தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமா உலகில் இளைஞர்களுக்கு பிடித்த நாயகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா.
அர்ஜீன் ரெட்டி மற்றும் நோட்டா உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கில் இவர் படு பிரபலம். இவரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இவர் நடிக்கும் ‘தொரசானி’ என்ற படம் வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாகிறது. இதில் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தின் டீசர், டிரைலரை பலரும் பாராட்டி வந்தனர். ஆனால் விஜய் மட்டும் பாராட்ட இல்லை.
இதனிடையில் தொரசானி படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா கலந்துக் கொண்டு தன் தம்பியுடன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தான் பேசாமல் இருப்பது ஏன்? என்ற உண்மையை ரசிகர்களிடையே தெரிவித்தார்.
அதாவது அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்தாராம் ஆனந்த். அதை விடுத்து சினிமாவில் நடிக்க போகிறேன் என தம்பி கூற அது அண்ணனுக்கு பிடிக்கவில்லையாம்.
தற்போது தன் தம்பி ஆனந்தை வாழ்த்த வந்துள்ளதாக தெரிவித்தார் விஜய் தேவரகொண்டா.
Vijay Devarakonda reveals why he stopped talking to his brother Anand