ஜாக்கெட் அணியாமல் ரசிகர்களை சூடேற்றிய விஜய்-தனுஷ் பட நாயகி

ஜாக்கெட் அணியாமல் ரசிகர்களை சூடேற்றிய விஜய்-தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த பேட்ட படத்தில் ச்சிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இந்த படத்தின் கதையே இவரைச் சுற்றியே நகர்வதாக இருக்கும்.

ரஜினி படத்தில் நடித்த பெயரால் உடனே விஜய் படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனையடுத்து தனுஷின் ‘மாறன்’ படத்திலும் வாய்ப்பை பெற்றார்.

தற்போது ‘யுத்ரா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

இவர் சோஷியல் மீடியாவில் தன் போட்டோக்களை அதிளவில் போஸ்ட் கொண்டே செய்திருப்பார். ஒவ்வொன்றும் பல லைக்ஸ்களை அள்ளும்.

சில படங்கள் படு கிளாமராக இருக்கும். தற்போது பட்டுப் புடவையில் ஜாக்கெட் அணியாமல் எடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தன் இடுப்பில் ஒரு அழகான டாட்டூ குத்தியிருக்கிறார் மாலு.

இந்த படங்கள் ரசிகர்கள் பெரிதும் கவர்ந்துள்ளது.

மழை காலத்தில் எங்களை சூடேற்ற வந்த மாலுவே… என ரசிகர்கள் சொல்லாமல் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Vijay Dhanush film heroine’s glamour pic goes viral

வாரே வாவ்…. பொதுமேடையில் ‘வலிமை’ வில்லனின் ரொமான்ஸ்

வாரே வாவ்…. பொதுமேடையில் ‘வலிமை’ வில்லனின் ரொமான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா.

இவர் தற்போது தெலுங்கில ’ராஜா விக்ரமாதித்தன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் புரமோஷன் விழாவில் இவர் கலந்துக் கொண்ட போது தன் காதலியுடன் ரொமான்ஸ் செய்துள்ளார். அதாவது தன் வருங்கால மனைவிக்கு பூங்கொடுத்து ப்ரோபோஸ் செய்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ல் நடிகர் கார்த்திக்கேயாவுக்கும் லோகிதா ரெட்டி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த மாதம் நவம்பர் 21ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றவுள்ளது,

இவர்களின் காதலின் வயது 10 என்பது குறிப்பிடத்தக்கது.

தன் காதலிக்கு கார்த்திகேயா புரோபோஸ் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Valimai villain’s romance at public place

கர்நாடகாவில் தலை.. தமிழகத்தில் முண்டம்..; இது டோனி-யின் ‘பார்டர்’

கர்நாடகாவில் தலை.. தமிழகத்தில் முண்டம்..; இது டோனி-யின் ‘பார்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்விஜய் நடிக்கும் பார்டர் படத்திற்கு முன்பே தணிக்கை செய்யப்பட்ட படம் டோனி சினிமாஸின் “பார்டர்” பலகட்ட டைட்டில் பிரச்சினைகளை முடித்து வருகிற 12 ஆம் தேதி வெளியாகிறது பார்டர் திரைப்படம்.

தமிழக, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி என்னும் பார்டரில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் இது.

தலையை கர்நாடகவிலும், முண்டத்தை தமிழகத்திலும் போட்டு போலீஸை திசை திருப்பும் கேங்ஸ்டர் திரைப்படம் பார்டர். காலம் காலமாக நடக்கும் காவிரி பிரச்சினையை திசை திருப்ப இப்படியான சம்பவங்கள் நடப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

ஆனால் உண்மையில் தலைவிரித்தாடும் கூலிப்படைகளின் கோரமுகத்தை விவரிக்கிறது படம்.

ஆதரவற்றவர்கள் நல்லவர்கள் கைகளில் கிடைத்தால் பூவோடு நாறும் மணக்கும் என்பது போல அவர்கள் வாழ்வில் ஒளியேறும், அவர்கள் தீயவர்கள் கைகளில் சிக்கினால் வாழ்க்கையே இருட்டு பக்கமாகிவிடும். காட்சிக்கு காட்சி திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.

