‘மாஸ்டர்’ விஜய்க்கு மாஸ் கிஸ் அடித்த விஜய்சேதுபதி

‘மாஸ்டர்’ விஜய்க்கு மாஸ் கிஸ் அடித்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi Kiss to Vijay in Master spotவிஜய் & விஜய்சேதுபதி இருவரும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் மாஸ்டர் பட படப்பிடிப்பு நடந்த போது, ஆர்ட் டைரக்டர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

அப்போது வழக்கம்போல அவருக்கு கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

அப்போது விளையாட்டாக விஜய்யும் முத்தம் கேட் தனது அக் மார்க் முத்தத்தை கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி.
இது அங்குள்ள பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது,

இதுவரை அந்த படத்தை வெளியிடவில்லை. எனவே விரைவில் எதிர்பார்க்கலாம்.

(இதில் இருக்கும் படம்.. கிராபிக்ஸ் டிசைனர் கை வண்ணம்.. ஹிஹி…ஹிஹ்ஹி)

Vijay Sethupathi Kiss to Vijay in Master spot

‘மாஸ்-க்கு மாஸ்டர்; மாஸ்டருக்கு..! விஜய்யுடன் இணையும் பார்த்திபன்?

‘மாஸ்-க்கு மாஸ்டர்; மாஸ்டருக்கு..! விஜய்யுடன் இணையும் பார்த்திபன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthiban talks about Vijay and Thalapathy 65 movieலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஏப்ரல் மாதம் 9-ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இதன்பின்னர் விஜய்யின் அடுத்த படத்தை (தளபதி 65) யார்? இயக்குவார்? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த நிலையில் ’‘தளபதி 65’ படத்தில் இயக்குநர் பார்த்திபன் விஜய்யுடன் இணைந்தால் செம மாஸ்’ என்று ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளித்த பார்த்திபன், “மாஸ்க்கு மாஸ்டரை பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனைப் பிடிக்கும். (‘நண்பன்’ படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார். அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்). நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்” என பதிவிட்டுள்ளார்.

Parthiban talks about Vijay and Thalapathy 65 movie

https://twitter.com/rparthiepan/status/1229591376603385856?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1229591376603385856&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fentertainment%2Fcinema-thalapathy-65-movie-director-parthiban-reply-in-twitter-msb-256479.html

‘நான் சிரித்தால்’ சக்ஸஸ் மீட்டில் சக்காளத்தி சண்ட போட்ட குஷ்பூ

‘நான் சிரித்தால்’ சக்ஸஸ் மீட்டில் சக்காளத்தி சண்ட போட்ட குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushboo Sundar speech at Naan Sirithaal success meetசுந்தர் சி தயாரிப்பில் ராணா இயக்கத்தில் வெளியான படம் நான் சிரித்தால்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், கேஎஸ் ரவிக்குமார், ரவி மரியா, ஷாரா, படவா கோபி, சுஜாதா, பாண்டியராஜன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 14ல் வெளியானது. இன்று பிப்ரவரி 18ல் இந்த படத்தின் வெற்றி (சக்ஸஸ் மீட்டிங்) சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு வெற்றிக்கு காரணமானவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இப்பட தயாரிப்பாளர் குஷ்பூவும் கலந்து கொண்டு பேசினார்.

சிரிப்பா சிரிக்குது… நான் சிரித்தால் விமர்சனம் 3/5

அவர் பேசியதாவது…

முதலில் ஹிப் ஹாப் ஆதியை எங்களுக்கு தெரியாது. என் மகள் அவரின் மிகப்பெரிய ரசிகை. அவள்தான் அந்த வீடியோக்களை காண்பித்தார்.

என் கணவர் (சுந்தர்) யார் அந்த பையன் என கேட்டார்? இவர் தான் ஹிப் ஹாப் ஆதி என அறிமுகம் செய்தார்.

ரஜினி மீது என் கண்கள்; அவர்தான் இந்திய சூப்பர் ஸ்டார்.. – குஷ்பூ

அதன்பின்னர் அவர் எங்கள் படங்களுக்கு இசையமைத்தார். இப்போது எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டார்.

ஆதி எப்போது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் மணிக்கணக்கில் என் கணவருடன் பேசிக் கொண்டே இருப்பார்.

இரவு வெகு நேரம் ஆனாலும் பேசிக் கொண்டே இருப்பார்கள். எனக்கு வந்த சக்காளத்தி ஆதி.

அவர்கள் இரவு நேரத்தில் தான் அதிகம் உழைக்கிறார்கள். அது அவர்களுடைய பாணி. நமக்கு காலை நேர உழைப்பு தான்.”

என பேசினார் குஷ்பு.

Khushboo Sundar speech at Naan Sirithaal success meet

naan sirithaal meet

ஹன்ஷிகா மோத்வானியின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த் !

