ரஞ்சித் வெற்றிமாறன் லோகேஷ் ஆகியோருக்காக காத்திருக்கும் விஜய் தேவரகொண்டா

ரஞ்சித் வெற்றிமாறன் லோகேஷ் ஆகியோருக்காக காத்திருக்கும் விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பான் இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் லைகர் (Saala Crossbreed).

பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் 25 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் பதிப்பை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் தனது Studio 9 நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார்.

பட வெளியீட்டை ஒட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் ஆகியோர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் விநியோகஸ்தர் R K சுரேஷ் பேசியதாவது…

விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய இந்த படத்தினை நான் வெளியிடுவது பெரு மகிழ்ச்சி.

இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும். இனி விஜய் தேவரகொண்டா தொடர்ந்து தமிழ்ப்படங்கள் செய்வார் என நம்புகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

பின்னர் விஜய் தேவரகொண்டா நாயகி அனன்யா பாண்டேவிற்கு தமிழில் பேச கற்றுக்கொடுத்ததாக கூறினார்.

நாயகி அனன்யா பாண்டே பேசியதாவது…

நான் உங்களை காதலிக்கிறேன். உங்களுக்காக இந்த வார்த்தைகளை தமிழில் சொல்ல கற்றுக்கொண்டு வந்தேன். இந்தப்படம் மிகப்பிரமாண்டமான மாஸான திரைப்படம். இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். இப்படியானதொரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. இத்திரைப்படம் மிகச்சிறப்பான அனுபவத்தை தந்தது. இப்படத்தை பார்த்து ரசியுங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது…

தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. நோட்டா படத்தின் போது என் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது.

இந்தப்படம் ஒரு அற்புதமான ஆக்சன் படம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆக்சன் ரசிகர்களையும் கவரும் வண்ணம் படம் உருவாகியுள்ளது. நான் தமிழ் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது. பா ரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் போன்றோருடன் உரையாடி இருக்கிறேன். வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.

லைகர் பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். இது மிக அற்புதமான அனுபவத்தை தரும் நன்றி.

விஜய் தேவர்கொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர், சார்மி கவுரின் லைகர் (Saala Crossbreed) திரைப்படத்தின் “அக்டி பக்கடி” பாடல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்கிறது.

பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறார், தாய்லாந்தைச் சேர்ந்த கிச்சா ஸ்டண்ட் பணிகளை கவனித்து கொள்கிறார்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த பான் இந்தியா திரைப்படம் 25 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விசு ரெட்டி, அலி, மகரந்த் தேஷ் பாண்டே மற்றும் கெட்அப் ஸ்ரீனு.

தொழில்நுட்பக் குழு:

இயக்குனர்: பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா
பேனர்கள்: Puri Connects மற்றும் Dharma Productions
ஒளிப்பதிவு: விஷ்ணு சர்மா
கலை இயக்குனர்: ஜானி ஷேக் பாஷா
எடிட்டர்: ஜுனைத் சித்திக்
ஸ்டண்ட் இயக்குனர்: கிச்சா

விஜய் தேவரகொண்டா

Vijay Devarakonda talks about Tamil directors in Liger event

ரஜினி வீட்டில் தேசியக்கொடி.; விஜய்யும் நானும் பிரிந்து விட்டோம்.; சிம்புவுடன் இணைவேன் – சீமான்

ரஜினி வீட்டில் தேசியக்கொடி.; விஜய்யும் நானும் பிரிந்து விட்டோம்.; சிம்புவுடன் இணைவேன் – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கோபிநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜிவி 2’.

இது ‘ஜிவி 1’ முதல் பாகத்தில் இரண்டாம் பதிப்பாகும்.

இந்த படத்தில் வெற்றி அஸ்வின் கருணாகரன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது சிறப்பு விருந்தினர்களாக சீமான் தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்பின் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினார் சீமான்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது விஜய்யின் பகலவன் படத்தை இயக்குவது எப்போது? என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு சீமான் பதில் அளிக்கையில்…

” சில காரணங்களால் பகலவன் படம் படத்தில் விஜய் நடிக்கவில்லை. இனி அது நடக்காது.