பிரபல பேஷன் டிசைனரும், லேண்ட் டெவலப்பருமான ஒசூர் தேன்கனிக்கோட்டையை சேர்த்த டோனி கதை நாயகனாக நடித்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இவர் ரூல்நெம்பர் 4, பேராண்டி, கன்னட திரைப்படமான காடி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடன் ரஞ்சிதா, சாய்தினா, பில்லி முரளி, கன்னட நடிகர் அவினேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: செல்வகுமார் சங்கரலிங்கம்

இசை: அலென் விஜய்

எடிட்டிங்: அதுல் விஜய்

ஸ்டண்ட்: ராக்கெட் விக்ரம்.

கதை, திரைக்கதை, இயக்கம்

வெங்கடேஷ்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள “பார்டர்” திரைப்படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஷ் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறார்.

Tony cinemas in Border will release on Nov 12

ரஜினிக்கு ஜோடியாவும் என் மகள் நடிப்பாள்..; கீர்த்தி அம்மா மேனகா ஓபன் டாக்

ரஜினிக்கு ஜோடியாவும் என் மகள் நடிப்பாள்..; கீர்த்தி அம்மா மேனகா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இளம் வயதிலேயே மகாநடி படத்திற்காக சிறந்ந நடிகைக்கான தேசிய விருதை வென்றவர் இவர்.

முன்னணி நடிகையாக இருக்கும்போதே ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக கூட என் மகள் நடிப்பாள் என கீர்த்தியின் அம்மா மேனகா தெரிவித்துள்ளார்.

கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முன் (1980களில்) வெளியான நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மேனகா நடித்தவர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

முன்னணி ஊடகத்திற்கு அளித்த சமீபத்திய பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார் மேனகா.

“’அண்ணாத்த படம் ட்ராமா மாதிரி இருக்குனு சொல்றாங்க, செண்டிமெண்ட்னு வந்துட்டா கொஞ்சம் ட்ராமா மாதிரிதான் இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு புடிச்ச ஒரு படத்தை நாலு இளைஞர்களுக்கு பிடிக்காது. அதேபோல இளைஞர்களுக்கு புடிச்ச ஒரு படம் நடுத்தர வயதுக்காரங்களுக்குப் பிடிக்காது.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் மாறல’ன்னு ஒரு டயலாக் படையப்பா படத்துல வரும். அது நிஜம்தான். 70 வயதிலேயும் எனர்ஜெட்டிக்கா இருக்கார் ரஜினி

ரஜினி பொண்ணு வயசு கீர்த்திக்கு இருக்கும். அவ ரஜினிக்கு தங்கச்சியா நடிக்கலாமானு என்னிடம் கேட்டாங்க.

சினிமா ஒரு கனவுலகம். இது நடிப்புதானே?

அவர் பிராக்டிகல் லைப்ஃல தலைமுடிக்கு டை அடிக்கல. விக் வைக்கல. தான் எப்படி இருக்குமோ? அப்படியே வெளியே வர்றார்.

தன் தொழிலான சினிமாவில் நடிக்கும்போது கேரக்டருக்கு ஏத்தபடி தன்னை மாத்திக்கிறார். அவருக்கும் அது செட் ஆகுது. அவர் மனசுக்கு அவர் ஹீரோவா தெரிகின்ற வரை நடிக்கட்டும்.

இதுல மத்தவங்களுக்கு என்ன பிரச்சினை. இந்த படத்துல தங்கச்சி. அடுத்த படத்துல ஜோடியா நடிக்கக் கேட்டாலும் கீர்த்தி நடிப்பாள்’’ என்றார் மேனகா.

Keerthy Suresh mother talks about Rajinikanth

மெய்நிகர் ஆன்லைன் உலகில் முதல் இந்திய நடிகராகிறார் கமல்ஹாசன்

மெய்நிகர் ஆன்லைன் உலகில் முதல் இந்திய நடிகராகிறார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் பிறந்த நாளன்று, ∴பாண்டிக்கோ என்ற கம்பெனி துவக்கும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) இணையதள அவதாரமாகும் முதல் இந்திய நடிகராகிறார் பத்மஸ்ரீ. கமல்ஹாசன் அவர்கள்.

இந்த புதிய முயற்சியில், கமல் ஹாசன் முதன் முறையாக, லோட்டஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் கம்பெனி மூலம் ∴பாண்டிக்கோவுடன் இணைந்து தன் டிஜிட்டல் அவதாரங்களையும், NFT (Non fungible Token) சொத்துக்களையும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) பிரத்யேகமாக வெளியிடுகின்றார். இவை www.kamal.fantico.in எனும் இணைய தளத்தில் துவங்கப்படும்.

