கிராண்மா விமர்சனம்.. பயமுறுத்தும் பாட்டி!

கிராண்மா விமர்சனம்.. பயமுறுத்தும் பாட்டி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

கிராண்ட் மதர் என்பதின் சுருக்கம் தான் ‘கிராண்மா’. தமிழில் சொன்னால் பாட்டி.

இந்த படத்தில் விமலா ராமன் அவருடைய மகள் பௌர்ணமி ராஜ் அவரின் பாட்டியாக சர்மிளா.

கதைக்களம்..

பேய் படம் என்றாலே ஓர் அடர்ந்த காட்டுக்குள் யாருமே எளிதில் செல்ல முடியாத அளவிற்கு ஒரு பங்களா ஒன்று இருக்கும் தானே. அது இந்த படத்திலும் உண்டு. இந்த படத்தில் அந்த வீடு மட்டும் தான் கதைக்களம் கதை எல்லாமே.

பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் ஒரு காட்டுக்குள் ஒரு வீடு.

வழக்கறிஞர் விமலாராமனும் அவருடைய மகள் பௌர்ணமியும் வசிக்கின்றனர்.

இரண்டாம் வகுப்பு படிக்கிற சிறுமி ஆகிய இருவர் மட்டும் உள்ளனர். வீட்டில் ஒரு வாய் பேச முடியாத வேலைக்காரி இருக்கிறாள். ஆனால் அவர் இரவில் அங்கு தங்குவதில்லை.

அந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாடம் நடத்த ஆசிரியராக வருகிறார் சோனியா அகர்வால்.

எங்கள் பாட்டி இந்த வீட்டில் தான் ஆன்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறாள் அந்த சிறுமி. இதுவரை எந்த ஆசிரியரும் இந்த வீட்டில் தங்குவதில்லை. பேய்க்கு பயந்து உடனே ஓடி விடுவார்கள் என சொல்லி சோனியாவை மிரட்டுகிறார்.

அதன் பிறகு சோனியா என்ன செய்தார்.? சோனியாவை அந்த பாட்டி ஆவி என்ன செய்தது? அந்த வீட்டில் என்ன என்ன நடந்தது? என்பதுதான் நீதி கதை.

கேரக்டர்கள்..

நீண்ட நாட்களுக்கு பிறகு சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். விதவிதமான ஆடைகளை போட்டு வருகிறார். ஏற்கனவே அவரது முகம் சற்று தூங்கி எழுந்தது போல் தான் இருக்கும். அதுவும் இந்த படத்தில் பயமுறுத்து காட்சிகளில் அது அப்படியே அவருக்கு பொருந்தி உள்ளது .

விமலா ராமன் வீட்டிற்கு கெஸ்ட் போல வந்து செல்கிறார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எதிராளிகளிடம் தைரியமாக சிங்க பெண்ணாக துணிச்சலான வக்கீலாக நடந்து கொள்கிறார்.

சிறுமி பௌர்ணமி நிறையவே கண்டிப்பாக நடந்து கொள்கிறார். நிக்கி வேடத்தில் தயாரிப்பாளர் ஜெயராஜின் மகள் பௌர்ணமி ராஜ் நடித்திருக்கிறார்.

அவரது பாட்டியாக வரும் சர்மிளா தலையில் விக் வைத்தது போல வருகிறார். மேக்கப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

டெக்னீஷியன்கள்…

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்பதால் கேமராவை மறந்துவும் கூட வெளிய வைக்கவில்லை. சில காட்சிகளில் மட்டும் ட்ரோன் பயன்படுத்தி வீடு மற்றும் காட்டு பங்களாவை காட்டுகின்றனர்.

ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜி பறவைப் பார்வையில் அந்த வீட்டைக் காட்டியிருப்பது அழகு.

இசையமைத்திருக்கும் சங்கர் ஷர்மாவின் பின்னணி இசை கதைக்கேற்ப ஓட்டியிருக்கிறார்.

கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் சிஜின்லால். இறுதியாக ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

எல்லா படங்களிலும் பேய்கள் மனிதனை பயமுறுத்தும்.. மனிதனை கொன்றுவிடும். ஆனால் இந்த படத்தில் பேய்களால் மனிதனை ஒன்றுமே செய்ய முடியாது என்று விளக்கம் கொடுத்துள்ளார் அதை நிச்சயமாக பாராட்டலாம்..

Grandma Movie Review in Tamil

ஃபாரின் சரக்கு விமர்சனம்..; வேலையில்லா மூளைக்காரன்

ஃபாரின் சரக்கு விமர்சனம்..; வேலையில்லா மூளைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஃபாரின் சரக்கு’.

அறிமுக நடிகர்கள் கோபிநாத், சுந்தர், உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன், அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரித்துள்ளார்.

சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒன்லைன்..

ஃபாரின் சரக்கு என்பதால் இந்த படத்தில் தண்ணி அடிக்கும் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதற்கு ஏமாற்றமே.
ஃபாரினில் இருந்து வரும் பொருட்களை கூட நாம் சரக்கு என்று சொல்வோம் அல்லவா அதுதான் இந்த ஃபாரின் சரக்கு.

கதைக்களம்…

குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். அப்படி என்றாலே அதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பது அர்த்தம் தானே..

எனவே தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை சில நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதுஒரு புறம் நடந்தாலும் மறுபுறம் குஜராத் அமைச்சரின் மகனை சில கும்பல்கள் துரத்துகின்றன.

இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத்

அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? என்பதை ட்விஸ்டுகளோடும் சொல்லியிருக்கிறார்கள்.

கேரக்டர்கள்…

நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் சில யுக்திகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.

கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேக்கப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை

மகாலிங்கம் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்திருக்கும் உசேன் அசத்தியிருக்கிறார். சுரேந்தர் சுந்தரபாண்டியனும் கச்சிதம்.

அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோருக்கு பெரிதாக வேலை இல்லை ஆனாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்கள்.

பிரவீன் ராஜ் இசையில் பாடல்கள் கதை ஓட்டத்திக்கு உதவியுள்ளது.

பின்னணி இசை இரைச்சலை கொடுத்துள்ளது ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளில் ஓகே.

ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜனின் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆனால் படத்திற்கு வெளிச்சத்திற்காக வைக்கப்பட்ட லைட் செட்டிங் கருவிகள் காட்சிகளில் தெரிவது ஏன்? ஒரு முக்கியமாக இடைவேளைக்கு வரும் பிறகு வரும் சண்டை காட்சியில் தெருவிளக்கு மட்டும் இருந்தால் போதும். மற்ற செட் ஸ்டாண்ட் விளக்குகளும் தெரிகிறது.. அதை இயக்குனர் கவனிக்கவில்லையா? அல்லது ஒளிப்பதிவாளர் கவனிக்கவில்லையா?

எடிட்டர் பிரகாஷ்ராஜ் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியிருப்பது பலம்.

’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை வைத்துவிட்டு படத்தில் மது அல்லது புகை காட்சிகளை வைக்காமல் சொன்னது சூப்பர்.

இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி, இளைஞர்களுக்கான மெசஜோடு படத்தை நிறைவு செய்கிறார்.

படிக்காதவனே நிறைய தவறுகளை செய்யும்போதும் அதிகாரத்தில் இருந்து சில தவறுகளை செய்யும்போது படித்த புத்திசாலிகள் என்னென்ன செய்வார்கள் என்பதை இயக்குநர் சொல்லி இருப்பது சிறப்பு.

குறைந்த பட்ஜெட் காரணமாக சிறு சிறு குறைகள் காணப்படுகிறது.

மொத்தத்தில், ‘ஃபாரின் சரக்கு’ ஒருமுறை பருகலாம்

Foreign Sarakku movie review in Tamil

அன்யாஸ் டுட்டோரியல் விமர்சனம் 2/5

அன்யாஸ் டுட்டோரியல் விமர்சனம் 2/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஒரு வீட்டிற்குள் மாட்டிக்கொண்ட ஒரு இளம் பெண்ணின் கதை. அந்த வீட்டிற்குள் அவரை சுற்றி நடக்கும் அமானுஷ்ய சக்திகளின் கதை தான் இப்படம்.

