*ஒளடதம்* படத்தை விளம்பரப்படுத்த ரசிகர்களை சந்திக்கும் நேதாஜி பிரபு

*ஒளடதம்* படத்தை விளம்பரப்படுத்த ரசிகர்களை சந்திக்கும் நேதாஜி பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Owdatham movie will show you the black pages of Medical worldஇன்று பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு நோயின் பிடியில் இருக்கிறார்கள். நோயைக் குணப்படுத்துவதை விட மருந்துகளை விற்பனை செய்வதிலேயே வியாபார நோக்கிலான மருத்துவ உலகம் குறியாக இருக்கிறது. சிகிச்சை என்கிற பெயரில் மருந்துகளுக்கு அடிமைப்படுத்தி வியாபாரம் செய்வதே இவர்களின் நோக்கம்.

குறிப்பாக நீரிழிவு நோய்க்கான மருந்து வியாபாரம் அமோகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட மருந்துகளில் எவ்வளவோ தடைசெய்யப்பட்ட மூலப்பொருள்கள் உள்ளன.ஆனால் யாரும் இது பற்றி கண்டு கொள்வதில்லை.இந்த உண்மையை உலகுக்கு சொல்ல வரும் படம்தான் ‘ஒளடதம் ‘.

இப்படத்தை தனது ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் சார்பில் கதை எழுதி தயாரித்துள்ளதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் நேதாஜி பிரபு. சமைரா நாயகியாக நடித்துள்ளார்.

மற்றும் வினாயக்ராஜ், பாலாம்பிகா, முரளி, சந்தோஷ் ஆகியோரும் நடிதுள்ளனர். திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் ரமணி. ஒளிப்பதிவு ஸ்ரீரஞ்சன் ராவ்,இசை இசையரசர் வி.தஷி. சண்டைப் பயிற்சி தேவா, டிசைன்ஸ் உதயா,

படம் பற்றி நேதாஜி பிரபு கூறுகையில்…

” நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். சினிமா ஆசை விடவில்லை, வந்து விட்டேன். ஆனால் வழக்கமான படமாக நாமும் ஒரு படம் எடுக்கக்கூடாது என்று நினைத்தேன்.

உண்மைச்சசம்பவத்தை வைத்து எடுக்க நினைத்தேன். இயற்கை வழிகளில் உண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே நம் முன்னோர்கள் ஒளடதம் குறை, ஒளடதம் தவிர் என்றார்கள்.

அதன் பின்னணி மருந்துகளை அதிகம் உண்ணக்கூடாது என்பதுதான். ‘ஒளடதம் ‘ என்கிற பெயரில் மருத்துவம் பற்றி எடுக்க ஒரு கதை தேடினேன்.

அப்போது மருத்துவ உலகின் கறுப்பு பக்கங்களைப் புரட்டிக் காட்டும்படியான ஒரு மோசடி பற்றிய செய்தி 2013 மே14 ல் வந்திருந்தது.

இது பற்றி 2016 ஆண்டிலும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதைப் பார்த்தேன்.

தவறான மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்த அந்தச் செய்தி காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டது. ஆனால் அந்த மருந்து வியாபாரம் இன்னும் கேட்பாரில்லாமல் தொடரவே செய்கிறது.

இது பற்றிப்படம் பேசுகிறது. படம் ஒரு கமர்சியல் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதற்காக ஒரு நிஜமான மருந்துக்கம்பெனியில் 8 நாட்கள் படப்பிடிப்புநடத்தியுள்ளோம்.” என்கிறார்.

படம் பற்றிய விளம்பரத்தை வித்தியாசமாகச்செய்யயவுள்ளாராம். அதைப் பற்றிப்பேசும் போது…

”இப்போது எவ்வளவோ படங்கள் வருகின்றன. ஆனால் அது நல்ல படம் என்று தெரிவதற்குள் சரியான திரையீடு அமையாமல் அதன் ஆயுள் முடிந்து விடுகிறது. நான் ஒரு திட்டத்தில் உள்ளேன்.

திரையரங்கு திரையரங்காகச் சென்று ’ஔடதம்’ என எழுதப்பட்ட பேனாக்களை ரசிகர்களைச்சந்தித்து வழங்கப்போகிறேன்.

