சூர்யா தனுஷ் & சிவகார்த்திகேயன் வழியில் விஜய் தேவரகொண்டா

சூர்யா தனுஷ் & சிவகார்த்திகேயன் வழியில் விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Deverakonda follows Suriya Dhanush Sivakarthikeyan formulaஅர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் ஆகியவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் அதன் வெற்றியால் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா.

எனவே இவரது சமீபத்திய படங்கள் நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது இவரும் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளர்.

கிங் ஆப் தி ஹில் என்ற நிறுவனத்தை தொடங்கி மீக்கு மாத்திரமே சொப்தா என்ற படத்தை தயாரிக்கிறார்.

இவரது பெல்லி சூப்புலு என்ற படத்தை இயக்கிய தருண் என்பவரை தனது முதல் தயாரிப்பில் நாயகனாக்கி அழகு பார்க்கிறார்.

ஷாமிர் சுல்தான் என்பவர் படத்தை இயக்கவுள்ளார்.

தமிழில் சினிமாவின் இளம் நாயகர்களான சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay Deverakonda follows Suriya Dhanush Sivakarthikeyan formula

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.. ரஜினி டிவி.; கமல் டிவி

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.. ரஜினி டிவி.; கமல் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Kamal going to launch TV channels for their political parties ஒரு கட்சி தொடங்கினால் கூடவே ஒரு டிவி சேனலையும் தொடங்குவது தான் தற்போதைய டிரெண்ட்.

திமுக கட்சிக்கு சொந்தமாக கலைஞர் டிவி, இசையருவி, கலைஞர் செய்திகள் முதல் ஏகப்பட்ட சேனல்கள் உள்ளன. இவையில்லாமல் சன் டிவியின் பல சேனல்களும் இவர்களது குடும்ப சேனல்கள்தான்.

அதிமுக.வுக்கு ஜெ.நியூஸ் சேனல் உள்ளது. பா.ம. கட்சிக்கு மக்கள் தொலைக்காட்சி உள்ளது. ஐஏகே. கட்சிக்கு வேந்தர் டிவி உள்ளது.

விஜயகாந்துக்கு கேப்டன் டிவி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மெகா டிவி, பிஜேபி.க்கு லோட்டஸ் டிவி உள்ளது.

இந்த நிலையில் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார் ரஜினி. இவரது பெயரில் இப்போதே ஒரு டிவி சேனல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கமலும் அவரது மக்கள் நீதி மய்யம் சார்பாக ஒரு புதிய சேனலை தொடங்கவுள்ளாராம்.

Rajini and Kamal going to launch TV channels for their political parties

ராஜமௌலி படத்தில் நடித்தால் அடுத்த படம் ஓடாதாம்.; இதை படிங்க

ராஜமௌலி படத்தில் நடித்தால் அடுத்த படம் ஓடாதாம்.; இதை படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SS Rajamouli movie heroes and their flop movies listபாகுபலி நாயகன் என இந்திய முழுக்க அறியப்பட்டவர் பிரபாஸ்.

பாகுபலி படத்திற்கு இவரது நடிப்பில் ரூ. 350 கோடியில் உருவான சாஹோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை. இருந்தபோதிலும் 2 நாட்களில் ரூ. 200 கோடி வசூலை அள்ளியுள்ளது.

இந்த நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த பின் அந்த நாயகனின் அடுத்த படம் (வேறு இயக்குனர்கள் இயக்கிய படங்கள்) ஓடாது என பெரிய சென்டிமெண்ட் லிஸ்ட்டை தருகிறார்கள் தெலுங்கு சினிமா உலகினர்.

அவைதான் இது…

ராஜமௌலி இயக்கத்தில்…

ஜுனியர் என்டிஆர் நடித்த ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ பெரிய வெற்றி. அடுத்து ஜுனியர் என்டிஆர் நடித்த ‘சுபு’ தோல்வி.

மீண்டும் ஜுனியர் என்டிஆர் நடித்த ‘சிம்மாத்ரி’ வெற்றி, ஆந்திரவாலா தோல்வி,

நிதின் நடித்த ‘சை’ வெற்றி. பின்னர் ‘அல்லரி புல்லொடு’ தோல்வி.

பிரபாஸ் நடித்த ‘சத்ரபதி’ வெற்றி. பின்னர் ‘பௌர்ணமி’ தோல்வி,

ரவி தேஜா – ‘விக்ரமார்குடு’ வெற்றி. பின்னர் ‘காதர்நாக்’ தோல்வி,

ஜுனியர் என்டிஆர் – ‘எமதொங்கா’ வெற்றி. பின்னர் ‘கன்த்ரி’ தோல்வி,

ராம்சரண் – ‘மகதீரா’ வெற்றி. பின்னர் ‘ஆரஞ்ச்’ தோல்வி,

சுனில் – ‘மரியாதை ராமண்ணா’ வெற்றி. பின்னர் ‘கேஎஸ்டி அப்பளராஜு’ தோல்வி.

