சூடாகும் தேர்தல் களம்..: விஷாலை குறை சொல்லிட்டு அதே தவறை செய்கிறார் டிஆர்.. – ‘நலம் காக்கும் அணி’யில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் பேட்டி

சூடாகும் தேர்தல் களம்..: விஷாலை குறை சொல்லிட்டு அதே தவறை செய்கிறார் டிஆர்.. – ‘நலம் காக்கும் அணி’யில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radha Krishnanதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர்.

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.

ஏற்கனவே சங்கத்தின் செயலாளர், மற்றும் பொருளாளர் பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன்.

கடந்த 20 வருடங்களாக குறைந்தபட்ஜெட் படத்தயாரிப்பாளர்களின் குரலாக செயல்பட்டு வருபவர் இவர்.

கடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்.

நடைபெறவுள்ள தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும்அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு பேட்டி…

1.என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.?

தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பது VPF கட்டணம். அதைக்கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய வழிமுறைகளைச் செய்வோம்.

நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களைச் சரி செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்வோம்.

ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம்.

சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயற்சி எடுப்பது. சிறு படங்களுக்கும் போதிய திரையரங்குகள் ஒதுக்கீடு உறுதி செய்தல் உட்பட பல வாக்குறுதிகளை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

2.தொழில்நுட்பச் சிக்கல் என்று OTTயைகுறிப்பிடுகிறீர்கள். அதேசமயம் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறீர்களே?

திரையரங்குகள் ஒதுக்கீடு போல OTTயிலும் பெரிய படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறோம்.

3. சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் என்னும் வாக்குறுதி பல தேர்தல்களில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறதே? செயலுக்கு வந்தபாடில்லையே?

கடந்த முறைவிஷால் தேர்தலில் வென்றபோதும் இப்படிச் சொன்னார்.

ஆனால் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என இரண்டு பதவிகளில் இருந்து கொண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை.

4.சிறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் என்பது விஷாலுக்கு முன்பும் தேர்தல்களில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் விசயமாக இருக்கிறதே?

ஆமாம், ஒவ்வொரு முறை தலைவராக வருகிறவர்களும் அதற்காக உரிய முயற்சிகள் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

சிறு படங்களை மட்டுமே தயாரித்துப் பெரிய வெற்றிகளைப் பெற்ற தேனாண்டாள் நிறுவனத்தின் முரளிக்கு அதன் வலி முழுமையாகத் தெரியும். அவர் கண்டிப்பாக செயல்படுத்துவார்.

5.எதிரணியில் போட்டியிடும் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகியோர் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்களே?

டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது. ஏற்கெனவே விஷால் தலைவரான போது இவரே இதே காரணத்தைச் சொல்லி விஷாலை விமர்சனம் செய்தார்.

இப்போது அவரே அப்படிச் செய்கிறார்.
அவருடைய மகன் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டி.ராஜேந்தர் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வார்? அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்கள் வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக்கூடாது என்கிற சட்டத்தைத் திருத்தி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமலேயே இங்கே போட்டியிடுகிறார்கள்.

இது அவருக்குப் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும்

6.தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஆட்சியிலிருப்பவர்களைச் சந்தித்து அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சரியா?

எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களோடு இணக்கமாக நடந்துகொள்வது எப்போதும் இருக்கும் வழக்கம்தான்.

எங்கள் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அரசியல் என்பது வெளியில்தான் இங்கே எல்லோரும் தயாரிப்பாளர்கள்தான்.

7.இம்முறை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்றொன்று அமைந்திருக்கிறதே?

அப்படி ஒரு சங்கம் அமைவதற்குக் காரணம் இருந்தது. அரசாங்கம் சங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு நிர்வாகக் கமிட்டி அமைத்தது. அதனால் பல சிக்கல்களில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனாலேயே அந்தச் சங்கம் உருவானது.
நாங்கள் வென்ற பிறகு அவர்களுடன் பேசி தாய்ச்சங்கத்தில் இணைய வைப்போம்.

8.இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்தோம். ஆனால் இப்போது எங்கள் அணி சார்பாக வாக்குக்காகயாருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை

9.உங்களிடம் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் அணிக்கு அவர்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்லப்படுவது பற்றி..?

நான் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகுகிறவன். கடந்த 20 வருடங்களாக குறைந்தபட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நலனுக்காக போராடி வருகின்றேன்யாருக்கு சிக்கல் என்றாலும் முதல் நபராக அங்கு இருப்பேன்என்னாலான உதவிகளைசெய்வேன்.

