தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி, ரியால்ட்டி ஷோக்கள்… யூடியுப் சேனல் என பிசியாகவே வலம் வருகிறார் நடிகை வனிதா.
சில மாதங்களுக்கு முன் பீட்டர் பாலை 3வது திருமணம் செய்து கொண்டு அந்த விவகாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
வனிதா என்ற தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
யாரோ சில மர்ம நபர்கள் வனிதா பெயரில் போலி யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தகவலை ரசிகர்கள் வனிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர் யூடியூப் நிர்வாகத்திற்கு போலி சேனல் குறித்து புகார் அளித்துள்ளார்.
“இது போன்ற மோசடி சேனல்காரர்கள் மீது யூடியூப் நிர்வாகம் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரை வேண்டுமானாலும் சேனல் ஆரம்பிக்க அவர்கள் அனுமதிக்கிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்களின் பின்புலம், விவரங்கள் பற்றி சரிபார்ப்பதே இல்லை. யூடியூப் சேனல் ஆரம்பிப்பவர்களிடம் கட்டாயம் ஆதார் எண்ணை சமர்பிக்க சொல்ல வேண்டும்”, என தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புகாருடன் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் வனிதா டேக் செய்துள்ளார்.
@vanithavijayku1 For your information, somebody start Duplicate youtube channel same like yours Chennal name (V V) and using your videos….
Ty …fraudulent channels must be taken up by @YouTubeIndia very seriously..they allow anyone to start or operate a channel…background and description is never checked..#Aadhaar must be asked with kyc completed.. @narendramodi @PMOIndia @CMOTamilNadu #cybersecurity #cybercrime