தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்பதற்காக அதற்கு எதிராக சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அதனால் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் அங்கு நடத்த கோர்ட் அனுமதி தரவில்லை.
இந்நிலையில், கடந்த 47 நாட்களாகத் திரையுலகினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இன்று முதல் புதுப்படங்கள் ரிலீஸாக உள்ளன.
எனவே, ஐபிஎல் கிரிக்கெட்டை இடம் மாற்றியது போல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை புதுப்படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்படுமா? என்று உதயநிதி கேட்டிருந்தார்.
தற்போது ஆர்.ஜே. பாலாஜியும் இதே கேள்வியைக் கேட்டுள்ளார்.
“வேலை நிறுத்தத்துக்குப் பிறகு நிறைய நல்ல மாற்றங்களுடன் சினிமாத்துறை மறுபடியும் வந்துள்ளது.
இதன்மூலம் ஆயிரக்கணக்கான தினசரி சம்பளக்காரர்கள், தன்னுடயை குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை உரிய நேரத்தில் கட்ட முடியும்.
இந்த நல்ல தீர்வை அடைவதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.
அதேசமயம், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை சினிமாவையும் புறக்கணிக்கக் குரல் கொடுப்பார்களா?
இரண்டு தவறுகள் ஒரு நல்ல விஷயத்துக்குத் தீர்வாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தவறை ஏற்றுக் கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.
Will IPL match ban protestors ask apologise to peoples says RJ Balaji