தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”.
டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றி பேசினர்.
இமைக்கா நொடிகள் படத்தில் ஆக்ஷன் காட்சிகளை பற்றி சொல்லும்போதே இயக்குனர் அஜய் புதுமையாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதற்காக கடினமாக உழைத்தோம்.
படத்தில் சைக்கிள் ஸ்டண்ட் ஒன்றுக்காக ஹாங்காங்கில் இருந்து டீம் ஒன்றை வரவழைத்தோம். எந்த தயக்கமும் இல்லாமல் செலவு செய்தார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.
எல்லோருடைய ஒத்துழைப்பால் படத்தில் சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. படம் வெளியான பிறகு நன்றாக பேசப்படும் என்றார் ஸ்டன் சிவா.
இந்த படம் எனக்கு ஒரு புதுமையான அனுபவம். இயக்குனர் அஜய் கதையை சொன்னபோதே அதற்குள் ஒரு வசீகரம் இருந்தது. நம்மை கட்டிப்போடும் பல விஷயங்கள் கதையில் இருந்தன. புதுமையான விஷயங்களை தேடுவது என்ற இயக்குனரின் தேடல் பெரியது.
தனக்கு என்ன தேவை என்பதை கேட்டு வாங்கும் தெளிவு அவரிடம் இருந்தது. இது என்னுடைய 24வது படம், முதல் முறையாக இந்த படத்தில் தான் பூஜை அன்றே முழு சம்பளத்தையும் வழங்கினார் தயாரிப்பாளர். படம் 2 மணி நேரம் 50 நிமிடம்.
ஆனால் தலைப்புக்கேற்ற மாதிரி கொஞ்சம் கூட கண் இமைக்காமல் படத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
இரண்டு வருட கடின உழைப்பு, பல அவமானங்கள் தாண்டி வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகிறது இமைக்கா நொடிகள். படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையால் 5 நாட்களுக்கு முன்பே படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருக்கிறோம்.
அனுராக் காஷ்யாப் கேரக்டர் இளம் ரசிகர்களை மிகவும் கவரும். விஜய் சேதுபதி, நயன்தாரா காட்சிகள் ஆண்கள் கண்களிலும் கண்ணீரை வரவைக்கும். ஆக்ஷனில் நாங்கள் எந்த காம்ப்ரமைஸும் செய்யவில்லை.
சண்டைக்காட்சிகளுக்கு தேவையான விஷயங்களை தயாரிப்பாளரிடம் எப்படி கேட்டு வாங்குவது என்ற கலை தெரிந்தவர் ஸ்டன் சிவா. ஆதியின் பின்னணி இசையோடு படத்தை பார்க்க நானும் ஆவலோடு இருக்கிறேன் என்றார் தயாரிப்பாளர் சிஜே ஜெயகுமார்.
Vijay Sethupathi and Nayanthara scenes will make gents to cry