்கனவே அவரது முகம் சற்று தூங்கி எழுந்தது போல் தான் இருக்கும். அதுவும் இந்த படத்தில் பயமுறுத்து காட்சிகளில் அது அப்படியே அவருக்கு பொருந்தி உள்ளது .
விமலா ராமன் வீட்டிற்கு கெஸ்ட் போல வந்து செல்கிறார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எதிராளிகளிடம் தைரியமாக சிங்க பெண்ணாக துணிச்சலான வக்கீலாக நடந்து கொள்கிறார்.
சிறுமி பௌர்ணமி நிறையவே கண்டிப்பாக நடந்து கொள்கிறார். நிக்கி வேடத்தில் தயாரிப்பாளர் ஜெயராஜின் மகள் பௌர்ணமி ராஜ் நடித்திருக்கிறார்.
அவரது பாட்டியாக வரும் சர்மிளா தலையில் விக் வைத்தது போல வருகிறார். மேக்கப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
டெக்னீஷியன்கள்…
ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்பதால் கேமராவை மறந்துவும் கூட வெளிய வைக்கவில்லை. சில காட்சிகளில் மட்டும் ட்ரோன் பயன்படுத்தி வீடு மற்றும் காட்டு பங்களாவை காட்டுகின்றனர்.
ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜி பறவைப் பார்வையில் அந்த வீட்டைக் காட்டியிருப்பது அழகு.
இசையமைத்திருக்கும் சங்கர் ஷர்மாவின் பின்னணி இசை கதைக்கேற்ப ஓட்டியிருக்கிறார்.
கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் சிஜின்லால். இறுதியாக ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர்..
எல்லா படங்களிலும் பேய்கள் மனிதனை பயமுறுத்தும்.. மனிதனை கொன்றுவிடும். ஆனால் இந்த படத்தில் பேய்களால் மனிதனை ஒன்றுமே செய்ய முடியாது என்று விளக்கம் கொடுத்துள்ளார் அதை நிச்சயமாக பாராட்டலாம்..
Grandma Movie Review in Tamil