7 அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர் ஆஹா (Aha) ஓடிடி.யில் பார்க்கக் கிடைக்கிறது. #AnyasTutorialOnAHA Screaming from July 1st

கதைக்களம்…

ரெஜினா கஸன்ட்ராவும் நிவேதிதா சதீஷும் அக்கா தங்கை.

ஒரு கட்டத்தில் தன் அம்மாவிடமும், அக்கா ரெஜினாவிடமும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார் நிவேதிதா.

அப்போது கொரோன லாக்டவுன் காலகட்டம் ஆரம்பிக்கிறது. இதனால் வீட்டை விட்டு எவரும் வெளியே வர முடியாத சூழ்நிலை.

அந்த சூழ்நிலையில் அக்காவும் தங்கையும் வீடியோ காலில் பேசிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனடையில் தங்கை நிவேதிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்யா டுடோரியல் என்ற ஒரு பக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதில் அழகு கலை குறிப்புகளை தன் பார்வையாளர்களுக்கு சொல்லி வருகிறார்.

அப்போது அவர் தங்கியிருக்கும் வீட்டில் பல அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் உள்ளது.

இதனை வீடியோ காலில் பார்க்கும் அக்கா ரெஜினா என்ன செய்தார்? தன் தங்கையை எப்படி காப்பாற்றினார்? என்பதை படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வீடியோ காலில் 20 வார்த்தையே ரெஜினா பேசினால் அதில் பத்து வார்த்தை FCUK என்பதாகவே உள்ளது. ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்களுக்கு சென்சார் இல்லை என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் கெட்ட வார்த்தை பயன்படுத்தலாம் என்பது விதிமுறையா என்னவோ.? அந்த வார்த்தைகள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.. மற்றபடி வழக்கம்போல ரெஜினா வருகிறார்.

மாடர்ன் மங்கையாக நிவேதிதா சதீஷ். சில நேரங்களில் பேய்களே பயன்படுத்தும் அளவிற்கு அரைக்கால் டவுசரில் வந்து போகிறார்.

மற்றபடி இன்னும் சில கேரக்டர்கள் வந்து போகின்றன.

டெக்னீஷியன்கள்..

பின்னணி இசை சில இடங்களில் மிரட்டுகிறது. கலை இயக்குநரின் மெனக்கெடல் தொடருக்கு பலம் சேர்த்துள்ளது.

ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதை என்பதால் ஒளிப்பதிவாளர் அதை உணர்ந்து தன் பணியை திறம்பட செய்துள்ளார்.

இரு பெண்களை கதையின் நாயகிகளாக்கி தொடரை இயக்கியிருக்கிறார் ஒரு பெண் இயக்குநர் பல்லவி கங்கிரெட்டி.

முதல் பாகத்தில் காட்சிகள் ஆமை வேகத்தில் நகருவதால் நமக்கு சோதனைதான். இரண்டாம் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியுள்ளது.

இருந்தாலும் சொல்ல வந்த ஒரு விஷயத்தை சுற்றி வளைக்காமல் சொல்லி இருந்தால் படத்தை ரசிகர்கள் ரசித்திருப்பார்கள்.

ஆக அன்யாஸ் டுடோரியல்… தேர்ச்சிக்காக காத்திருக்கும் மாணவர்கள்..

Anya’s Tutorial movie review in tamil

டி ப்ளாக் விமர்சனம்.; சிறுத்தைப் பெண்கள்

டி ப்ளாக் விமர்சனம்.; சிறுத்தைப் பெண்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் நடக்கும் தொடர் கொலைகளே இப்படத்தின் ஒன் லைன்.

கதைக்களம்…

கோவை பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓர் இன்ஜினியரிங் கல்லூரி செயல்படுகிறது. அந்த கல்லூரி பெண்கள் விடுதியில் ஏகப்பட்ட நிபந்தனைகள்.

