தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வனிதா விஜயகுமார், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தில்லு இருந்தா போராடு’.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த படத்தை கேபி பாலா என்பவர் வெளியிடுகிறார்.
நடிகர் அஜித்தை பார்க்க வேண்டும். அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பி வந்தவர் பாலா. இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக இந்த படத்தை வெளியிடுகிறார் என பலரும் மேடையில் பேசினர்.
பின்னர் மேடையில் கே.ராஜன் பேசியதாவது…
“எம்ஜிஆர் ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பார். ரசிகர்களுடன் கூடவே பழகுவார்.
அதனாலேயே எம்ஜிஆருக்கு ஒட்டுமொத்த மக்களும் தங்கள் அன்பை கொட்டினார்கள். ஆனால் நடிகர் அஜித் ரொம்ப அதிர்ஷ்டக்காரன்.
ரசிகர் மன்றத்தை கலைத்தார்.
ரசிகர்களை சந்திப்பது இல்லை. ஒரு புகைப்படம் கூட எடுப்பதில்லை. முதல்வருக்கு பாராட்டு விழா வைத்தால் வருவதும் இல்லை. அப்படியே வந்தாலும் என்னை வற்புறுத்தி வரவழைத்தார்கள் என சொல்வார்.
அஜித் மீது ரசிகர்கள் பைத்தியமாக இருக்கிறார்கள் என்றால் அவர் மிகவும் அதிர்ஷ்டக்காரன்.
பல பேருக்கு தெரியாமலேயே உதவி செய்து கொண்டு வருகிறார். அவர் ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என வேண்டுகோளும் வைத்தார் ராஜன்.
K Rajan speech at Dhillu irundha Poradu audio launch