தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பல திறமையான கலைஞர்களை தன் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக சினிமாவுலகில் அறிமுகப்படுத்தியவர் ஆர்பி. சௌத்ரி.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 95க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார் இவர்.
ஆரம்ப கால படங்களில் ஆக்சன் நாயகனாக வலம் வந்த விஜய்யை காதல் நாயகனாகவே மாற்றியதே இந்த நிறுவனம்தான்.
விஜய் நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் உள்ளிட்ட பல படங்களின் மூலம் இது சாத்தியமானது.
அண்மையில் கூட மோகன்லால், விஜய் இணைந்து நடித்த ஜில்லா படத்தை தயாரித்திருந்தனர்.
இந்நிலையில் தன் 100வது படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
இதில் விஜய் நடிக்க வேண்டும் என விரும்பி, அவரை நாட, அவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் இது குறித்த அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.
கடந்த வருடம் வெளியான விஜய்யின் மெர்சல் படம் கூட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay may act in Super Good films in 100th movie