அதனால் எல்லோரும் என்னிடம் பாசமாக இருப்பார்கள். இதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

10. சங்கப் பொறுப்புக்குப் போட்டியிடும் தகுதி இல்லாத நீங்கள் அவசரகதியில் ஒரு படத்தை ஓரிரு திரையரங்குகளில் வெளியிட்டுவிட்டு தேர்தலில் போட்டியிடுவதாகப் புகார் எழுந்துள்ளதே

படத்தை முதல்பிரதி அடிப்படையில் ஒருவர் தயாரிப்பதும் அதை இன்னொருவர் வாங்கி வெளியிடுவதும் எப்போதும் உள்ள நடைமுறைதான்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் கொழும்பு, புதுச்சேரி ஆகிய இடங்களில் திரையிட்டோம்.

தமிழகத்தில் திரையரங்குகள் திறந்திருந்தால் அதிக திரைகளில் வெளியிட்டிருப்போம்.

எனவே இந்தப் புகார் அர்த்தமற்றது. தேர்தல் அதிகாரி நாங்கள் விதிமுறைப்படி நடந்துகொண்டதை ஒப்புக்கொண்டு எங்கள் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டார்.

Radha Krishnan condemns TR for his nomination in TFPC

JUST IN ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்த ஷான் கானரி காலமானார்

JUST IN ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்த ஷான் கானரி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

james bond sean conneryஸ்காட்லாந்த்து நாட்டை சேர்ந்த தாமஸ் ஷான் கானரி கடந்த 1930, ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தவர்.

ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் இவர்.

வறுமை காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை.

கூலி முதல் ராணுவம் வரை பல்வேறு தளங்களில் பணியாற்றி இருக்கிறார்.

1950ஆம் ஆண்டு மிஸ்டர் யூனிவர்ஸ் போட்டியிலும் பங்கெடுத்துள்ளார்.

சின்னத்திரையிலும் சில நாடகங்களில் கானரி நடித்து வந்தார்.

1957ஆம் ஆண்டு, ‘நோ ரோட் பேக்’ என்கிற திரைப்படத்தில் ஷான் கானரிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது.

1962ஆம் ஆண்டு, ‘டாக்டர் நோ’ திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த புகழின் உச்சியை தொட்டார்.

‘தி அண்டச்சபிள்ஸ்’ என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கானரி வென்றார்.

40 வருடங்களாக நடித்து வந்த தற்போது அவருக்கு வயது 90 ஆகிறது.

சுமார் ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஷான் கானரி நடித்துள்ளார். பல்வேறு வெற்றிப் படங்களில் கானரி நடித்திருந்தாலும் இன்றுவரை ஜேம்ஸ் பாண்ட் தான் அவரது அடையாளமாக இருந்து வருகிறது.

‘இண்டியானா ஜோன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாம் பாகம், ‘தி ஹண்ட் ஃபார் தி ரெட்’ அக்டோபர், ‘தி ராக்’ உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழை தந்தன.

இந்நிலையில் இன்று ஷான் கானரி காலமானார்.

வாழ்க்கை குறிப்பு.. 1962ல் நடிகை டயான் சிலெண்டோவை கானரி மணந்தார். இவர்களுக்கு ஜேஸன் கானரி என்ற மகன் உள்லார்.

சிலெண்டாவை 73ஆம் வருடம் கானரி விவாகரத்து செய்தார்.

1975ஆம் ஆண்டு மிஷலின் ரோக்ப்ரூன் என்கிற ஓவியரை கானரி மணந்தார்.

கடைசி வரை மிஷலினுடன் தான் கானரி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING : Sean Connery, the first James Bond, dies at 90

ஒரு பட மொத்த பட்ஜெட்டை விட ஹீரோவின் சம்பளம் அதிகம்…; ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் பேட்டி

ஒரு பட மொத்த பட்ஜெட்டை விட ஹீரோவின் சம்பளம் அதிகம்…; ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rock Fort Murugananthamதமிழ் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில் திரையிட்டு வந்தது.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது

இந்நிறுவனம் ஹிப் ஆப் தமிழா ஆதிநாயகனாக அறிமுகமான
” மீசையை முறுக்கு” திரைப்படத்தின் தமிழக உரிமையை முதல் படமாக வாங்கி வெளியிட்டு வெற்றிப் பயணத்தை தொடங்கியது.

தமிழ் சினிமாவின் பாக்ஸ்ஆபீஸ் நட்சத்திரங்களான அஜித், விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ் நடித்த படங்களும் அடங்கும்.

