‘தல 61’ அப்டேட் ; மீண்டும் ‘வலிமை’ கூட்டணி..; அஜித் ரசிகர்கள் ஹாஃப் ஹாஃப்பி

‘தல 61’ அப்டேட் ; மீண்டும் ‘வலிமை’ கூட்டணி..; அஜித் ரசிகர்கள் ஹாஃப் ஹாஃப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் போனிகபூர் மற்றும் வினோத் ஆகியோரது கூட்டணி மீண்டும் வலிமை-க்காக இணைந்துள்ளது.

இவர்கள் 2வது முறையாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர்.

வலிமை படம் இந்தாண்டு 04-11-2021 தீபாவளிக்கு வெளியாகும்.

அதாவது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோதும் என தெரிகிறது.

இந்த நிலையில் தல அஜித்தின் 61 வது படம் குறித்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படிகிறது.

இம்முறை வந்த தகவல்கள் உறுதியாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை 7 மாதங்களில் முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.

இவ்வருடத்தில் சூட்டிங் தொடங்கி 2022ல் ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

வலிமை அப்டேட் சரியாக கொடுக்கவே இல்ல. கேட்டு கேட்டு டயர்டு ஆச்சே..

இதுல மறுபடியும் போனி கபூர் கூட்டணியா? என அஜித் ரசிகர்கள் பாதி மகிழ்ச்சியில் மட்டுமே உள்ளனர்.

Thala Ajith to collabrate with H Vinoth again ?

நான் இறந்துட்டேனா..?? சித்தார்த் கேள்விக்கு ஷாக்கான பதில் கொடுத்த யூடியூப் நிறுவனம்

நான் இறந்துட்டேனா..?? சித்தார்த் கேள்விக்கு ஷாக்கான பதில் கொடுத்த யூடியூப் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்விட்டர் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகர் சித்தார்த்.

இவர் பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசு குறித்து கடுமையான விமர்சனங்களை பதிவிடுவார்.

இதனால் பலரின் எதிர்ப்புகளையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ..” இளம் வயதில் உயிரிழந்த நட்சத்திரங்களின் பட்டியலில் சித்தார்த்தின் புகைப்படத்துடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது யூட்யூப் சேனல் ஒன்று.

இதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் சித்தார்த்.

எனவே இந்த வீடியோ குறித்து யூடியூபிடம் புகாரளித்துள்ளார்.

ஆனால் வீடியோவில் எந்த பிரச்னையும் இல்லை என யூடியூப் நிறுவனம் அவருக்கு பதிலளித்துள்ளது.

இதற்கு சித்தார்த், “அட பாவி” என குறிப்பிட்டு அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு சில யூடியூப் சேனல்கள் தங்களது வீடியோக்களை அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது போன்ற வீடியோக்களை THUMBNAIL பதிவிட்டு வருகின்றனர்.

I reported to youtube about this video claiming I’m dead. Many years ago.

They replied “Sorry there seems to be no problem with this video”.

Me : ada paavi

Wait what…
Ee thumbnails enti asal
@Actor_Siddharth
#dharunum #arachakam
Link for this video :https://t.co/6Pcs8f48NQ
Views kosam emanna chesthara https://t.co/GgEq5MRbgr

Tamil hero Siddharth is dead, claims YouTube video. Actor reveals full story

‘பல்லுபடாம பாத்துக்கோ’ படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘குத்துக்கு பத்து’

‘பல்லுபடாம பாத்துக்கோ’ படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘குத்துக்கு பத்து’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

YouTubeல் பிரபலமான Temple Monkey சேனல், முன்னணி OTT தளத்துடன் இணைந்து ஒரு இணைய தொடரை உருவாக்குகிறது.

‘குத்துக்கு பத்து’ எனும் இத்தொடரை விஜய் வரதராஜ் இயக்குகிறார்.

Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், ‘பல்லுபடாம பாத்துக்கோ’ படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக ‘குத்துக்கு பத்து’ என்ற இணையதொடரை உருவாக்க உள்ளார்.

இந்த இணைய தொடரை D Company சார்பில் AKV துரை தயாரிக்கிறார்.

இந்தத் தொடரில் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரி, செங்கி வேலு, திவாகர், ஜானி, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

8 அத்தியாயங்கள் கொண்ட தொடராக இத்தொடர் உருவாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

இயக்குநர் விஜய் வரதராஜ் தொடர் குறித்து கூறியதாவது…

இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், அனைத்து அம்சங்களும் நிறைந்த நகைச்சுவை தொடர் தான் இது.

