புரோமோசன் இல்லாமல் வீணாகும் ‘தீர்க்கதரிசி’.; விழித்துக் கொள்வார்களா தயாரிப்பாளர்கள்.?!

புரோமோசன் இல்லாமல் வீணாகும் ‘தீர்க்கதரிசி’.; விழித்துக் கொள்வார்களா தயாரிப்பாளர்கள்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ், அஜ்மல், ஸ்ரீமன், துஷ்யந்த், ஜெய்வந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களின் நடித்துள்ள படம் ‘தீர்க்கதரிசி’.

இரட்டை இயக்குநர்கள் பி. ஜி. மோகன்- எல். ஆர். சுந்தரபாண்டி இணைந்து இயக்கியுள்ளனர்.

இதில் சத்யராஜ் உடன் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் இன்று மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

எனவே நேற்று மே 4ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பலரும் பாராட்டி வந்தனர்.

ஆனால் இது போன்ற ஒரு படம் வெளியே வருவதே பலருக்கும் தெரியவில்லை. முக்கியமாக மீடியாக்களில் வலம் வரும் பலருக்கே இது தெரியாமல் போனது தான் மிகவும் சோகமான விஷயம்.

ஏனென்றால் இந்த படத்திற்கு போதுமான பிரமோஷன் இல்லை என்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது.

பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்டமான படத்திற்கே மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டது. முன்னணி நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய் முதல் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி திரிஷா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு இந்த படத்தை பல்வேறு விதங்களில் ப்ரோமோஷன் செய்தனர்.

அப்படி இருக்கையில் இது போன்ற சின்ன படங்களை ப்ரமோஷன் செய்தால் மட்டுமே மக்களிடையே சென்றடையும்.

படம் நன்றாக இருந்தால் மட்டும் போதுமா.? அது ரிலீசாவது வெளியே தெரிய வேண்டாமா.? மக்களை சென்றடைய வேண்டாமா?

இனியாவது தயாரிப்பாளர்கள் உஷாராகி நிஜமான பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு படத்தை பிரமோஷன் செய்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் நிலையும் உயரும்.

நல்ல படத்திற்க்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும். இனியாவது தயாரிப்பாளர்கள் உஷாராகி விழித்துக் கொள்வது நல்லது.

Theerkkatharsi movie without promotion.; Will the producers wake up?!

#Theerkadarishi from Today

An inventive investigative thriller

@saravanaafilms @actor_ajmal @jayadusshyanth
@jaiwanth_vg #PgMohan @Lrsundarapandi1 #LaxmanDop @sathish4641 @actorsriman @ranjeetckedit @balamusician @deepandeep99 @teamaimpr https://t.co/h0sV60BJjU

ஊரே பார்க்க திரைக்கு வரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

ஊரே பார்க்க திரைக்கு வரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நீண்ட கால தாமதமான தமிழ் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

இப்படத்தில் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிப்பதாகவும், நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர்கள் மகிழ் திருமேனி மற்றும் மோகன்ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்ததாக இருந்தது நிதி பிரச்சனையால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் வருகிற மே 19-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

Vijay Sethupathi’s ‘Yaadhum Oore Yaavarum Kelir’ release on May 19

‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை.? ரிலீசுக்கு பின் வசூல் விவரங்களை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவு

‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை.? ரிலீசுக்கு பின் வசூல் விவரங்களை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசை அமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் எடிட்டர் என பன்முகத் திறமை காட்டிய விஜய் ஆண்டனி தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த படத்தை தயாரித்து இயக்கி நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

இந்த படம் விரைவில் வெளியாகியுள்ள நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் நஷ்ட ஈடாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி.

அதில்… “ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் எனக்கு எதுவும் தெரியாது. அந்த படத்தை பார்த்தது இல்லை என தெரிவித்தார்.

மேலும் வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் – 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் பட திரைக்கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை” எனவும் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர் பிறப்பித்துள்ள உத்தரவில்…

“பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி. அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Ban on the movie ‘Pichaikaran 2’? Court order to submit collection details after release

கண்ணீர் விட்டு அழுத நடிகர் அஜித்.; வைரலாகும வீடியோ.. ரசிகர்கள் கமெண்ட்

கண்ணீர் விட்டு அழுத நடிகர் அஜித்.; வைரலாகும வீடியோ.. ரசிகர்கள் கமெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு அவரின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியானது.

மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு ‘விடா முயற்சி’ என்று பெயரிட்டுள்ளனர்.

லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் தொடங்கப்படும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அஜித் நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அப்போது சில ரசிகர்கள் அவரை சந்தித்து புகைப்படம் & வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த சமயத்தில் அஜித் கண்கலங்கிய வீடியோ ஒன்று வெளியானது. இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரசிகரின் பாசத்தை கண்டு அஜித் கண்கலங்கியதாக இந்த வீடியோவை ரசிகர்கள் பதிவிட்டு உருக்கமாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

Actor Ajith, who burst into tears; Viral video.. Fans comment

Men cried when… தல 😭😭 https://t.co/DkUPjGrS3A

JUST IN சிவகார்த்திகேயன் – ஜிவி பிரகாஷ் இணையும் படத்தை தொடங்கிய கமல்

JUST IN சிவகார்த்திகேயன் – ஜிவி பிரகாஷ் இணையும் படத்தை தொடங்கிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவர் 21 வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 51வது படமாகும். இந்த படத்தை முருகதாஸின் உதவியாளரும் ரங்கூன் பட இயக்குனருமான ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்த படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைப்பது இதுவே முதன் முறையாகும் என்ற தகவல்களை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மே 5ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதற்கான விழா பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் காட்சியை தொடங்கி வைத்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன். இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#SK21 The Journey begins

#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21 #RKFIProductionNo_51

@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI

https://t.co/TLTeBaLoeJ

#SK21

#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21JoiningForces #RKFIProductionNo_51

@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh

SK 21 movie kick started today

என் 25 வருட சினிமாவில் பெரும் தோல்வி அது.; ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில்ராஜூ ஓபன் டாக்

என் 25 வருட சினிமாவில் பெரும் தோல்வி அது.; ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில்ராஜூ ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமந்தா – தேவ் மோகன் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சாகுந்தலம்’.

இதில் அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்க மணிசர்மா இசையமைத்து இருந்தார்.

குணசேகர் இயக்கி தயாரித்திருந்த இந்தப் படத்தை அவருடன் சேர்ந்து பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவும் தயாரித்திருந்தார்.

கிட்டத்தட்ட ரூ.58 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீசாகி பெரும் தோல்வி அடைந்தது.

ரூ.12 கோடியை மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த சமீபத்திய பேட்டியில்…

“நான் ‘சாகுந்தலம்’ படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ரசிகர்களுக்கு படம் பிடித்தால் சூப்பர் ஹிட்.. படம் பிடிக்காவிட்டால் பெரும் தோல்வி என நினைத்தேன். எங்கே தவறு என தெரியல.

எனக்கு 2017-ம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. நான் தயாரித்த அந்த வருட படங்கள் லாபத்தை கொடுத்தன.

என் 50 படங்களில் சில படங்கள் எனக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளன. அப்படிப் பார்க்கும்போது என் 25 ஆண்டு சினிமா பயணத்தில் ‘சாகுந்தலம்’ பெரும் தோல்வி.” எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் – ராஷ்மிகா இணைந்து நடித்த ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.

It was a big failure in my 25 years of cinema.; ‘Varisu’ Producer Dilraju Open Talk

More Articles
Follows