இந்நிறுவனம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 2017 தீபாவளிக்கு வெளியான “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

இதை தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜீத்குமார் நடித்து வெளியான “வேகம், விவேகம்” படத்தின் சில ஏரியாவிநியோக உரிமையை வாங்கி வெளியிட்டது அமலாபால் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்திய “ஆடை, மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலைகாரன், ஜெயம் ரவி நடித்த கோமாளி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானசிந்துபாத்,
அசுர வெற்றிபெற்றஅசுரன், பெட்ரோமாக்ஸ் மற்றும் நான் சிரித்தால்” என பல வெற்றிபடங்களை வெளியிட்டு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நிறுவனமாக ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது

2019 ஆம் வருடம் இந்நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஆண்டாகும். ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து, மிகச்சிறந்த கதையம்சம் உள்ள படங்களை வாங்கி வெளியிட்டது விநியோக வியாபாரத்தில் முன்ணனி நிறுவனமாக வளர்ந்துவரும் நிலையில் 2019ல் ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட்
T. முருகானந்தம் முதல் முறையாக “குருதி ஆட்டம்” படம் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தார்.

அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில்
குருதி ஆட்டம் படத்தை தொடர்ந்து YouTube Put Chutney புகழ் ராஜா மோகன் இயக்கத்தில், குழந்தைகளை மையமாக கொண்ட, காமெடி கமர்ஷியல் படத்தை இரண்டவாது படைப்பாக தயாரித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கொரானா காலத்திலும் திரைப்பட தயாரிப்புக்கான திட்டமிடலை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுத்தினார் முருகானந்தம்.

தமிழ் சினிமா இயக்குநர்களில் தனக்கு என்று ரசனைமிக்க சினிமா பார்வையாளர்களை கொண்ட மிஷ்கின் இயக்கத்தில்ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிப்பில் மூன்றாவது தயாரிப்பாக “பிசாசு 2” படத்தின் அறிவிப்பை வெளியிட்டு கோடம்பாக்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

பிசாசு-2 படத்தின் வியாபாரத்தை முடிக்க முண்ணனி விநியோகஸ்தர்கள் தற்போதே பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

படங்களை தேர்வு செய்வதில் ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் நம்பகதன்மையை உறுதிசெய்து உள்ளது.

மேலும் தமிழில் சில முக்கிய படைப்புகளின் உலகளாவியஉரிமையை வாங்குவதற்கான வியாபார பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட்.

மாஸ்டர் பீஸ் புரடக்க்ஷன் நிறுவனத்திடமிருந்து நடுகாவேரி இயக்கத்தில் கயல் ஆனந்தி, ரோகித் ஷ்ராஃப் நடிப்பில் உருவாகும் “கமலி” படத்தின் உரிமையை பெற்றிருக்கிறது.

மேலும் ஆகாஷ் பிரபு, ஜானகி, ஐஸ்வர்யா முருகன், அருன் மற்றும் வித்யா பிள்ளை நடிக்கும் “மாயபிம்பம்” படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மிகப்பெரும் வெளியீடாக ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள “பூமி” படத்தின் தமிழகத்தில் உள்ள ஒன்பது ஏரியா உரிமைகளில்ஏழு பகுதிகளில் இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சமீப காலமாக சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கும் இருட்டு அறையில் முரட்டுகுத்து பட இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் அதன் அடுத்த பாகமாக உருவாகியுள்ள
“இரண்டாம் குத்து” படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

இப்படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

திரையுலகில் தொடர்ந்து முண்னனி நடிகர்கள் நடிக்கும் படங்களை 2021ல் தயாரிக்கவுள்ள ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் முருகானந்தத்துடன் நடைபெற்ற நேர்காணல்…

திரைப்படத் தயாரிப்பு மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்படும் நேரத்தில் நீங்கள் தயாரிப்பில் இறங்கத் துணிந்தது எப்படி?

நல்ல படங்களைச் சரியாக மார்க்கெட்டிங் செய்தால் வெற்றி நிச்சயம் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். எனவே நம்பிக்கையுடன் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறேன்.

விநியோகஸ்தர்களின் ரீஃப்ண்ட், திரையரங்கு வசூலில் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியன குறித்து..?

ஒரு படம் நன்றாக ஓடும் என்று நம்பி வெளீயிடுகிறோம். அது தப்பாகிவிட்டால் ரீஃப்ண்ட் கொடுக்கவேண்டி வரும்.

நாம் தொடர்ந்து இந்த வியாபாரத்தில் இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் சரி செய்துவிடலாம்.

