தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னன் மீம்ஸ்களின் தலைவன் என்று சொன்னால் அது வைகை புயல் வடிவேலு தான்.
சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு தற்போது மீண்டும் அதே பழைய வேகத்துடன் படங்களில் நடித்து வருகிறார்.
‘சந்திரமுகி 2’ படத்தில் காமெடியனாகவும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 9ல் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பான பிரமோஷன் பணிகள் ஈடுபட்டு வருகிறார் வடிவேலு.
இந்த நிலையில் அவரது சமீபத்தில் பேட்டியில் கமல்ஹாசன் குறித்து பேசியுள்ளார்.
“கமல் சார் தான் என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டவரு.. எனக்கு புதிய பரிமாணத்தை காட்டியவர். அவர நான் சாகுற வரைக்கும் மறக்கமாட்டேன்.
தேவர்மகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னர் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்க முடியாமல் போய்விட்டது.
அப்போதே கமல் சொல்லிவிட்டார் வடிவேலு இனி பிஸியாகி விடுவார். நான் அழைத்தாலும் வரமாட்டார் என சொன்னார்.
அவர் ஒரு தீர்க்கதரிசி அப்படியே நடந்துச்சு, அவருக்கு கடவுள் புடிக்காது ஆனா கடவுளுக்கு அவர புடிக்கும். அவர் ஒரு மகான்.. சினிமாவில் சிவாஜிக்கு பிறகு கமல் தான். எனக்கு இருவரின் ஆசியும் கிடைத்துவிட்டது” என தெரிவித்துள்ளார்
#KamalHaasan #Vadivelu