இனி வடிவேலு என்கிட்ட வர மாட்டார்.. கமல் ஒரு தீர்க்கதரிசி.; வடிவேலு ஓபன் டாக்

இனி வடிவேலு என்கிட்ட வர மாட்டார்.. கமல் ஒரு தீர்க்கதரிசி.; வடிவேலு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னன் மீம்ஸ்களின் தலைவன் என்று சொன்னால் அது வைகை புயல் வடிவேலு தான்.

சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு தற்போது மீண்டும் அதே பழைய வேகத்துடன் படங்களில் நடித்து வருகிறார்.

‘சந்திரமுகி 2’ படத்தில் காமெடியனாகவும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 9ல் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பான பிரமோஷன் பணிகள் ஈடுபட்டு வருகிறார் வடிவேலு.

இந்த நிலையில் அவரது சமீபத்தில் பேட்டியில் கமல்ஹாசன் குறித்து பேசியுள்ளார்.

“கமல் சார் தான் என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டவரு.. எனக்கு புதிய பரிமாணத்தை காட்டியவர். அவர நான் சாகுற வரைக்கும் மறக்கமாட்டேன்.

தேவர்மகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னர் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்க முடியாமல் போய்விட்டது.

அப்போதே கமல் சொல்லிவிட்டார் வடிவேலு இனி பிஸியாகி விடுவார். நான் அழைத்தாலும் வரமாட்டார் என சொன்னார்.

அவர் ஒரு தீர்க்கதரிசி அப்படியே நடந்துச்சு, அவருக்கு கடவுள் புடிக்காது ஆனா கடவுளுக்கு அவர புடிக்கும். அவர் ஒரு மகான்.. சினிமாவில் சிவாஜிக்கு பிறகு கமல் தான். எனக்கு இருவரின் ஆசியும் கிடைத்துவிட்டது” என தெரிவித்துள்ளார்

#KamalHaasan #Vadivelu

தீ தளபதி.. பேரை கேட்டா விசிலடி.. உங்க அதிபதி.; இணையத்தை பற்ற வைத்த விஜய் – சிம்பு

தீ தளபதி.. பேரை கேட்டா விசிலடி.. உங்க அதிபதி.; இணையத்தை பற்ற வைத்த விஜய் – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ராஷ்மிகா முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘வாரிசு’.

வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். அந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 4ம் தேதி இந்தப் படத்தில் இடம்பெற்ற 2வது பாடலான ‘தீ தளபதி…’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கிறார். விஜய் ரசிகர்களை கவரும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன.

தீ தளபதி.. பேரை கேட்டா விசிலடி.. உங்க அதிபதி… அனல் பறக்க ஒவ்வொரு வரியும் உள்ளன.. எனவே இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை.

மேலும் விஜய் சினிமா துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆன நிலையில் #30YearsOfVijayism & #3DecadesOfVIJAYism என்பதையும் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

18 வயது கனவு இப்போ நிறைவேறிடுச்சு.; பூரிப்பில் 32 வயது நடிகை பிரியா

18 வயது கனவு இப்போ நிறைவேறிடுச்சு.; பூரிப்பில் 32 வயது நடிகை பிரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் அதிகமான படங்களை கைவசம் வைத்திருப்பவர் யார் என்று கேட்டால் அது பிரியா பவானி சங்கர் தான்.

இவரது நடிப்பில் ‘இந்தியன் 2’ ‘பொம்மை’, ‘அகிலன்’, ‘ருத்ரன்’, ‘பத்து தல’, ‘டிமான்ட்டி காலனி 2’ போன்ற படங்கள் வெளியாக உள்ளன.

இவரது இவர் தனது நீண்ட நாள் பாய்பிரண்டை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தனது காதலரை சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோவுடன் வெளிப்படுத்தியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

தன் இன்ஸ்டாகிராம் பதிவில்… “18 வயதில் ஒன்றாக கடற்கரைக்குச் சென்றோம்.

இப்போது சந்திரனைப் பார்த்துக்கொண்டு, இங்கே ஒரு வீடு வேண்டும் என்ற கனவில் நாங்கள் இதேபோல் மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம்.