அரசு வழிகாட்டியுள்ள அனைத்து உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளுடன், “குத்துக்கு பத்து” தொடரின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம்.

இத்தொடரின் ஒவ்வொரு குழு உறுப்பினரும் தடுப்பூசிகளின் முழுமையான அளவை எடுத்து முடித்துள்ளனர். இது பாதுகாப்பான படப்பிடிப்பிற்கு முழு உத்தரவாதத்தை அளித்துள்ளது.

இதனை முழுமையாக செயல்படுத்தியதற்காக தயாரிப்பாளர் AKV துரை அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

அவருடன் இணைந்து இத்தொடரை உருவாக்குவது மகிழ்ச்சி. இத்தொடரில் மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள் குழு பங்கேற்கிறது.

எந்த ஒரு பாத்திரத்திலும் தனித்து தெரியும் திறன் பெற்ற ஆடுகளம் நரேன் சார், போஸ் வெங்கட் சார் போன்ற பெரும் ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றுவது பேரின்பம் தரும் அனுபவம். இத்தொடரில் அவர்களது கதாப்பாத்திரம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என்றார்.

D Company சார்பில் AKV துரை கூறியதாவது…

Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், கதை சொல்லலில் தனது புதுமையான அணுகுமுறையால், அனைத்து தரப்பினரையும் மகிழ்விப்பதில் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார்.

அவர் குத்துக்கு பத்து தொடரின் திரைக்கதையை விவரித்தபோது, நிகழ்ச்சி முழுவதும் 100% பொழுதுபோக்கு தன்மையுடனும், அனைவரும் சிரித்து, மகிழ்ந்து கொண்டாடும் வகையிலும், இருப்பதை உணர்ந்தேன்.

குறிப்பாக, இது இளம் பார்வையாளர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.

8 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரை விஜய் வரதராஜ் எழுதி இயக்குகிறார்.

ஜகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலா இசையமைக்கிறார்.

சாந்தோஷ் செந்தில் (Shifty) படத்தொகுப்பு செய்ய, மதன் குமார் கலைஇயக்கம் செய்கிறார்.

டேஞ்சர் மணி சண்டைப்பயிற்சிகளை செய்ய, முகமது சுபையர் ஆடை வடிவமைப்புகளை செய்கிறார்.

வினோத் சுகுமாரன் மேக்கப்பை கவனிக்க, சேது ராமலிங்கம், சரத் நிவாஷ், மற்றும் KV மோத்தி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

D Company சார்பில் AKV துரை இத்தொடரை தயாரிக்கிறார்.

YouTube fame Temple Monkey collaborating with a leading OTT platform for a web series directed by Vijay Varatharaj titled KUTHUKKU PATHTHU

IMG-20210719-WA0035

கேரள அரசைப் போல தமிழக அரசும் செய்யனும்.. தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.?; கமல்ஹாசன் கேள்வி

கேரள அரசைப் போல தமிழக அரசும் செய்யனும்.. தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.?; கமல்ஹாசன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ள்ளார்.

அதில்

“வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் ஆகியவை மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாளில் இருந்தே நாங்கள் வலியுறுத்தி வரும் அம்சங்கள்.

சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப் பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமான்யனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது.

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென கோரி 2012ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கை அதிமுக அரசு சாக்குப்போக்கு சொல்லி நிலுவையில் போட்டுவிட்டது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என தன் தேர்தல் வாக்குறுதியில் (வாக்குறுதி எண்:375) திமுக அறிவித்திருந்தது.

ஆனாலும், முதல் சட்டமன்ற கூட்டத் தொடரின் கவர்னர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

இந்தியப் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சிகள் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.

கேரள சட்டமன்ற நிகழ்வுகள் இணைய வழியில் வெப் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இதற்கென்றே தனியாக ஒரு யூடியூப் சானலும் உள்ளது.

நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.

தங்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் மாமன்ற உறுப்பினர்களின் கருத்து என்னவாக இருக்கிறதென்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவியாக இருப்பதுடன், பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கக் கூடும்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் சட்டமன்ற வளாகத்தில் கூடுவதை இந்த நேரடி ஒளிபரப்பு குறைக்கக் கூடும்.

தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு இணைய வழி நேரடி ஒளிபரப்பு செய்வது ஒரு சவாலான விஷயமாக இருக்காது.

தங்கள் தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்திருந்த நேரடி ஒளிபரப்பை இந்த பட்ஜெட் தொடரிலேயே உறுதி செய்ய ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

கமல் ஹாசன்
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM leader Kamal requests TN government

லிங்குசாமி – தேவி ஸ்ரீ பிரசாத் இணையும் படத்தில் முதன்முறையாக வில்லனாகும் ஆதி

லிங்குசாமி – தேவி ஸ்ரீ பிரசாத் இணையும் படத்தில் முதன்முறையாக வில்லனாகும் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், முழுக்க முழுக்க, ஸ்டைலிஷ், ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகும் படம் பெயரிடபடாத இப்படத்திற்கு RAPO19 என்றழைக்கப்படுகிறது.

இப்படத்தினை முன்னணி இயக்குநர் என்.லிங்குசாமி இயக்குகிறார்.

‘RAPO19’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ல் துவங்கி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில், படத்தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்தில், நாயகன் ராம் பொதினேனிக்கு எதிர் நாயகனாக நடிகர் ஆதி பின்ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நடிகர் ஆதி நாயகனாக நடித்து, இரு படங்கள் தமிழிலும் மேலும் இரு படங்கள் தெலுங்கிலும் வெளியாக தயாராக இருக்கின்றன.

தற்போது பன்மொழிகளில் உருவாகும் ஒரு படத்திலும் அவர் நாயகனாக நடித்து வருகிறார்.

மாஸ் கமர்ஷியலாக, ராம் பொதினேனி நடிக்கும் ‘RAPO19’ படத்தில், எதிர் நாயகன் பாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட காரணமே, அப்பாத்திரம் வழக்கமானதிலிருந்து மாறுப்பட்ட பாத்திரமாகவும், சவால்மிக்கதாகவும், தனித்துவம் கொண்டதாகவும் இருந்தது தான்.

இம்மாதிரி வித்தியாசமான பாத்திரங்கள் துணை பாத்திரங்களாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு செய்து வருபவர் ஆதி. இப்பாத்திரமும் அவருக்கு பெரிய பெயர் பெற்றுத் தரும் பாத்திரமாக இருக்கும். முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார்

ராம் மற்றும் ஆதிக்கு இடையிலான காட்சிகள் படத்தில் அனல் பறக்கும் பரபரப்போடு மாஸாக இருக்கும். இந்த இரு திறமையான நடிகர்களும் திரையில் இணைந்து நடிப்பதில், பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

RAPO19 படத்தில் Uppena படப்புகழ் நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

பவன் குமார் இப்படத்தினை வழங்குகிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Actor Aadhi to play antogonist in lingusamy film

E6o0CkEVoAkq4oC

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்து இருந்தார் நடிகர் விஜய்.

இந்த இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவுவரி செலுத்தவில்லை விஜய்.

இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கார் பதிவு செய்யப்படவில்லை.

நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

எனவே இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் தன்னுடைய உண்மையான இயற்பெயரில் (சி.ஜோசப் விஜய்) சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு…

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதைக்கூட மனுவில் குறிப்பிடவில்லை என்றார்.

விஜய்யின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் திரைப்பட நடிகர் என தெரிவித்தார்.

திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தி மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

வரி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு தானேயன்றி, அது தானாக மனமுவந்து வழங்கும் நன்கொடை அல்ல.

பொதுமக்கள் வரியின் மூலமாகக் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டே கல்வி, மருத்துவம், பாலங்கள், ரயில்வே, சாலை, துறைமுகம், சட்டம் – ஒழுங்கு, வறுமை ஒழிப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் நாட்டை ஆளும் அளவுக்கு நடிகர்கள் உயர்ந்துள்ளனர். ரீலிலும் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோக்களாக நடிகர்கள் திகழ வேண்டும்.

எனவே சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அவர் அந்த தொகையை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டார்.

இத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு வரும் திங்கள்கிழமை இன்று ஜூலை 19ல் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் விஜய்யின் சொகுசு கார் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்களை வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மேல் முறையீட்டு அமர்விற்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

எனவே விஜய்யின் மேல்முறையீட்டு மனு இன்னும் ஒரு சில நாட்களில் வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Madras HC to hear Vijay’s appeal against judge’s Reel Hero remark in Rolls-Royce case

More Articles
Follows