தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்துக் கொண்டார் நடிகை வனிதா.
இந்த திருமணம் சர்ச்சையானது என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.
இந்த நிலையில் பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாம்.
இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை வனிதா தனது சமூக வலைத்தளத்தில்…
‘சொல்வதற்கு நிறைய இருக்கு.. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கடவுள் சக்தி மிக்கவர். நம்பிக்கையுடன் இருங்கள்.
எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கிறது. வாழ்க்கை மிகவும் கடினமானது. எல்லாம் சரியாகிவிடும். கடினமானதை ஏற்றுக்கொண்டு திரும்பக் கொடுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.