திரையரங்கு வசூலைப் பொறுத்தவரை எங்காவது ஒரு சில இடங்களில் வசூலில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் எல்லாம் சரியாகவே இருக்கிறது.

திரையரங்குக்காரர்கள் வசூல் தொகையைப் பல மாதங்கள் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

முதல்நாள் வசூலை அடுத்த நாளே தருகிறவர்களும் இருக்கிறார்கள். மாதக்கணக்கில் இழுக்கிறவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் தொழில் செய்தாக வேண்டும்.

நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் திரைப்படத் தொழில் நசிவதாகச் சொல்லப்படுவது பற்றி..?

உண்மைதான், சில படங்களில் படத்தின் மொத்தச் செலவைக் காட்டிலும் நடிகரின் சம்பளம் அதிகம் என்றாகிறது.

அங்கு தொடங்குகிற சிக்கல் திரையரங்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கச் சொல்வதுவரை வந்து நிற்கிறது.

தயாரிப்பாளர்களுக்குள் முழுஒற்றுமை ஏற்பட்டால்தான் இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்.

நீங்கள் வெளியிடும் இரண்டாம்குத்து சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறதே?

இயக்குநரின் முந்தைய படங்கள் வெற்றி மற்றும் அதனுடைய பட்ஜெட் போன்ற விசயங்களைப் பார்த்துத்தான் படங்களை வாங்கி வெளியிடுகிறோம். நான் படம் பார்க்கவில்லை.

சர்ச்சை வந்துவிட்டபின் படத்தில் மாற்றம் செய்யப்போகிறீர்களா?

அது முழுக்க முழுக்க இயக்குநரின் உரிமை. அதில் நான் தலையிடமாட்டேன்.

உங்களுக்கு சமுதாயப் பொறுப்பு இல்லையா

இருக்கிறது. எங்கள் வியாபாரத்தில் அத்திபூத்தாற்போல் இதுபோன்ற சிக்கல்கள் வருவதுண்டு. அவற்றைச் சரி செய்து வெளியிடுவோம்.

‘பூமி’ படத்தின் சென்னை செங்கல்பட்டு தவிர தமிழக விநியோக உரிமை பெற்றிருக்கிறீர்கள். அது நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறதே?

அதுகுறித்து தயாரிப்பாளருடன் பேசியிருக்கிறோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

Rock Fort Muruganantham talks about top actors salary

#BREAKING பள்ளி கல்லூரி & தியேட்டர்கள் திறக்க அனுமதி.. நவம்பர் 30 வரை ஊரடங்கு நீடிப்பு – தமிழக அரசு

#BREAKING பள்ளி கல்லூரி & தியேட்டர்கள் திறக்க அனுமதி.. நவம்பர் 30 வரை ஊரடங்கு நீடிப்பு – தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

schools reopening in tamilnaduகொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் மத்திய அரசு முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியது.

இதன் காரணமாக நாடு முழுவதிலும் கடந்த 7 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் முடிவுற்ற நிலையில் இன்னும் பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

எனவே மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டது..

கடந்த மாதம் மத்திய அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று அனுமதி அளித்தது.

மாநில அரசுகள் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு பற்றி பரிசீலிக்கலாம் என்றும் கூறப்பட்டது.

தமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

மேலும் தீபாவளி பண்டிகை காலத்திற்கு பிறகு 9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.

மேலும் அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.

திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி.. 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட திரையரங்குகளுக்கு நிபந்தனை.

சினிமா சூட்டிங்கில் 150 பேர் வரை கலந்துக் கொள்ள அனுமதி.

நவம்பர் 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இ-பதிவு முறை தொடரும்.

நவ.10 முதல் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதி.

TN Govt allows theatres, schools and colleges to reopen

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் களம் இறங்கும் ‘முன்னேற்ற அணி’ யின் வேட்பாளர்கள் அறிமுகம்

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் களம் இறங்கும் ‘முன்னேற்ற அணி’ யின் வேட்பாளர்கள் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே மூன்று அணிகள் போட்டியிடும் நிலையில், நான்காவதாக
ஒரு அணி களம் இறங்கியுள்ளது. ‘முன்னேற்ற அணி’ என்ற
பெயரில் போட்டியிரும் இந்த அணியில், தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு
யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறார்கள்.

