தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக உள்ள படம் “நோட்டா”.
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள் ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு வசனத்தை தாம் எழுதியதாகவும், ஆனால் அண்மையில் வெளியான டீசரில் வசனம் என்ற இடத்தில் வேறு ஒருவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், வசனகர்த்தா ஷசாங் வெண்ணிலகண்டி என்பவர் புகார் கூறியுள்ளார்.
மேலும் ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி தனக்கு சேர வேண்டிய பணத்தையும் கொடுக்கவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
Dialogue writer files complaint against Nota producer Gnanavel Raja