வடிவேலு-சக்தி சிதம்பரம் இணையும் பேய் மாமா பட டூப்ளிகேட் போஸ்டர்?

வடிவேலு-சக்தி சிதம்பரம் இணையும் பேய் மாமா பட டூப்ளிகேட் போஸ்டர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu and Sakthi Chidambaram team up for Pei Mamaசினிமாவில் நடிப்பதை வடிவேலு சில காலம் வடிவேலு நிறுத்தி வைத்திருந்தாலும் அவர் இல்லாத காமெடி சேனல்களே இல்லை எனலாம்.

இன்று வரை அவர் அடித்த ஜோக்குகளே மீம்ஸ்களாக வலம் வருகின்றன.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு சக்தி சிதம்பரம் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

இது தொடர்பாக ஒரு போஸ்டரும் வெளியானது. ஆனால் அது பொய்யான போஸ்டர் என்று சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பே என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட பல படங்களில் வடிவேலுவை இயக்கியிருந்தார் சக்தி சிதம்பரம் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vadivelu and Sakthi Chidambaram team up for Pei Mama

ப்ரேக் அப் காதலிகளுடன் இணையும் சிம்பு; நேற்று நயன்தாரா; இன்று ஹன்சிகா

ப்ரேக் அப் காதலிகளுடன் இணையும் சிம்பு; நேற்று நயன்தாரா; இன்று ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Simbu and Hanshika team up in Mahaசினிமாவில் இணைந்து நடிக்கும் நடிகர் நடிகைகள் நிஜத்திலும் காதலிப்பது உண்டு. சிலரது காதல் திருமணம் வரை செல்கிறது.

அதன்பின்னர் சில திருமண உறவுகள் நீடிக்கிறது. ஆனால் பலர் விவகாரத்தும் பெறுகின்றனர்.

சிலரது காதல் திருமணத்திற்கு முன்பே விரிசலை சந்திக்கிறது. நடிகர் சிம்புவின் காதல் அப்படிதான் பல முறையானது.

முதலில் நயன்தாராவை காதலித்தார் சிம்பு. இவர்கள் வல்லவன் படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின்னர் சில பிரச்சினைகளால் இருவரும் பிரிந்தனர்.

இருந்தாலும் இது நம்ம ஆளு என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்தனர்.

அதன்பின்னர் வாலு படத்தில் நடித்த போது ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. இந்த காதலிலும் விரிசல் ஏற்பட இருவரும் பிரிந்தனர்.

தற்போது மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்து மகா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

ஸ்ரீகாந்த், ஹன்சிகா நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

‘ஷோயப்’ எனும் கேரக்டரில் நடிக்க 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

சிம்பு மற்றும் ஹன்சிகா நடிக்கும் காட்சிகள் இஸ்தான்புல் நாட்டில் படமாக்கப்பட உள்ளது.

இந்த ‘மஹா’ பட போஸ்டரில் ஹன்சிகாவின் புகை பிடிக்கும் டிசைன் வெளியானதால் கோர்ட்டில் வழக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Again Simbu and Hanshika team up in Maha

கார்த்தியை ‘கைதி’யாக மாற்றும் ‘மாநகரம்’ பட இயக்குநர்

கார்த்தியை ‘கைதி’யாக மாற்றும் ‘மாநகரம்’ பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi next movie titled Kaidhi Directed by Lokesh Kanagarajகார்த்தி நடித்து அண்மையில் வெளியான படம் தேவ். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனை தொடர்ந்து தற்போது ‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை என தெரிய வந்துள்ளது.

தற்போது வரை 80% சூட்டிங் முடிவடைந்த நிலையில், விரைவில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

இப்படத்திற்கு கைதி என தலைப்பிடப்பட உள்ளதாக தெரிகிறது.

ஓர் இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி வருகிறாராம் லோகேஷ்.

இந்த படத்தை முடித்துவிட்டு ரெமா டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி.

Karthi next movie titled Kaidhi Directed by Lokesh Kanagaraj

அம்பேத்கர் பெயரில் படம்; ரஞ்சித்துடன் இணையும் ஜோதி நிஷா

அம்பேத்கர் பெயரில் படம்; ரஞ்சித்துடன் இணையும் ஜோதி நிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith to collaborate with Bollywood director on film about BR Ambedkarபரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற பெயரில் அடுத்த படத்தை தயாரித்து வருகிறார் ரஞ்சித்.

இதனையடுத்து மும்பையைச் சேர்ந்த இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்து மற்றொரு படத்தை தயாரிக்கிறார் ரஞ்சித்.

இப்படத்தை கிரவுட் பண்டிங் மூலம் படத்தை தயாரிக்கிறார்களாம்.

இதற்காக 2 மாதங்களில் ரூ.60 லட்சத்தை திரட்ட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பா.ரஞ்சித் கூறியுள்ளதாவது…

“நீலம் ப்ரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த கூட்டணியை அறிவிக்கிறோம் ஜோதிநிஷாவின் முதல் படமான ‘பி.ஆர்.அம்பேத்கர் நவ் அண்ட் தென்’ இப்படம் வரலாறு படைக்கும். இப்படத்தில் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.

Ranjith to collaborate with Bollywood director on film about BR Ambedkar

‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா !

‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி.அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், படத்தின் இயக்குநர் கே எஸ் மணிகண்டன் .,தயாரிப்பாளர் சி. பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன் ,நாயகி டெல்லிஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர் விஜய் பாபு, சண்டை இயக்குநர் ராக்கி ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஆர் கே பழனி, பி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் உதயகுமார், எஸ்.பி.கே எண்டர்பிரைசஸ் எஸ்.பி.குமார், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வீரபாண்டின், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், மீசை ராஜேந்திரன், பிஆர்ஒ யூனியன் முன்னாள் தலைவர் டைமண்ட்பாபு, பிஆர்ஓ சங்கத்தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பி.ஆர்.ஒ ரியாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர் .

‘ஒற்றாடல் ‘படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

நடிகை வரலட்சுமிக்கு புதிய பட்டம்..; மக்கள் செல்வி ஆனார்

நடிகை வரலட்சுமிக்கு புதிய பட்டம்..; மக்கள் செல்வி ஆனார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)சரத்குமார் மகள் என்ற அடையாளத்தை தாண்டி சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகிக்கு வெயிட்டான கேரக்டர் என்றால் வரலட்சுமியை தேடியே வருகின்றனர்.

இவரது நடிப்பில் அண்மையில் சர்கார், சண்டக்கோழி2, மாரி-2 ஆகிய படங்கள் வெளியானது.

இதன் பின்னர் வெல்வெட் நகரம், நீயா-2, கன்னிராசி, காட்டேரி, அம்மாயி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.

தற்போது இவர் நடித்து வரும் புதிய படத்திற்கு டேனி என பெயரிட்டுள்ளனர்.

இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஒரு கொலைக்கு காரணமானவர்களை டேனி என்ற ஒரு நாயின் உதவியுடன் கண்டுபிடிக்கிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக்கில் நடிகை வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என்ற பட்ட கொடுத்துள்ளனர்.

ஹீரோக்கள் பெயருக்கு முன்னால் இது போன்ற பட பட்டங்களை பார்த்திருக்கிறோம்.

நடிகைகளில்சரோஜா தேவி, சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா, சினேகா போன்ற நடிகைகளுக்கு இதுபோன்ற பட்டங்கள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டம் உள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows