தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 20 வருடங்களாக ஆண்டவன் ஆசைப்பட்டால்… எப்போ வருவேன்..? எப்படி வருவேன்? என பல புதிர்களை போட்டு தன் அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்து வந்தார் ரஜினிகாந்த்.
நேற்று ரசிகர்கள் சந்திப்பின் இடையே பேசும்போதும் ஆண்டவன் நினைத்தால் வருவேன் என தான் தெரிவித்து இருந்தார்.
ஆனால் நேற்றை பேச்சில் மட்டும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது.
நான் அரசியலுக்கு வந்தால் உண்மையாக இருப்பேன், நேர்மையாக நடந்துக் கொள்வேன். பணத்தாசை பிடித்தவர்களை நெருங்க விட மாட்டேன் என சூசகமாக தன் அரசியல் எண்ட்ரீயை கிட்டதட்ட உறுதி செய்திருந்தார்.
அவரது இந்த பேச்சு அரசியல்வாதிகளிடையே பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் இஷ்டம். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால், அதனை வரவேற்பேன் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் விருப்பம்.
பாஜக அவரை வைத்து தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அதை வரவேற்கும். என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் பேச்சின் மூலம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.
நல்ல கட்டமைப்போடும், நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்று பாஜக தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது’ என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.