தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த பின்னர், நற்பணி மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினிகாந்த்.
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களை அவர் ஒருங்கிணைத்தார்.
அதன்பின்னர் ரஜினியின் ட்விட்டர் பதிவுகள் எல்லோராலும் தினம் தினம் கவனிக்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும் ஏதாவது ஓரிரு நிகழ்வுகளுக்கு மட்டுமே ரஜினி தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
ஒருபுறம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனங்களையும் செய்து வருகிறார்.
மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையில் ரஜினியும் அரசியல் குறித்த தன்னுடைய கருத்துகளை ஆணித்தரமாக பேசியும் பேட்டிகளிலும் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் நேற்று அவரை சந்தித்து பேசினார்.
அப்போது ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூமகாலிங்கமும் உடன் இருந்தாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சென்ற ரஜினி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது பேசிய நிர்வாகிகள்… தற்போது தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருவதால் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட உகந்த சூழ்நிலை இல்லை.
எனவே கட்சி தொடக்க விழாவை சில மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என்று யோசனை தெரிவித்தார்களாம்.
அந்த யோசனையை ரஜினி ஏற்றுக் கொண்டதாகவும், போராட்டங்கள் ஓய்ந்து சுமூகமான சூழ்நிலை உருவான பின்னர் கட்சி அறிவிப்பை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
What will be next step of Rajinikanth in politics