தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு ஒரு உருவம் கொடுத்து கோவை மாவட்டத்தில் கொரோனா தேவி கோயிலை உருவாக்கியுள்ளனர்.
அதை வணங்கி வழிப்பட்டால் கொரோனா நோய் நம்மை தாக்காது எனவும் புதிய முறையை அங்குள்ளவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து ஒருபக்கம் கொரோனா தேவி சிலையையும் மற்றொரு பக்கம் வனிதா விஜயகுமாரின் படத்தையும் இணைத்து மீம்ஸ்கள் பரவ ஆரம்பித்தன.
இந்த சிலை வனிதா முகச்சாயலில் இருப்பதால் இப்படியான மீம்ஸ்கள் உருவானது.
இதுகுறித்து முன்னணி ஊடகத்திற்கு நடிகை வனிதா விஜயகுமார் பேட்டியளித்துள்ளார்.
அவரின் பேட்டியில்…
“கொரோனா தேவியோடு என் முகத்தை பொருத்தி வந்த மீம்ஸ்களைப் பார்த்தவுடன் நானும் என் குழந்தைகளும் சிரித்தே விட்டோம்.
நான் மூக்குத்தி போடுவேன். கொரோனா தேவி அம்மனுக்கும் மூக்குத்தி போட்டதால் என்னைபோல் தெரிகிறது என நினைக்கிறேன்.
கொரோனா தேவி அம்மனை பார்க்கும்போது பலருக்கும் என்னை பார்க்கிற மாதிரி தோன்றியிருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.
இது எனக்கு கிடைத்த ஆசி. இந்த கருத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொள்கிறேன்.
நமக்கு அம்மை வந்தால் நம் ஐதீகத்தின்படி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று நம்பிக்கையோடு கூழ் ஊற்றுவார்கள்.
இப்போதுவரை மக்கள் அதை செய்து வருகின்றனர்.
இதனை மூட நம்பிக்கை என்று சொல்ல முடியாது. அதே போலத்தான் இதுவும்..
கொரோனா சூழலில் மக்கள் நம்பிக்கையோடு கொரோனா தேவி சிலையை அமைத்துள்ளனர்.”
இவ்வாறு வனிதா பேசியுள்ளார்.
Vanitha Vijayakumar responds netizens comparison with corona devi with her