நடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் 2வது லுக் !

நடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் 2வது லுக் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aadhi in clapதங்கள் வேலை மீது உண்மையான காதலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம்.

ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை, படக்குழு அயராத ஒருங்கிணைப்பான உழைப்பில் மிகவிரைவாக படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் தற்போது ஆரம்பித்துள்ளது.

மேலும் இன்று டிசம்பர் 14 ஆம் தேதி ஆதியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு, படக்குழு படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டது.

Big Print Pictures நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்கும் IB கார்த்திகேயன் படம் குறித்து கூறியதாவது…

ஒரு தயாரிப்பாளராக இந்த திரைப்படம், மிக இனிமையானதொரு பயணம். நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் இப்படத்தினை தங்களது படமாக, அடையாளமாக கருதி தங்களின் முழு உழைப்பையும் தந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் இதனை தங்கள் படமாகவே காதலித்து வேலை செய்துள்ளார்கள். இயக்குநர் பிரித்வி ஆதித்யா இப்படத்தினை தனது உயிராக நேசித்து பணிபுரிந்துள்ளார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். படம் வந்திருக்கும் விதத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். ஆதி இப்படத்திற்காக அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை தந்துள்ளார். ஒரு நிஜ அத்லெட் போலவே அவர் மாறிவிட்டார்.

மேலும் ஆகான்ஷா சிங், கிரிஷா குருப் இருவரும் தங்களது அற்புதமான பங்களிப்பை தந்துள்ளார்கள். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இசைஞானி இளையராஜா படத்தின் விஷிவல்களுக்கு உயிர்ப்பான இசையை தரவுள்ளார். ஆதியின் பிறந்த நாளான இன்று படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.

புதுமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா கூறியதாவது…

“கிளாப்” அத்லெட் ஸ்போர்ட்ஸ் வகை விளையாட்டை அழுத்தமாக சொல்லும் முதல் படமாக இருக்கும். இந்த வகை படம் இங்கே புதிதாக இருக்கும்.

படத்தின் பெரும்பகுதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களாக விளங்கும் நாசர், பிரகாஷ் ராஜ், முனீஸ்காந்த், மைம் கோபி ஆகியோருடன் மேலும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். “ஜீவி” படப்புகழ் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகுல் படத்தொகுப்பு செய்ய, வைரபாலன் கலை இயக்கம் செய்துள்ளார்

Big Print Pictures நிறுவனம் சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தினை தயாரிக்க, P பிரபா, பிரேம், G. மனோஜ், G. ஶ்ரீ ஹர்ஷா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

தர்பார் விழாவில் சர்ச்சை பேச்சு; கமலை சந்தித்தார் லாரன்ஸ்

தர்பார் விழாவில் சர்ச்சை பேச்சு; கமலை சந்தித்தார் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava lawrence and kamal haasanரஜினியின் தர்பார் இசை விழாவில்… தன் சிறு வயதில் கமல் பட போஸ்டர் மீது சாணி அடித்ததாக பேசினார் லாரன்ஸ். இது சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் நடைபெற்ற ரஜினி பிறந்த நாள் விழாவிலும் இதற்கு விளக்கமளித்தார் லாரன்ஸ்.

இந்த நிலையில் கமலை சந்தித்துள்ளார்..

வணக்கம்!

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன்.

எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திரு.கமல் ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார்.

அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

– ராகவா லாரன்ஸ்.

“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aalambanaஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே அப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம் அப்படத்தின் கதையம்சம் பேண்டஸி வகையைச் சார்ந்தது என்பதால்.

பிரம்மிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் பிரம்மாண்டமாக தயாராகிறது.

விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதிநாயர் நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும் வைபவ் கரியரில் இது மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது. படத்தில் முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். நடிகர் பாண்டியராஜன் முரளிசர்மா ஆகியோர் வெயிட் கேரக்டர்களில் நடிக்க, வேதாளம் படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.

மிக வித்தியாசமான இந்தக்கதை களத்தில் பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது. சமீபத்தில் வெளியான கோமாளி படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தெறிக்கவிட்ட ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். நெடுநல்வாடை படத்தில் கிராமத்தின் அழகை துளியும் குறையாமல் தன் கேமராவிற்குள் கொண்டு வந்த வினோத் ராமசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ராட்சசனில் தன் இமலாய உழைப்பைக் கொடுத்த எடிட்டர் ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். மாஸான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் கெய்ன் ஸ்டண்ட் பொறுப்பை கவனிக்க, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.

படத்தில் பங்குபெறும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படம் தாங்கி நிற்கும் கதையம்சம் அனைத்துமே ஈர்க்கக்கூடியளவில் இருக்கும் ஆலம்பனா படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது.

பூஜையில் ஹீரோ வைபவ், நாயகி பார்வதிநாயர், இயக்குநர் பார்.கே விஜய் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார், முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களின் இயக்குநர் ராம்குமார், குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களின் இயக்குநர் கல்யாண் பலூன் படத்தின் இயக்குநர் சினிஸ், டோரா படத்தின் இயக்குநர் தாஸ்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

காந்தி & அம்பேத்கர் பற்றி ரஜினி டயலாக்; சினிமா பலனை அடைந்ததாக ரஞ்சித் பேச்சு

காந்தி & அம்பேத்கர் பற்றி ரஜினி டயலாக்; சினிமா பலனை அடைந்ததாக ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith talks about Rajinis dialogue in Gundu Success meetநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் கடந்த 6-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தின் நன்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரவிக்குமார், ஸ்ரீகணேஷ், கவிஞர் அறிவுமதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் பா.ரஞ்சித் பேசும்போது, ‘படம் எடுக்கணும் படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை, காலேஜ் படிக்கிற வரைக்கும். நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். “சில்ட்ரென் ஆப் ஹெவன்” போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. என்னை அழ வைத்த படங்கள் தான் நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளை படமாக பதிவுசெய்யத் தூண்டியது.

நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னை தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன். புத்தகங்கள் வாசிக்கிறது பிரச்சனையாக இருந்த காலத்தில்தான் நான் வந்தேன்.

தாஸ்தாவஸ்கி நாவலைப் படிக்கும் போது ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறைய பேர்களுக்கு பிரச்சனை இருந்தது.

அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாத் தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன். மாற்று சினிமாவிற்கு மக்களிடம் இருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

ரஜினி சாரை படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போடாததுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு” என்று பேசியது நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன்.

“பரியேறும் பெருமாள்” படம் எடுக்கும் போது பெரிய பயம் இருந்தது. அப்படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்தார்கள். எனக்கு கைகால்கள் உதறத் துவங்கியது. அந்தப்படம் தந்த உற்சாகம் பெரியது. அந்தப்படம் கமர்சியலாகவும் பெரிய வெற்றிபெற்றது.

அந்தப்படம் தான் “குண்டு” படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது. அதியன் உழைப்பு எனக்குத் தெரியும். இந்த டீம் திறமைமிக்க மனிதர்கள். தகுதி திறமை என்பதை இங்கு கவனிக்கும் விதத்தில் தான் பிரச்சனை இருக்கிறது. இந்தப்படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடி விட்டார்கள்.

சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம் ஒரு விசயத்தை ஈசியாக கடத்த முடியும் என்றால் அது சினிமாவில் தான் சாத்தியம். அப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டிருக்கும்” என்றார்.

Ranjith talks about Rajinis dialogue in Gundu Success meet

பாலிடிக்ஸிலும் சூப்பர் ஸ்டாராக வருவார் ரஜினி…- துரை சுதாகர் வாழ்த்து

பாலிடிக்ஸிலும் சூப்பர் ஸ்டாராக வருவார் ரஜினி…- துரை சுதாகர் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Public Sudhakar wishes Rajinikanth and his political entryசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 12ஆம் தேதி தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு இந்தியாவே வாழ்த்து கூறியது என்னுமளவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில் ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் அவர்களும் ரஜினிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில்… “இந்திய சினிமாவையும் தாண்டி உலக சினிமா ரசிகர்களையும் ஈர்த்து வைத்திருக்கும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்திய ரஜினிகாந்த், அரசியல் உலகிலும் பல சாதனைகளோடு, சூப்பர் ஸ்டாராக வலம் வர வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தற்போது வரலட்சுமி நடித்து வரும் ‘டேனி’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் துரை சுதாகர்.

Public Star Durai Sudhakar wishes Rajini and his political entry

ஏமாலி முதல் கேப்மாரி வரை..; ஆபத்தான ரூட்டில் ‘ஹாட்’ அதுல்யா

ஏமாலி முதல் கேப்மாரி வரை..; ஆபத்தான ரூட்டில் ‘ஹாட்’ அதுல்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Capmaari Athulya travels on danger route of Cinemaகோவை பெண் என அடிக்கடி சொல்லிக் கொள்பவர் நடிகை அதுல்யா.

குறும்படங்களில் நடித்து வந்த இவர் காதல் கண் கட்டுதே என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அட்டா.. கொள்ளை அழகே இருக்காளே இந்த பெண் என இளைஞர்களை இவரை கொண்டாடினார். அழகான கண்களும் புருவமும் இவருக்கு ப்ளஸ் பாய்ண்டாக அமைந்தது.

இதனையடுத்து ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார்.

சமுத்திரக்கனியின் ஆஸ்தான நாயகியானது போல் அவரது படங்களில் தவறாமல் இடம் பிடித்து வருகிறார். நாடோடிகள் 2 மற்றும் அடுத்த சாட்டை படங்களில் நடித்துள்ளார் அதுல்யா.

கதை இல்லாமல் கூட சமுத்திரக்கனி படம் நடிப்பார் போல ஆனால் அதுல்யா இல்லாமல் அவரின் படம் இருக்காது என்னுமளவுக்கு ஏமாலி படத்திலும் அதுல்யா நடித்திருந்தார்.

அதில் சிகரெட் அடித்து அவரை சூடேற்றி ஆபாச காட்சிகளில் நடித்து இளைஞர்களை சூடேற்றினார். இதனால் ஹோம்லி இமேஜ்ஜில் இருந்த அதுல்யாவுக்கு இது ஆபத்தானது.

அண்மையில் வெளியான கேப்மாரி படம் அதுல்யாவின் இமேஜ்ஜை டோட்டலாக டேமேஜ் செய்துள்ளது.

இப்படி ஆபத்தான ரூட்டில் அதுல்யா பயணிப்பதால் விரைவில் கவர்ச்சி முத்திரை அவர் மீது குத்தப்பட வாய்ப்புள்ளது எனலாம். சுதாரித்துக் கொள்வாரா? அதுல்யா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Capmaari Athulya travels on danger route of Cinema

More Articles
Follows