தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று முன் தினம் நவம்பர் 22ஆம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.
இதில் ராம நாராயணனின் மகன் தயாரிப்பாளர் முரளி அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில்…
என்னை தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி.
தேர்தலுக்கு முன்புதான் அணிகள். இப்போது எந்த அணியும் கிடையாது. எல்லோரும் ஒரே அணி தாண்.
கொரோனா ஊரடங்கால் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது தமிழ் சினிமா. இதனால் திரையுலகம் பின்தங்கியுள்ளது.
எனவே அனைத்து தயாரிப்பாளர்களையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்போம்.
தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.
வெளியிட முடியாமல் தேங்கி கிடக்கும் படங்களை திரைக்கு கொண்டு வர பாடுபடுவோம்.
தற்போதுள்ள அரசு, இனி வரப்போகும் புதிய அரசு ஆகியவற்றுடன் நல்ல உறவை வளர்த்து அரசு தரப்பில் இருந்து அனைத்து சலுகைகளையும் பெறுவோம்.” என்றார்.
TFPC new president Murali on VPF issue