நானும் விஜய்யும் பிரிந்து விட்டோம். எனவே அதில் நடிப்பார். சிம்புவை விரைவில் இயக்க உள்ளேன்.

ரஜினி விஜய் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்…

“8 ஆண்டுகளாக பாஜகவுக்கு இல்லாத தேசப்பற்று இப்போது மட்டும் வர காரணம் என்ன?

ஒருவேளை ரஜினி விஜய் அவர்கள் வீட்டில் தேசிய கொடி ஏற்றாவிட்டால் அவர்களுக்கு தேசப்பற்று இல்லையா? என்றும் கேட்பார்கள்..” என தெரிவித்தார் சீமான்.

Seeman talks about Rajini Vijay Simbu and National flag

தேசிய விருது வென்றவர்களை கௌரவித்தது நடிகர் சங்கம்.; ரூ.25 லட்சம் வழங்கியது ‘விருமன்’ படக்குழு

தேசிய விருது வென்றவர்களை கௌரவித்தது நடிகர் சங்கம்.; ரூ.25 லட்சம் வழங்கியது ‘விருமன்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6- வது செயற்குழு கூட்டம் சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில்,
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான :
M.நாசர் (தலைவர்),
S.I.கார்த்தி (பொருளாளர்), துணைத்தலைவர்களான பூச்சி முருகன்,
கருணாஸ்,

மற்றும் செயற்குழு உறுப்பினர்களான :

ராஜேஷ்,
சச்சு,
மனோபாலா,
பசுபதி,
லதா சேதுபதி,
விக்னேஷ்,
சோனியா,
நந்தா.S.D,
சரவணன்.V,
பிரேம்குமார்.S,
ஸ்ரீனிவாசா ரெட்டி (எ) ஸ்ரீமன்,
M.A.பிரகாஷ்,
வாசுதேவன்.V.K ஹேமச்சந்திரன்.
ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து நடிகர் சங்க அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், மானேஜிங் டிரசுரர் எம்.நாசர்,
டிரசுரர் S.I.கார்த்தி
மற்றும் குழு உறுப்பினர்கள் பூச்சிSமுருகன்,
லதா,
சச்சு(எ)சரஸ்வதி,
ராஜேஷ்,
ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதன் பிறகு…

2020 ஆம் ஆண்டிற்கான
தேசிய விருது பெறும் கலைஞர்கள்
சிறந்த நடிகர் – சூர்யா (சூரரை போற்று)
சிறந்த திரைப்படம் – சூரரைபோற்று -தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,

சிறந்த திரைக்கதை ஆசிரியர் – சுதா கொங்கரா (சூரரை போற்று),
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று),
சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று),

சிறந்த தமிழ் திரைப்படம்- சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்(இயக்குநர் சாய்வஸந்த்),
சிறந்த படத்தொகுப்பாளர் –
ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்),
சிறந்த துணை நடிகை – லட்சுமிப்ரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்),
சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த வசனகர்த்தா – திரு.மடோன் அஸ்வின் (மண்டேலா),

சிறந்த ஆவணப்படம் இயக்குனர் – திரு.R.V. ரமணி( பானு )
அழைக்கப்பட்டார்கள்.
அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்து, நினைவு சின்னம் வழங்கி கவிரவிக்கப்பட்டார்கள்.

விருது பெற்ற அனைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கியது விருமன் படக்குழு.

விருமன் பட நடிகர் கார்த்தி, விருமன் பட தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, இணை தயாரிப்பாளர் 2D ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் இணைந்து நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.25 லட்சம் காசோலை வழங்கினர்.

சூர்யா

National Award winners honoured by Nadigar Sangam Viruman team presented 25 Lakhs to Association

வசூல் வேட்டையாடும் ‘விருமன்’.; சந்தோஷத்தில் சக்திவேலன் செய்த மரியாதை

வசூல் வேட்டையாடும் ‘விருமன்’.; சந்தோஷத்தில் சக்திவேலன் செய்த மரியாதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையா இயக்கத்தில் யுவன் இசையில் கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் நேற்று ஆகஸ்ட் 12-ல் ரிலீசானது.

இந்த படத்தில் சங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமானார்.