மாலை ஆறு மணிக்கு மேல் மாணவிகள் வெளியே வரக்கூடாது.. 9 மணிக்கு மேல் மொட்டை மாடிக்கு செல்லக்கூடாது. அறையில் விளக்குகள் எரியக்கூடாது என ஏகப்பட்ட கண்டிசன்கள்.

இதை மீறி செயல்படும் பல மாணவிகள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு காரணம் சிறுத்தை தான் என கல்லூரி மேனேஜ்மென்ட் சொல்கிறது.

பெண்களை மட்டும் குறி பார்த்து ஒரே மாதிரி சிறுத்தை கொலை செய்கிறதா.? என்ற கேள்வி நாயகன் மனதில் தோன்றுகிறது.

அப்படி என்றால் கொலையாளி யார்? அதற்கான காரணம் என்ன? பின்னணி என்ன என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

காலேஜ் பையனாக ஸ்மார்ட்டாக வருகிறார் அருள்நிதி. வழக்கம் போல எங்கும் அலட்டி கொள்ளாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அருளின் நண்பர்களாக ஆதித்யா கதிரும், படத்தின் இயக்குநர் விஜய்யும் நடித்துள்ளனர். கதிரின் காமெடி சில இடங்களில் ஓகே.

நாயகியாக வரும் அவந்திகா மிஸ்ரா அழகு. நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை போல. இவரின் தோழியாக வரும் பெண்ணுக்கு உருண்ட குண்டு விழிகள்.. அதுவே திகில் காட்சிகளில் பயத்தை கொடுக்கிறது.

வில்லனாக வருபவர் ஒரு சைக்கோ என காட்டப்படுகிறார். அதற்கு சில பிளாஷ்பேக் காட்சிகளை வைத்துள்ளனர்.

பிரின்சிபால் தலைவாசல் விஜய், செக்யூரிட்டி ரமேஷ் கண்ணா, ஹாஸ்டல் வார்டன் உமா ரியாஸ் என சீனியர் ஸ்டார்கள் படத்தில் உள்ளனர். இதில் ரமேஷ் கண்ணாவின் நடிப்பு நம்மை கலங்க வைக்கிறது.

‘வாம்மா மின்னல்’ என்ற வேகத்தில் வருறார் கரு.பழனியப்பன். இவரால் படத்தில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று நாம் எதிர்பார்த்து இருந்தால் அந்த ஒரு காட்சியோடு போய்விடுகிறார். ஆனால் தனக்கே உரித்தான நக்கலுடன் காடுகளை அழித்த சாமியார்களை கிண்டல் செய்துவிட்டு செல்கிறார்.

டெக்னீஷியன்கள்..

கோயம்புத்தூர் பகுதிகளில் பல கல்லூரிகள் அடர்ந்த காட்டுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது தான் அது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இந்த படத்தைப் பார்க்கும் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த படம் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய பயத்தை ஏற்படுத்தும்.

ஒளிப்பதிவு ஓகே ரகம். கௌசிக் கிரிஷின் பின்னணி இசை சில இடங்களில் திகிலைக் கூட்டுகிறது.

முதல்பாதியில் வருகை பதிவேடில் கையெழுத்து போட ஹீரோ ஒரு காட்சியில் ஹீரோயின் உதவியை நாடுகிறார். ஆனால் அதன் பிறகு அது சம்பந்தமான காட்சிகள் எதுவுமே இல்லை. இந்த காட்சிகளை எடிட்டர் கணேஷ் சிவா வெட்டி இருக்கலாம். எடிட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கல்லூரிக்கு நடக்கும் திகில் கதையை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர். யூட்யூப் தளங்களில் பிரபலமாகி இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார் இயக்குனராக விஜயகுமார் ராஜேந்திரன். (எருமசாணி விஜய்)

அவருடைய முதல் முயற்சிக்கு நாம் வரவேற்பு கொடுக்கலாம். ஆனால் அதே சமயத்தில் திரைக்கதையை இன்னும் சுவாரசியம் ஆக்கி இருக்கலாம்.