ஹன்ஷிகா மோத்வானியின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Srikanth in mahaபெண் கதாப்பாத்திரத்தை முன்னணி பாத்திரமாக கொண்டு திரில்லர் பாணியில் உருவாகும் “மகா” படத்தில் ஹன்ஷிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. தற்போது இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிகர் ஶ்ரீகாந்த் நடிக்கிறார். வித்தியாசமான வேடங்களை தேடிப்பிடித்து நடிக்கும் ஶ்ரீகாந்த் “மகா” படத்தில் ‘விக்ரம்’ எனும் பாத்திரத்தில் போலீஸ் கமிஷ்னராக நடிக்கிறார். மிக ஆச்சர்யம் என்னவெனில் இவரது கதாப்பாத்திரம் படம் முழுதும் பயணிக்கும்படியானது. இவர் பங்குபெறும் பகுதிகள் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார்த்தி வைக்கும் திரில் தருணங்களை கொண்டிருக்கும். ஶ்ரீகாந்த் நடித்திருக்கும் காட்சிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீகாந்த் இக்கதாப்பாத்திரத்திற்காக தந்திருக்கும் உழைப்பு இப்படத்தை அவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக மாற்றியுள்ளது. இப்படத்தில் நடிகர் கருணாகாரன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Etcetera Entertainment சார்பில் V. மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் U.R. ஜமீல் இப்படத்தை இயக்குகிறார். ஹன்ஷிகா மோத்வானி மற்றும் சிம்பு ஜோடியாக நடிக்கிறார்கள் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடியுள்ளது. படத்தின் புகைப்படங்கள் வைரலாக பரவி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் வரும் 2020 மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி 21ல் மோதும் பாரதிராஜா-அருண் விஜய்-நட்டி-போஸ் வெங்கட்

பிப்ரவரி 21ல் மோதும் பாரதிராஜா-அருண் விஜய்-நட்டி-போஸ் வெங்கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil films 2020இந்த வாரம் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 21ல் மோதவுள்ள படங்கள் என்ன? என்ன என்பதை பார்ப்போம்.

பாரதிராஜா நடித்துள்ள மீண்டும் ஒரு மரியாதை படம் வெளியாகிறது.

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை இயக்கியுள்ளார்.

வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதை தான் இந்த படம்.

இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு முதலில் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டது.

இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது.

என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார்.

இதனையடுத்து லைகா தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாஃபியா படம் வெளியாகவுள்ளது.

இதில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

நட்டி நட்ராஜ் மற்றும் லால் இணைந்து நடித்துள்ள காட்ஃபாதர் படமும் வெளியாகவுள்ளது.

ஜெகன் ராஜ்சேகர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நட்டி நட்ராஜ் அதியமான் என்ற கேரக்டரிலும் லால் மருது சிங்கம் என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

‘பர்ஸ்ட் கிளாப் எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் ‘ஜி.எஸ்.ஆர்ட்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு நவீன் ரவிந்திரன் இசை அமைக்க, என்.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை கவனிக்க அருண் சங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார்.

நடிகராக ஜொலித்த போஸ் வெங்கட் முதன்முறையாக இயக்கியுள்ள கன்னி மாடம் படமும் வெளியாகிறது.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் குட்டி தேவதை என்ற படமும் வெளியாகவுள்ளது.

கார்த்திக் நரேன் தான் அடுத்த ரவிக்குமார்-ஹரி-சுந்தர் சி… பிரசன்னா

கார்த்திக் நரேன் தான் அடுத்த ரவிக்குமார்-ஹரி-சுந்தர் சி… பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prasanna Director Karthick Narenதுருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் நரேன்.

அதன்பின்னர் நரகாசூரன் படத்தை எடுத்தார். இவருக்கும் அப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் அப்படம் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது 3வது படமாக லைகா தயாரிப்பில் மாஃபியா படத்தை எடுத்துள்ளார்.

இந்த படம் வருகிற பிப்ரவரி 21ல் வெளியாக உள்ளது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரசன்னா பேசியதாவது…

“இந்தப் படத்தை 33 நாட்களில் முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.

இதன் கிளைமாக்ஸ் காட்சிக்காக பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 2 லட்ச ரூபாய் வாடகை கொண்ட ஒரு சூட்டில் படப்பிடிப்பு நடந்தது.

அங்கு மூன்று நாட்களில் எடுக்க வேண்டிய ஒரு காட்சிகளை ஒரே நாளில் எடுத்து முடித்தார். இவர் எப்படி எடுப்பார் என காத்திருந்த அனைருவருக்கும் அதிர்ச்சி.

3 நாள் படப்பிடிப்பு செலவை தயாரிப்பாளருக்கு மிச்சப்படுத்தினார்.

இதற்கு முன் கே.எஸ்.ரவிக்குமார், ஹரி சுந்தர் சி ஆகியோரின் திட்டமிடல் இப்படிதான் இருக்கும். அதான் அவர்கள் இன்றும் படங்களை இயக்குகிறார்கள்.

எனவே என்னை பொறுத்த கார்த்திக் நரேன் தான் அடுத்த கே.எஸ்.ரவிக்குமார், ஹரி சுந்தர் சி” என்பேன்.

More Articles
Follows