இப்படி ஒவ்வொரு திரையரங்காகச்சென்று 5000 பேனாக்கள் வீதம் 3 லட்சம் பேனாக்களைத் தரப்போகிறேன். இப்படம் சமூகத்தில் நல்ல விழிப்பை ஏற்படுத்தும்.” என்கிறார் நேதாஜி பிரபு.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திரைகளில். *டிரைலர் மற்றும் ‘ஔடதம்’ 3லட்சம் பேனா க்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் இறுதியல் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Owdatham movie will show you the black pages of Medical world

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி சார்பாக பாராட்டு விழா !

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி சார்பாக பாராட்டு விழா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velammal schoolஅண்மையில் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்த்தாவில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மேசைப் பந்தாட்டத்தில் (டேபிள் டென்னிஸ்) பதக்கம் வென்றவர்களுக்கான பாராட்டு விழா ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (16. 09. 2018) அன்று நடைபெற்றது.

மேசைப் பந்தாட்டத்தில் ஆடவருக்கான குழு பிரிவில் உயர்திரு. அச்சந்த சரத் கமல், உயர்திரு. சத்தியன் ஞானசேகரன், உயர்திரு. அந்தோணி அமல்ராஜ் அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றது. மேலும், கலப்பு இரட்டையர் பிரிவில் உயர்திரு. அச்சந்த சரத் கமல் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர்களுக்கான பாராட்டு விழா சென்னை, ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சாதனை புரிந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகப் பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ. 6 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிப் பாராட்டியது. அப்போது, பள்ளி மாணவர்கள் வரைந்த வீரர்களின் ஓவியங்கள், அவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், பதக்கம் வென்ற வீரர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மிகுதிப்படுத்தும் வகையிலும் எழுச்சியுரை வழங்கினார். மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட இம்முயற்சி மாணவர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்திருந்தது.

அச்சந்த சரத் கமல் பேசும்போது

நான் வெற்றிப் பெற்றதற்கு காரணம் என் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் தான். எனக்கு தேவையானதை அளித்து வெற்றிப் பெறுவதற்கு ஊக்குவித்தனர். அதேபோல் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து ஊக்குவிக்கிறது என்றார்.

சத்தியன் ஞானசேகரன் பேசும்போது

நான் விளையாட்டு துறைக்கு வருவதற்கு பல பேர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனது பள்ளி நாட்கள் முதல் எனது விடாமுயற்சியைத் தாண்டி, எனக்கு ஊக்கம் அளித்தது என் பள்ளியும் ஆசிரியர்களும் தான். ஆகையால், விடாமுயற்சியை நாம் எப்போதும் கைவிடக்கூடாது. அதேபோல் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் மாணவர்களின் திறமையை கண்டறிந்து ஊக்குவிக்கிறது. மாணவர்கள் வெற்றிப் பெரும் வகையில் இப்பள்ளி சிறப்பாக செயல்படுகிறது என்றார்.

அந்தோணி அமல்ராஜ் பேசும்போது

நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் பள்ளி தான் முக்கிய காரணம். வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் அதன் ஆசிரியர்களும் மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க தேவையான வசதிகளை அளிக்கிறது. மற்ற பள்ளிகளை விட வேலம்மாள் வித்யாலயா பல்வேறு விளையாட்டுகளையும் அதற்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுக்கின்றது. அதை மாணவர்கள் பயன்படுத்தி பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என கூறினார்.

*துப்பாக்கி முனை* டீசரை வெளியிட்டார் கௌதம்மேனன்; மணிரத்னம் பாராட்டு

*துப்பாக்கி முனை* டீசரை வெளியிட்டார் கௌதம்மேனன்; மணிரத்னம் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thuppakki munai60 வயது மாநிறம் படத்துக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரித்து வெளியிடும் படம் ‘துப்பாக்கி முனை’.

இப்படத்தின் முதல் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

இதனை இயக்குநர் கௌதம் மேனன் இணையதளத்தில் வெளியிட்டார்.

விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். வேல ராமமூர்த்தி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு.

தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்வி முத்து கணேஷ் இசையமைக்க,
புலவர் புலமைப்பித்தன், பா விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர்.

தயாரிப்பு: கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ். இணைத் தயாரிப்பு: பரந்தாமன், ஏகே நடராஜ்.

இந்த டீசரை பார்த்த டைரக்டர் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்யுள்ளார்.

விரைவில் படத்தின் இசை வெளியாகவிருக்கிறது.