கிளைமாக்ஸ் காட்சியில் கல்லூரி பெண்களே சிங்கப்பெண்களாக சாரி சாரி சிறுத்தைப் பெண்களாக மாறி அதகளம் செய்து ஆக்ஷனில் இறங்கியுள்ளது சிறப்பு.

ஆக டி ப்ளாக்.. சிறுத்தைப் பெண்கள்

D Block movie review in Tamil

ராக்கெட்ரி விமர்சனம் 4.25/5… இந்தியாவின் நம்பிக்கை

ராக்கெட்ரி விமர்சனம் 4.25/5… இந்தியாவின் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராக்கெட்ரி விமர்சனம் : மாதவன் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி விமர்சனம் இதோ

ஒன்லைன்…

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படம் “ராக்கெட்ரி.

இப்படத்தினை எழுதி இயக்கி நம்பி நாராயணனாக நடித்திருக்கிறார் நடிகர் மாதவன்.

கதைக்களம்…

தன் இளம்வயதிலேயே படிப்பிலும் திறமையாளராக இருக்கிறார் மாதவன் (நம்பி நாராயணன்). இவர் கேரளாவில் வசிக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்து, விஞ்ஞானியாக வேண்டும் என நினைக்கிறார்.

அப்போது அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு நம்பிக்கு கிடைக்கிறது.

பஞ்சாங்கப்படி இந்தியாவின் விண்கல சாதனை.; சர்ச்சையில் சிக்கிய மாதவன் மீண்டு(ம்) விளக்கம்

நம்பியின் திறமையை கண்டு வியந்த அமெரிக்கர்கள், கோடிக்கணக்கில் சம்பளம் தருகிறோம். நாசாவில் பணியாற்ற அழைக்கின்றனர்.

ஆனால் இந்தியராக இந்தியாவில் பணியாற்ற விரும்பி இஸ்ரோவில் இணைகிறார்.

அப்போது இவரின் முயற்சிகளை தோற்கடிக்க சிலரின் தீய எண்ணத்தால் இவருக்கு கெட்ட பெயரை உருவாக்க திட்டமிடுகின்றனர்.

அதன்படி கேரளாவில் நடைபெற்ற ஒரு சின்ன பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்கி நம்பி நாராயணன் மீது தேச துரோக வழக்கை பதிவிடுகின்றனர்.

இதனையடுத்து கேரளா போலீசார் அவரை கைது செய்து கொடுமைப்படுத்துகின்றனர். தேச துரோகத்திற்கு பொறுப்பேற்க துன்புறுத்துகின்றனர். இஸ்ரோ கூட நம்பிக்கு துணையாக வரவில்லை.

இதன்பின்னர் என்ன ஆனது? தன் மீது சுமத்தப்பட்ட வழக்கை எப்படி எதிர் கொண்டார் நம்பி என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நம்பி நாராயணன் கேரக்டருக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துள்ளார் மாதவன். அந்த வரலாறை படித்து அதன் தன்மையை உணர்ந்து வாழ்ந்திருக்கிறார் மாதவன். உடம்பை ஏற்றி இறக்கி பாடி லாங்குவேஜ்ஜிலும் தன்னை வேறுப்படுத்தி தன்னை முழுமையான நடிகராக வெளிப்படுத்தியுள்ளார்.

போலீஸின் கொடுமையான விசாரணையில் நம்மை நிஜமாகவே கண் கலங்க வைத்துவிட்டார் மாதவன்.

மாதவனின் மனைவியான சிம்ரன். அவரும் தன் அனுபவ நடிப்பில் நம்மை கவர்ந்துள்ளார். மேலும் மாதவனின் உடன் நடித்த விஞ்ஞானிகள் அனைவரும் கச்சிதம். ஆங்கிலேயர்களும் அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளனர்.