தற்போது அந்தக் கனவின்படி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தியை ஐஏஎஸ் படிக்க 40 லட்சம் அனுப்பிய வாலிபர் போலீசில் புகார்.?!

நடிகை கீர்த்தியை ஐஏஎஸ் படிக்க 40 லட்சம் அனுப்பிய வாலிபர் போலீசில் புகார்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் விஷால் தனுஷ் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் இளம் வயதிலேயே தேசிய விருதையும் வென்றார்.

இந்த நிலையில் இவரது பெயரில் பேஸ்புக்கில் ஒரு பெண் மோசடி செய்துள்ளார். கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை தனது டிபி ஆக வைத்துள்ள அந்த பெண் வாலிபர் ஒருவரிடம் நைசாக பேசியுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த வாலிபரிடம் நைசாக பேசி உள்ளார். நாளடைவில் இவர்கள் நெருக்கமாக பேச பேச.. “தனக்கு நடிப்பு துறையில் ஆசை இல்லை தான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் அந்த பெண்.

மேலும் ஐஏஎஸ் படிக்க பணம் தேவைப்படுகிறது என தெரிவிதக்கு இதனை நம்பி அந்த வாலிபர் முதற்கட்டமாக 10 லட்சம் அனுப்பியுள்ளார்.

மேலும் இவர்களுக்கு நாளடைவில் நெருக்கமாகி தங்களது நிர்வாண புகைப்படங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் உங்களை பார்க்க வேண்டும் உங்களிடம் பேச வேண்டும் என அந்த வாலிபர் தெரிவிக்கவே அந்த பெண் சுதாரித்து கொண்டுள்ளார்.

அப்போது அந்த வாலிபர் அனுப்பிய நிர்வாண படங்களை வெளியே விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

இதனை சொல்ல வெளியே சொல்ல பயந்து அந்த வாலிபர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் கேட்ட பணத்தை எல்லாம் கொடுத்துள்ளார். மொத்தமாக ரூபாய் 40 லட்சம் வரை அந்த வாலிபர் கொடுத்து ஏமாந்துள்ளார்.

மேலும் அந்தப் பெண் பணம் கேட்டு மிரட்டவே வேறு வழியில்லாமல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தற்போது அந்த மோசடி பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்த அவரது கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோடி கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நடிகை பணம் கேட்டுள்ளார்.. அதை உண்மை என அதை நம்பி ஒரு படித்த பட்டதாரி இன்ஜினியர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்காக சிம்பு பாடிய ‘தீ தளபதி..’ சாங்; டிரெண்டிங்கில் 3 Decades Of VIJAYism

விஜய்க்காக சிம்பு பாடிய ‘தீ தளபதி..’ சாங்; டிரெண்டிங்கில் 3 Decades Of VIJAYism

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ராஷ்மிகா முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘வாரிசு’.

வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். அந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் நாளை டிசம்பர் 4ம் தேதி இந்தப் படத்தில் இடம்பெற்ற 2வது பாடலான ‘தீ தளபதி…’ என்ற பாடல் வெளியாக உள்ளது.

இப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருக்கிறார்.

இந்த அறிவிப்பு வெளியானது முதலே விஜய் & சிம்பு ரசிகர்களும் இந்தப் பாடலை வரவேற்க தயாராக உள்ளனர்.

இப்பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் விஜய் சினிமா துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆன நிலையில் #30YearsOfVijayism & #3DecadesOfVIJAYism என்பதையும் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

#SilambarasanTR | #TheeThalapathy | #Varisu | #Vijay

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது என் கனவு அது நிறைவேறிட்டு – சந்தோஷ் ராஜன்

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது என் கனவு அது நிறைவேறிட்டு – சந்தோஷ் ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசியதாவது…

இந்தப் படத்தில் கலகலப்பான ஜீவாவை மீண்டும் பார்க்கலாம். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது எனது கனவு அது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரக்யா குஜராத்தி பெண் ஆனால் அவர் ஒரு மலையாளி என அனைவரையும் நம்ப வைத்து விட்டார்.

அந்தளவு கதாப்பாத்திரத்தில் ஒன்றி நடித்தார். காஷ்மீரா அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் மிக ஜாலியான படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

More Articles
Follows