நானி – ‘ஈகா’ வெற்றி. பின்னர் ‘ஏதோ வெள்ளிபோயிந்தி மனசு’ தோல்வி,

பிரபாஸ் – ‘பாகுபலி 1, 2’ வெற்றி பின்னர் இப்போது வந்துள்ள ‘சாஹோ’ தோல்வி.

SS Rajamouli movie heroes and their flop movies list

தீபாவளி ரேஸ்: விஜய்யை முந்தும் விஜய்சேதுபதி; கார்த்தி கன்பார்ம்

தீபாவளி ரேஸ்: விஜய்யை முந்தும் விஜய்சேதுபதி; கார்த்தி கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanga Thamizhan may preponed from Diwali releaseஇந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள பிகில், விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

எனவே தீபாவளிக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதிலிருந்து சங்கத்தமிழன் படம் விலகும் எனத் தெரிகிறது.

அதாவது ஒரு வாரத்திற்கு முன்பே படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பகிறது.

சிட்டியில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை இப்போதே பிகில் படமும் கைதி படமும் கைப்பற்றிவிட்டதால் சங்கத்தமிழனுக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.

Sanga Thamizhan may preponed from Diwali release

‘வெறித்தனம்’ பாடல்: மீண்டும் ARR மீது வெறுப்பான விஜய் ரசிகர்கள்

‘வெறித்தனம்’ பாடல்: மீண்டும் ARR மீது வெறுப்பான விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans were totally upset with Verithanam song in Bigilவிஜய் நடிப்பில் இதுவரை 62படங்களில் நடித்து விட்டார். அவரது உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்களுக்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தற்போது உருவாகி வரும் பிகில் படத்திற்கும் இவரே இசையமைப்பாளர்.

இந்த நிலையில் சிங்கப்பெண்ணே என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை ஏஆர். ரஹ்மான் பாடியிருந்தார்.

பெண்களை போற்றும் வகையில் இருந்த இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வெறித்தனம் என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லையாம். ஆனால் வெளியில் சொல்ல முடியாமல் சூப்பர்… வெறித்தனம் என வெளியில் சொல்லி வருகின்றனர்.

இதற்கு முன் வெளியான விஜய்யின் சர்கார் படத்திற்கும் ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதில் இடம்பெற்ற சிம்டாக்காரன் என்ற பாடலும் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

மோசமான நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றது. தற்போது இதே நிலைதான் வெறித்தனம் பாடலுக்கும் ஏற்பட்டுள்ளது. நிறைய மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் நொந்து போய் இருக்கிறார்களாம்.

ஏஜிஎஸ் தயாரித்து வரும் பிகில் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

Vijay fans were totally upset with Verithanam song in Bigil

‘நீங்க ப்ளைட் வாங்கனும்..’ மகாமுனி இயக்குனருக்கு ஆர்யா அட்வைஸ்

‘நீங்க ப்ளைட் வாங்கனும்..’ மகாமுனி இயக்குனருக்கு ஆர்யா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya talks about his working experience of Magamuni ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

நடிகை ரோகிணி பேசும்போது,

“என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார்கள். அந்த போட்டோ ஷூட்டிற்குஇரண்டுவிதமான லுக்குகளை மேற்கொண்டார்கள். ஒரு போட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெனக்கெடுகிறார்களே என்று வியந்தேன்.

நான் இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான நடிகர். ஒரு காட்சியை நான்குவிதமான வித்தியாசமான கோணத்தில்படமாக்கினார்கள்.

அந்தக் காட்சிகளில் நான்கு முறையும் ஆர்யா கண்ணீர்விட்டு அழுதார். அவருடைய இந்த அர்ப்பணிப்புத் தன்மையுடனான நடிப்பு என்னை மிகவும்கவர்ந்தது.

இயக்குநர் சாந்தகுமார் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அனைத்தையும் செய்தார். இப்படிப்பட்ட ஒரு இயக்குநரைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கிடைத்தது, அவருக்கு பெரும் பாக்கியம்தான்…” என்றார்.

ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசும்போது,

“இது எனது முதல் படம். இப்படிப்பட்ட ஒரு படம் என் முதல் படமாக அமைந்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்எனது நன்றிகள்.

57 நாட்களில் 47 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தது. இது எனது உதவியாளர்களின் உதவியால்தான் சாத்தியமானது…” என்றார்.

நடிகை மஹிமா நம்பியார் பேசும்போது,

“இந்த மகாமுனி படத்தில் ஒரு பங்காக நானும் இருந்ததை நினைத்துப் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை விட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் நிச்சயமாகவருத்தப்பட்டிருப்பேன்.

நானே என்னை இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நினைத்து பார்த்ததில்லை.

ஆனால், சாந்தகுமார் ஸார் அப்படியொரு கதாபாத்திரத்தைஎனக்கு வழங்கியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. இது என்னுடைய கேரியரில் மிகச் சிறந்த கதாப்பாத்திரங்களில் ஒன்று.

இந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் வேலை செய்வது எனக்கு மிகவும்வசதியாக இருந்தது.

இந்தப் படத்திற்கு டப்பிங் பேசும் சமயத்தில் ஜெயசுதா மேடம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் ஆர்யா எதைப் பற்றியும் கவலைப்படாத மனிதராகத்தான் எனக்குத் தெரிந்தார்.

ஆனால் இந்தப் படத்தில் அவருடன் நடித்த பின்பு அவர் ஒரு கடின, அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய நடிகர்என்பது தெரிந்தது.

ஒரு காட்சியைப் படமாக்கும்போது 10 நிமிடங்களுக்கு முன்பாக நான் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஆர்யா அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தயாராக நிற்பார்.

இந்தப் படத்தினால் அவருக்குக் கிடைக்கப் போகும் அனைத்து பாராட்டுக்களுக்கும் தகுதியானவர் ஆர்யா. இயக்குநர் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள்.

நடிகர் ஆர்யா பேசும்போது,

“இந்தப் படத்தின் டீஸருக்கும், காட்சி முன்னோட்டத்திற்கும் கிடைத்த ரெஸ்பான்ஸ், எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

சாந்தகுமாரிடம் ‘இந்தப் படத்தின் கதையைத் தயார் செய்ய எதுக்கு எட்டு வருஷம் எடுத்துக்கிட்டீங்க?’ என்று கேட்டேன். அதுக்கு அவர் ‘ஞானவேல்ராஜா ஸார்கிட்ட அட்வான்ஸ் வாங்கி அதுல ஒரு பைக் வாங்கினேன்.

அந்த பைக்லயே இந்தியாவைச் சுத்திப் பார்க்க போயிட்டேன். இப்போ அடுத்து சைக்கிளும் வாங்கப் போறேன்’னாரு.. ‘ஒரு பைக் வாங்கியே அடுத்தப் படத்தைத் தயார் செய்ய எட்டு வருஷமாச்சுன்னா.. அடுத்து சைக்கிள் வாங்கினா என்னா ஆகும்..

நீங்க அடுத்து பிளைட்டுதான் ஸார் வாங்கணும்’னு சொன்னேன்.

இந்தப் படத்தின் முழுக் கதையையும் சாந்தகுமார் என்னிடம் சொல்லவில்லை. முதலில் ‘மகா’ கதாபாத்திரத்தின் பகுதியை மட்டுமே சொன்னார்.

பிறகு ‘முனி’ கதாபாத்திரத்தை கடைசியாக உங்களிடமிருந்து வெளிக் கொண்டு வருகிறேன் என்று சொன்னார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

இயக்குநர் சாந்தகுமார் மிகுந்த அர்ப்பணிப்புத் தன்மையுடைய இயக்குநர். அது எப்படியெனில் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அத்தனை பேருக்குமே ஒரு வரலாற்றையே தயார் செய்து வைத்திருந்தார்.

நாயகிகள் இந்துஜா, மஹிமா மற்றும் சக நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் அது எனக்கும் ஒரு எனர்ஜியை அளித்தது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும் மிகவும் அருமையாக பணியாற்றியிருக்கிறார்.

இப்படியொரு வாய்ப்பைக் கொடுத்தமைக்காக இயக்குநர் சாந்தகுமார் ஸாருக்கு எனது நன்றிகள்.

இயக்குநர் சாந்தகுமார் பேசும்போது,

“ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும்போது எவ்வளவு நேரம் வேலை செய்தோம்ன்றது எல்லாருக்குமே தெரியும். ஆனால் இது மாதிரியான ஸ்கிரிப்ட் வேலை செய்யும்போது அப்படியிருக்க முடியாது.

இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும்போது எனது தனிப்பட்ட வாழ்க்கையும் அதில் கலந்திருக்கிறது. இதனால் எனது மனைவிக்கும், தயாரிப்பாளருக்கும் மட்டும்தான் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தெரியும்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸார்கிட்ட அவ்வப்போது ஸ்கிரிப்ட் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

இந்த நிறுவனத்தை நான் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் அது ஞானவேல்ராஜா ஸாருக்காகத்தான். அவர் எந்தவிதமான அழுத்த்த்தையும் எனக்குக் கொடுக்கவில்லை.

அவர் அவ்வப்போது ‘ஸ்கிரிப்ட் வேலை முடிஞ்சிருச்சா?’ என்று கேட்பார். நான் ‘இல்லை’ என்பேன். அவர் அதற்கு வருத்தமும் பட்டதில்லை.

அவர் என்னிடம் காட்டிய பொறுமையும் புரிதலும் என்னை நெகிழ வைத்தது. எனக்குக் கிடைத்த இந்தக் குழு மிகச் சிறந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

Arya talks about his working experience of Magamuni

More Articles
Follows