நடிகர் சூர்யா தயாரித்த இந்த படத்தில் கார்த்தி உடன் பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சிங்கம்புலி, வையாபுரி, ஆர் கே சுரேஷ், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், மனோஜ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த படம் முதல் நாளில் மட்டும் ரூபாய் 8.5 கோடி அளவில் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு கூடுதல் தகவல் வெளியானது.

இதனால் உற்சாகமடைந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குவர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.

கார்த்தி முத்தையா கூட்டணியில் உருவான ‘விருமன்’ வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருமன்

Viruman is a blockbuster

அட்லி இயக்கத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி.; அப்ப ஹீரோ.?

அட்லி இயக்கத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி.; அப்ப ஹீரோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘மாமனிதன்’.

வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘விடுதலை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இத்துடன் அட்லி இயக்கத்தில் உருவாகும் ஹிந்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

‘ஜவான்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஷாருக்கான் நாயகனாக நமிக்க நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே தமிழில் நயன்தாராவுடன் ‘நானும் ரவுடிதான்’ & ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புஷ்பா 2 உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என வெளிவரும் தகவல்கள் வெறும் வதந்தி தான் என தெரியவந்துள்ளது

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் VJS 46, மைக்கல், Merry Christmas, மாநகரம் ஹிந்தி ரீமேக் & Farzi என்ற ஹிந்தி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி என்பது கவனிக்கத்தக்கது.

ஷாருக்கான்

Vijay Sethupathi will be playing negative role in Atlees direction

சினிமாவை அரசாங்கமே தயாரிக்கனும்.; கக்கூஸ்ல உட்கார்ந்தா அரசியல் பேச முடியும்.?; சீறும் சீமான்

சினிமாவை அரசாங்கமே தயாரிக்கனும்.; கக்கூஸ்ல உட்கார்ந்தா அரசியல் பேச முடியும்.?; சீறும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது..

முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர்.

ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹமத், விஜே முபாசிர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பிராமையா, சீனுராமசாமி ஆகியோருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டார். ஜீவி-2 படத்தின் இசைத்தட்டை சீமான் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது…

‘தம்பி ராமையா இங்கு பேசியது போல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்” என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசும்போது, “ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களை பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது.

தம்பி சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக விட்டாலும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தெலுங்கில் வெளியான கொண்டபெல்லம் என்கிற படத்தை ஓடிடி தளத்தில் தான் பார்த்தேன்.. அவ்வளவு நேர்த்தியான படம் தியேட்டர்களில் வெளியானதா என்று கூட தெரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தம்பி சுரேஷ் காமாட்சி சினிமா மீது தீராத பற்று கொண்டவன். பணத்தை சம்பாதித்து வைத்திருக்கிறானோ இல்லையோ நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருக்கிறான். அதில்தான் அவனது வண்டி ஓடுகிறது என்று நினைக்கிறேன். சிறிய முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்களில் இடம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் வெள்ளப்பாண்டி, தன் மகன் என அறிமுகப்படுத்தாமல் ஒரு தகுதியான கலைஞனை தான் அறிமுகம் செய்திருக்கிறார்.

விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர்.

ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றன. சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப் படத்தையும் தயாரிக்கக் கூடாது.. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும்.. அந்த நாளும் வரத்தான் போகிறது.o

எல்லோரும் அரசியல் பேச வேண்டும். மருத்துவர் பேச கூடாது.. அவர் பேச கூடாது. இவர் பேச கூடாது என்று சொல்வது ஏன்.? கக்கூஸ்ல உட்கார்ந்தா அரசியல் பேச முடியும்.” என்று ஆவேசமாக பேசினார் சீமான்.

*நடிகர்கள்* ; வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகினி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு மற்றும் பலர்

*தொழில்நுட்ப கலைஞர்கள்*

தயாரிப்பு ; வி ஹவுஸ் புரொடக்சன் – சுரேஷ் காமாட்சி

இயக்கம் ; வி.ஜே.கோபிநாத்

இசை ; கே.எஸ்.சுந்தரமூர்த்தி

ஒளிப்பதிவாளர் ; பிரவீண் குமார்

படத்தொகுப்பு ; பிரவீண் கே.எல்

சண்டை பயிற்சியாளர் ; சுதேஷ்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

சீமான்

Seeman controversy speech at Jiivi 2 audio launch

More Articles
Follows