மாதவனை டிவி பேட்டி காண்பவராக சூர்யா நடித்துள்ளார். அவர் நம்பி நாராயணனின் காலில் விழும்போது நமக்கும் விழத் தோன்றும்.

அப்போது நம்பி பேசும் வசனங்கள் பொய் வழக்கு போடும் நீதிமன்றத்திற்கும் போலீசுக்கும் சாட்டையடி. இனியாவது அவர்கள் திருந்தனும்…

ராக்கெட் பற்றி நாம் அறியாத விஷயங்களை தெளிவாக கொடுத்துள்ளது படக்குழு. ஏபிஜே அப்துல் கலாமாக நடித்தவரும் சிறப்பு.

உலக விஞ்ஞானத்தில் இந்தியாவின் பட்கு என்ன? எப்படி எல்லாம் நாம் மற்ற நாடுகளுடன் போட்டி போடுகிறோம்? என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

சிர்ஷா ரே’வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.. ராக்கெட்டை பல கோணங்களில் காண்பித்து நம்மை அதனுடன் பயணிக்க வைத்துவிட்டார்.

சாம் சி எஸ் பின்னணி இசை அசத்தல். நம்மை ராக்கெட்டுடன் ஜெட் வேகத்தில் பயணிக்க வைக்கிறது. பின்னணி இசை மிரட்டல்.

ராக்கெட்ரி படத்தை இயக்கவும் தயாரிக்கவும் முன்வந்துள்ள மாதவனை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்.

ஆக ராக்கெட்ரி.. இந்தியாவின் நம்பிக்கை எனலாம்.

Rocketry movie review in tamil

யானை விமர்சனம் 3.25/5.. ஹரி டெம்ப்ளேட்டில் அருண் விஜய்

யானை விமர்சனம் 3.25/5.. ஹரி டெம்ப்ளேட்டில் அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யானை விமர்சனம் : ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான யானை விமர்சனம் இதோ

ஒன்லைன்…

மணிரத்னம் ஷங்கர் விக்ரமன் கௌதம் மேனன் மிஷ்கின் பாலா ரஞ்சித் என ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு பாணி இருக்கும்… ஒரு டெம்ப்ளேட் இருக்கும்.. அதுபோல..

டைரக்டர் ஹரி இயக்கிய பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஐயா சாமி அருள் சிங்கம் வேல் பூஜை வேங்கை இப்படி பல படங்கள்.. இந்த படங்களில் எல்லாம் ஒரு டெம்ப்ளேட் வச்சிருப்பாரு..

இரண்டு குடும்பத்திற்கு தீராத பகை இருக்கும்.. இதில் ஹீரோ குடும்பம் பெரிய கூட்டு குடும்பமாக இருக்கும்.

கண்டிப்பாக ஹீரோயின் ஒத்த ஜடை போட்டு இருப்பார்.. 4-5 சுமோ ஜிப்புகள் இருக்கும்.. வெட்டுக்குத்து அருவா சண்டை இருக்கும்.. குடும்ப செண்டிமெண்ட் இருக்கும்.. அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள்.. அதிரடி பஞ்சு வசனங்கள் இருக்கும். இதுதான் ஹரி படத்தின் டெம்ப்ளேட்..

நாம் மேலே சொன்னவற்றில் ஒன்றும் கூட குறையாத டெம்ப்ளேட்டில் யானை படத்தை தன் அசூர பலத்துடன் தன் மச்சான் அருண் விஜய்யுடன் இணைந்து கொடுத்துள்ளார் ஹரி.

இந்த திரைக்கதையில் சமுத்திரக்கனி-யின் தம்பியாக வருகிறார் அருண் விஜய்.

ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனியின் மகள் அம்மு அபிராமி மூலம் ஒரு காதல் பிரச்சினை வருகிறது.

அதற்கு சித்தப்பா அருண் விஜய் துணை போகிறார். இதனால் அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.

மேலும் வில்லன் கொடுக்கும் டார்ச்சர் தொல்லைகளை ஹீரோ தன் சாமர்த்தியத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் எப்படி வென்றார் என்பதை படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்..