Gautham menon released Thuppakki Munai Teaser Maniratnam praised Teaser

https://www.filmistreet.com/video/thuppakki-munai-teaser/

சிவகார்த்திகேயன் வேற லெவல்; 3 நாட்களாகியும் சீமராஜா-வுக்கு சிறப்பு காட்சிகள்

சிவகார்த்திகேயன் வேற லெவல்; 3 நாட்களாகியும் சீமராஜா-வுக்கு சிறப்பு காட்சிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Even after 3 days of release SeemaRaja has Midnight and Morning special showsரெமோ மற்றும் வேலைக்காரன் படங்களுக்கு பிறகு ஆர். டி. ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா.

இப்படத்தை சிவாவின் ஆஸ்தான் இயக்குனர் பொன்ராம் இயக்க, இமான் இசையமைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீசானது.

ஏ சென்டரில் சில நெக்ட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் பி அண்ட் சி சென்டர்களில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது.

ஜாலியாகும் செல்லும் இப்படத்தை ஏராளமான குடும்பத்தினர் வந்த பார்த்து செல்கின்றனர்.

இப்படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இன்றும் அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சில தியேட்டர்களில சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

இவையில்லாமல் காலை 8 மணிக்கு சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட்டு வருகிறது.

இதனால் கோலிவுட்டே சிவகார்த்திகேயனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவர் வேற லெவல் என தங்கள் உற்சாகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Even after 3 days of release SeemaRaja has Midnight and Morning special shows

@RamCinemas and @TPVMultiplex Allotted 1AM show for #Seemaraja!

Ram Muthuram Cinemas‏Verified account @RamCinemas 2h2 hours ago

As per Fans Wish, We are Happy to Announce another #Special #Show for #Nellai #SeemaRaja. Show timing #Tomorrow #Morning 8.00 A.M Do watch it only in @RamCinemas #DolbyAtmos

செப்டம்பர் 21ல் விக்ரமின் சாமி2 மோதும் நான்கு படங்கள்

செப்டம்பர் 21ல் விக்ரமின் சாமி2 மோதும் நான்கு படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On 21st October Saamy Square will clash with four moviesவிக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’.

இவர்களுடன் பிரபு, பாபி சிம்ஹா, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, டெல்லி கணேஷ், உமா ரியாஸ், சுதா சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஹரி இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

தமீன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஷிபு தமீன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலாகி உள்ள நிலையில் இதன் ரிலீஸை தேதியை அறிவித்துள்ளனர்.

வருகிற செப்டம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதே நாளில்தான் ‘களவாணி மாப்பிள்ளை’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘வண்டி’, ‘ஏகாந்தம்’ ஆகிய படங்களும் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இத்தனை படங்களுக்கும் தியேட்டர்களில் கிடைப்பதில் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

On 21st October Saamy Square will clash with four movies

ரிலீசுக்கு தியேட்டர் இல்ல ஆனா புரோமோசனுக்கு க்யூ நிக்குது : தரணிதரன்

ரிலீசுக்கு தியேட்டர் இல்ல ஆனா புரோமோசனுக்கு க்யூ நிக்குது : தரணிதரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We are not getting theaters to release But promotion agents in queue says Dharanidharanபர்மா படத்தின் முமூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு இயக்குனர் ஆனார் தரணிதரன்.

இவர் தற்போது தயாரித்து இயக்கியுள்ள ராஜா ரங்குஸ்கி படம் வருகிற செப்டம்பர் 21ல் வெளியாகவுள்ளது.

இதில் மெட்ரோ சிரிஷ் மற்றும் சாந்தினி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தரணிதரன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பேசும்போது…. இந்த குறுகிய காலத்தில் இயக்கி முடித்துவிட்டேன். ஆனால் வெளியீட்டுக்கு ஒரு வருடமாக காத்திருக்கிறோம்.

காரணம் ரிலீசுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. டாப் ஹீரோக்கள் படங்களுக்குதான் தியேட்டர் உரிமையாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.

படம் ரீலீசுக்கு தியேட்டர் கிடைக்காமல் நாங்கள் இருக்கிறோம். ஆனால் புரோமோசன் குடுங்க.

நாங்க பண்ணி தர்றோம். ட்விட்டரில் டிரெண்ட் ஆகுறோம் என ஒரு கூட்டம் நிற்கிறது. இவர்களிடம் என்ன சொல்வது..?” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தரணி தரன்.

We are not getting theaters to release But promotion agents in queue says Dharanidharan

raja ranguski press meet

More Articles
Follows