சினிமாவுக்கு வராதே… தம்பிக்கு விஜய் தேவரகொண்டா நிபந்தனை

சினிமாவுக்கு வராதே… தம்பிக்கு விஜய் தேவரகொண்டா நிபந்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Devarakonda reveals why he stopped talking to his brother Anandதெலுங்கு சினிமா உலகில் இளைஞர்களுக்கு பிடித்த நாயகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா.

அர்ஜீன் ரெட்டி மற்றும் நோட்டா உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கில் இவர் படு பிரபலம். இவரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் நடிக்கும் ‘தொரசானி’ என்ற படம் வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாகிறது. இதில் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரைலரை பலரும் பாராட்டி வந்தனர். ஆனால் விஜய் மட்டும் பாராட்ட இல்லை.

இதனிடையில் தொரசானி படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா கலந்துக் கொண்டு தன் தம்பியுடன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தான் பேசாமல் இருப்பது ஏன்? என்ற உண்மையை ரசிகர்களிடையே தெரிவித்தார்.

அதாவது அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்தாராம் ஆனந்த். அதை விடுத்து சினிமாவில் நடிக்க போகிறேன் என தம்பி கூற அது அண்ணனுக்கு பிடிக்கவில்லையாம்.

தற்போது தன் தம்பி ஆனந்தை வாழ்த்த வந்துள்ளதாக தெரிவித்தார் விஜய் தேவரகொண்டா.

Vijay Devarakonda reveals why he stopped talking to his brother Anand

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி கன்பார்ம்

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Enai Noki Paayum Thota release date is hereகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற செய்தி வந்தபோது ரசிகர்கள் ஆனந்த்ப்பட்டனர்.

ஆனால் இது செய்தி வந்து 3 ஆண்டுகள் ஆகியும் படம் முடிந்தும் இன்னும் வெளியாகவில்லை.

எனை நோக்கி பாயும் தோட்டா என்று பெயரிட்டு பர்ஸ்ட் லுக் பாடல்களும் வெளியானது.

பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பும் தடைபட்டு நீண்டுக் கொண்டே போனது.

இந்த நிலையில், தற்போது லைகா நிறுவனம் இப்படத்தை வாங்கியுள்ளதாகவும் ஜூலை 26-ந்தேதி படத்தை வெளியிடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யுஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தில் ராணா, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிக்க தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

Enai Noki Paayum Thota release date is here

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கும் முருகதாஸ்

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss will launch first look of Shanmuga Pandiyans next movieதேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் சகாப்தம், மதுரை வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனையடுத்து பல கதைகளை கேட்டு வந்துள்ளார்.

தற்போது பூபாளன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் பூஜை, கடந்த மாதம் காஞ்சிபுரம் கோயிலில் நடைபெற்ற போது பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தன் மகனை வாழ்த்தினார்.

படப்பிடிப்பு நாளை (ஜூலை 11) தொடங்கவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இதன் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார்.

AR Murugadoss will launch first look of Shanmuga Pandiyans next movie

விக்ரம்-சூர்யா படங்களில் நடிக்கனுமா.? அருமையான வாய்ப்பு இதோ…

விக்ரம்-சூர்யா படங்களில் நடிக்கனுமா.? அருமையான வாய்ப்பு இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Here is chance to act in Vikram and Suriya movies Dont Miss itஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் அண்மையில் வந்து சூப்பர் ஹிட் அடித்த படம் இமைக்கா நொடிகள்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இதில் நடிக்க ஆர்வமுள்ள ஆண், பெண் குழந்தைகள், தங்களின் புகைப்படம் மற்றும் சில நிமிடங்கள் எடுக்கப்பட்ட வீடியோ ஆகியவற்றை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம் என அறிவித்துள்ளனர்.

இதே போல் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

உங்கள் விவரங்களை www.mitro.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

அதுபோல் 63851 91483 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Here is chance to act in Vikram and Suriya movies Dont Miss it

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் அவர்கள், ‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா.? என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது ஐயா கே பாலசந்தர் அவர்கள் தான்.

வளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.

காதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா.? .

ஒரே ஒரு இயக்குனர் ஒரே ஒரு சிகரம் அது கே பாலசந்தர் மட்டுமே. அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது.’

மேலும், சிவக்குமார் பேசும்போது இயக்குனர் கே பாலசந்தர் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை ஒவ்வொன்றாக கூறினார். வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு புது அனுபவமாக அமைந்தது.

கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, ” ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது .

என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது .
அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .

அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார் . பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை . மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது .

திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்.

புன்னைகை மன்னன் படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர் .

பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதை அரசே செய்ய வேண்டும் . பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும் ” என்றார்.

இவ்விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ் தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குனர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குனர் சுரேஷ் , எம் எஸ் பாஸ்கர், ராஜேஷ், ஆர் கே செல்வமணி, ஆர் பி உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குனர் அஸ்லாம், ஐந்து கோவிலன், மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குனர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி

தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (11)ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு மிகச்சரியான வேகத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக உயரமான மற்றும் அழகான பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை தெளிவுபடுத்திய இயக்குனர் சஞ்சய் கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை நாயகிகளில் ஒருவராக பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது. இருப்பினும், நடிகை ரியா அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. இரு தரப்பிலும் எங்களால் முடிந்தவரை முயற்சித்த போதிலும், நாங்கள் இறுதியாக ஒரு பரஸ்பர முடிவை எடுத்தோம். இப்போது, பாலிவுட் நடிகை திகங்கனா சூரியவன்ஷி அவருக்கு பதிலாக நடிக்கிறார், மேலும் படப்பிடிப்பு மீண்டும் முழுவீச்சில் துவங்கும்” என்றார்.

திகங்கனாவை இந்த படத்தில் நடிக்க வைக்கும் யோசனையை தூண்டிய முக்கிய காரணத்தை பகிர்ந்து கொள்ளும் சஞ்சய் பாரதி கூறும்போது, “அவரது சமீபத்திய தெலுங்கு திரைப்படமான ஹிப்பி படத்தின் டிரைலரை பார்த்தேன். அவரின் திரை இருப்பு மற்றும் கதாபாத்திரத்தை பெரும் தாக்கத்துடன் கொடுக்க, அவர்
முன்னெடுக்க முயற்சிக்கும் விதத்தில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். விரைவில், நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதையை விவரித்தேன், அவரும் கதையால் ஈர்க்கப்பட்டார்” என்றார்.

இந்த வாரம் முதல் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பில் திகங்கனா சூர்யவன்ஷி கலந்து கொள்வதையும் உறுதிபடுத்துகிறார் இயக்குனர் சஞ்சய்.

தனுசு ராசி நேயர்களே படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை திரைப்படம். ஜோதிடத்தை நம்பும் நாயகன் ஹரிஷ் கல்யாண், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் அதை வைத்தே எடுக்கிறார் என்பதே கதை

More Articles
Follows