கம்பீரமான தோற்றத்தில் அருண் விஜய் அசால்டாக அசர அசர அடித்திருக்கிறார். ரொமான்ஸ் சென்டிமென்ட் ஆக்ஷன் என தெறிக்க விட்டுள்ளார். ஒரு பக்கம் வேட்டி சட்டை என மிரட்டினாலும் மறுபக்கம் பேண்ட் ஷர்ட்டிலும் அசத்தலாக அருண் விஜய்.

வழக்கம்போல ஹரி பட நாயகிகளில் வருபவராக ஒத்த ஜடையில் வருகிறார் பிரியா பவானி சங்கர்.

தன் காதலனே தன்னை சந்தேகம் படும் காட்சிகளில் அவர் பேசும் வசனங்கள் சிறப்பு. கொடுத்த கேரக்டரில் அழுத்தமான பதிவை கொடுத்துள்ளார் பிரியா.

இதில் யோகி பாபு நடிப்பை நாம் பாராட்ட வேண்டும். இரண்டு மூன்று காட்சிகளில் நம்மை வாய்விட்டு சிரிக்க வைத்தார். கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை சிறிது கண் கலங்கவும் வைத்து விட்டார் யோகி.

அம்மு அபிராமி நடிப்பு கச்சிதம். தன் சித்தப்பாவை பார்த்த பின்…” ரவி அப்பா.. ரவி அப்பா” என்று அவர் அழும் பொழுது நம்மையும் கண் கலங்க வைத்து விட்டார்.

இவருடன் ராதிகா சமுத்திரகனி தலைவாசல் விஜய் போஸ் வெங்கட் ஐஸ்வர்யா இமான் அண்ணாச்சி மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட அனைவரும் கச்சிதமான சிறப்பான தேர்வு.

கேஜிஎப் வில்லன் ராமச்சந்திர ராஜூக்கு இந்த படத்தில் நல்லதொரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அவர் கொஞ்சம் மிரட்டி இருக்கலாம் என தோன்றுகிறது. காரணம் அவர் கிராமத்து வேடத்மிற்கு பொருந்தவில்லை.

டெக்னீஷியன்கள்…

ஜிவி பிரகாஷின் பின்னணி இசையில் காட்சிகளில் அனல் பறக்கிறது. மேலும் வேல்முருகன் பாடியுள்ள இரண்டு பாடல்கள் நம்மை தாளம் போட வைக்கின்றன. கிராமத்து மண்வாசனைக்கேற்ற வகையில் இசையமைத்து கொடுத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தையும் வேகத்தையும்
கொடுத்துள்ளது.

ஆனால் எடிட்டர் தான் நம்மை கொஞ்சம் சோதித்து விட்டார். அருண் விஜய் பெரிய நீண்ட வசனமாக பஞ்சு வசனங்களை பேசுகிறார்.. அப்பாடா படம் முடிஞ்சிட்டு என்று நாம் நினைக்கையில் மீண்டும் சில ட்விஸ்ட்டுகளை வைத்து படத்தின் நீளத்தை கூட்டி உள்ளது நம் பொறுமையை சோதிக்கிறது.

அருண் விஜய்யின் காதலி கிறிஸ்தவ பெண்ணாகவும் அம்மு அபிராமியின் காதலன் முஸ்லிம் பையனாக காட்டியிருப்பது சிறப்பு.

இதன் மூலமாக மத ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் காதல் கலப்பு திருமணத்தை காட்சிப்படுத்தி நம் தேச ஒற்றுமை காட்டியுள்ளார் ஹரி.

அதுபோல ஜாதி வெறி பிடித்தவர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளனர்.

சாமி சிங்கம் படங்களைப் போல ஜெட் வேகம் இல்லை என்றாலும் வேங்கை படத்தை விட விவேகம் காட்டியிருப்பது இந்த யானை படத்தின் பலம்.

ஆக… ஹரி டெம்ப்ளேட்டில் அருண்விஜய்

Yaanai movie review in Tamil

More Articles
Follows