தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரையுலகில் பன்முக திறமைக் கொண்ட தனுஷ், தனது இயக்கத்தில் உருவான பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராகவும் ஜொலித்தார்.
அதன்பின்னர் தயாரிப்பு மற்றும் நடிப்பில் பிஸியானார் தனுஷ்.
இதனிடையில் சில நாட்களாக தனுஷ், நெல்லை பகுதியில் முகாமிட்டு தனது அடுத்த பட இயக்கத்துக்கான லொகேஷன்களை பார்த்து வந்தார்.
இந்நிலையில், தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இவரின் புதிய படத்தில் நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சான் ரோல்டன் இசையமைக்க மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.