தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது.
தற்போதும் கூட அதன் ஹைலைட்ஸை அவர்கள் ஒளிபரப்பி வருவது வேறு கதை.
இந்த நிகழ்ச்சியில் ஆரவ், கஞ்சா கருப்பு, வையாபுரி, சிநேகன், நமீதா, ஓவியா, ஜீலி, பிந்தமாதவி, ரைசா, சக்தி, கணேஷ்வெங்கட்ராம், பரணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது சுந்தர்.சியின் கலகலப்பு 2 படத்தில் நடித்திருக்கிறார் வையாபுரி.
இது தொடர்பான ஒரு பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது… இந்த பிக்பாஸ் ஷோ முடிஞ்சி நாம வெளியே போன பிறகு எல்லாரும் சேர்ந்து போகாத ஊருக்கெல்லாம் போய் வரும் என்றார்கள்.
ஆனால் இதுவரை யாரும் செய்யவில்லை. அப்படியே போன் செய்தாலும் யாரும் போனை எடுப்பது இல்லை” என மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் வையாபுரி.