∴பாண்டிக்கோ கம்பெனி துவக்கும் ஒரு கேம் சார்ந்த மெட்டாவெர்ஸில், கமல்ஹாசனுக்கென்று தனி உலகம் இருக்கும். இதில் உலகெங்கும் இருக்கும் அவர் ரசிகர்கள் அவருடனும் அவரின் டிஜிட்டல் அவதாரங்களுடனும் அளவளாவி, அதன் நினைவாக டிஜிட்டல் டோக்கன்கள் மற்றும் நினைவு சின்னங்களையும் வாங்கலாம்.

அவருடைய மெய்நிகர் உலகின் விவரங்கள் மற்றும் மெட்டாவெர்ஸின் ஆச்சர்யங்கள் வெளியில் அறிவிக்கப்படாமல் இருந்தாலும், கம்பெனியின் டிஜிட்டல் மேடையில் முதலில் அவர் ரசிகர்களுக்காக பிரத்தேயேக NFTகள் அறிமுகப்படுத்தப்படும். தொடர்ந்து அவரின் மெய் நிகர் உலகின் ஆச்சர்யங்கள் துவங்கப்படும் என்பதே எதிர்பார்ப்பு.

தன் படங்களில் கமல்ஹாசன் அவர்கள் புதுமையை புகுத்துவதில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர் மட்டுமன்றி, என்றுமே பொழுபோக்கு உலகின் புதிய டெக்னாலஜி பயன் படுத்த முன்னிருப்பார். அதையே எதிர்கால டிஜிட்டல் உலகிலும் முன்னெடுக்கிறார் என்பது ஆச்சரியத்திற்குரியதில்லை: எதிர்பார்ப்பதுதான்…

“உருவாகி கொண்டிருக்கும் மெய்நிகர் உலகின் சாத்தியக்கூறுகள் எனக்கு உத்வேகம் தருபவை. மெட்டாவேர்ஸ் இன்று பாப்புலர் ஆகிக்கொண்டிருக்கிறது. என் அறுபது வருட வாழ்க்கை பயணத்தின் பிரதிபிம்பமாக என் டிஜிட்டல் உலகம் இருக்கும்” என்று திரு.கமல்ஹாசன் அவர்கள் கூறினார்.

தொடர்ந்து, ∴பாண்டிக்கோ கம்பெனியின் முதன்மை அதிகாரி திரு.அபயானந் சிங் பேசும் போது “எங்களுக்கு இந்த கேம் சார்ந்த மெட்டாவெர்ஸ் துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி. அதுவும், கமல்ஹாசன் போன்ற Iconனுடன் இணைந்து, இந்தியாவில் முதல் முறையாக இது போன்ற முன்னெடுப்பை எங்கள் டிஜிட்டல் மேடையில் துவக்குவது ரசிகர்களுடனான அமர்வுக்கு ஒரு புதுமையான முன் மாதிரியாக அமையும்” என்றார்.

Kamal Haassan to launch virtual avatar on metaverse by Fantico

மகேஷ்பாபு இயக்கத்தில் மாடர்ன் மங்கையாக மாறும் அனுஷ்கா

மகேஷ்பாபு இயக்கத்தில் மாடர்ன் மங்கையாக மாறும் அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7), சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் அனுஷ்காவுடனான தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்தது.

2018-ல் பாகமதியில் “அச்சமில்லா அரசி”-யாக நம்மை ஆட்கொண்டார்.

தற்போது, “அரசி” அனுஷ்கா ஷெட்டியும் யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.

அனுஷ்காவின் 48-வது (#Anushka48) படமான இந்த நவீன கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்வீட்டி (அனுஷ்காவின் செல்ல பெயர்)” என்று கூறியுள்ளது.

அனுஷ்காவின் பிறந்த நாளன்று செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாடர்ன் மங்கையாக புதிய தோற்றத்தில் இப்படத்தில் அனுஷ்கா தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூவி கிரியேஷன்ஸ், அனுஷ்கா கூட்டணியில் உருவான பாகமதி படம் நான்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றதோ, அதே போல் இப்படத்தையும் நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மகேஷ் பாபு பி இயக்கத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, அனுஷ்காவின் பிறந்தநாளான நேற்று நவம்பர் 7ஆம் தேதி திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Anushka Shetty next film announcement is here

More Articles
Follows