21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் ’முன்னேற்ற அணி’ யின் வேட்பாளர்கள் அறிமுக விழா இன்று சென்னையில் உள்ள பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்றது. இதில், 21 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

வேட்பாளர்களின் பெயர்கள் வருமாறு:

1. எஸ்.ரங்கா (எ) ரங்கா ரெட்டி

2. எஸ்.வி.தங்கராஜ் – சுந்தரா டிராவல்ஸ்

3. ஏ.ஏழுமலை

4. எஸ்.சீனிவாசன் (எ) பவர் ஸ்டார்

5. பி.ஜி.பாலாஜி

6. கே.சுரேஷ் கண்ணன்

7. பி.ராஜேந்திரன் (எ) கெட்டப் ராஜேந்திரன்

8. எஸ்.ஜோதி

9. கே.வி.குணசேகரன்

10. வின்னர் பூமா ராமச்சந்திரன்

11. எஸ்.கமலக்கண்ணன்

12. பி.ராஜசேகரன் (எ) சாந்தகுமார்

13. ஏ.ஜெமினி ராகவா

14. எஸ்.சேகர்

15. கே.ஆர்.சுரேஷ்

16. Lr.Dr.ஆதிவெங்கடாசலம் MA, ML, D.HUM.,

17. வி.சி.கணேசன்

18. பி.ராஜேந்திரன்

19. பெஞ்சமின்

20. எம்.எஸ்.யாகூப்தீன்

21. பி.செல்வகுமார் (எ) நண்டு பாஸ்கி

வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முன்னேற்ற அணியினர் பேசியதாவது:

தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய பதவிக்கு நாங்கள் யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு
உறுப்பினர் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறோம்.
இதற்கு காரணம், ஒவ்வொரு முறையும் போட்டியிடும் அணி மற்றும் அந்த
அணியைச் சார்ந்தவர்கள், சிலருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால்,
தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தேதலுக்கு முன்பு கொடுக்கப்பட்டும் வாக்குறுதிகள் அனைத்தும் கெடப்பில் போடப்படுகிறது. எனவே, தான் எந்த அணியை சாராமல், நாங்கள்
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டிடுகிறோம்.

முன்னேற்ற அணியில் இருப்பவர்கள் அனைவரும் 15 வருட திரைப்பட தயாரிப்பு அனுபவம் கொண்டவர்கள். அதுமட்டும் இன்றி,
நாங்கள் அனைவரும் பல வருடங்களாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினர்களாக பதவி வகித்ததோடு, பலரது
வெற்றிக்கு உழைத்திருக்கிறோம். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறோம்.
அதனால், நாங்கள் அனைவரும் வெற்றி பெறுவது உறுதி. நாங்கள் வெற்றி பெற்று வரும் பட்சத்தில், தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்கு யார் வந்தாலும், அவர்களை வரவேற்பும். அதே சமயம், எங்களுடைய கோரிக்கைகளையும், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகைகளும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள்
செய்யவில்லை என்றால், நாங்கள் அவர்களுக்கு ஆதரவு
அளிக்க மாட்டோம்.

எங்களுடைய முக்கிய கோரிக்கைகள் என்றால், சிறு முதலீட்டு திரைப்படங்களை தொலைக்காட்சிகள் வாங்க வேண்டும். எப்.எம்.எஸ் என்று செல்லக்கூடிய வெளிநாட்டு உரிமம் வாங்க வேண்டும். கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒழுங்குமுறைப்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு இழப்பீடு ஏற்படாமல் செய்ய வேண்டும். இந்தி டப்பிங் உரிமை விற்பனை.
ஆகிய நான்கும் அனைத்து சிறு முதலீட்டு படங்களுக்கு கிடைக்கும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.

தற்போதைய காலக்கட்டத்தில் முதலீடு செய்து திரைப்படம் தயாரிக்கும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு வருமானம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், வருமானம் வருவதற்கான அனைத்து சூழல்களும் இருந்தாலும், அவற்றை சிலர் திட்டமிட்டு தடுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டு சிறு முதலீட்டு
தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வரும் வகையில் பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Power Star’s Munnetra Ani to contest in TFPC election

நான் பிரமாதமான நடிகர் இல்ல.. கேமிரா முன்னால் உடனே நடிக்க முடியாது..; மனம் திறக்கும் சூர்யா

நான் பிரமாதமான நடிகர் இல்ல.. கேமிரா முன்னால் உடனே நடிக்க முடியாது..; மனம் திறக்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

முதன்முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது பின்வருமாறு:

‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து..

சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம், புதுசா ஒரு கற்றல் நடக்குது என்று சொல்வது மாதிரி இந்தப் படம். ‘சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் தான் நடைபெற்றது.

ஒவ்வொரு நாளுமே இதுவரை பண்ணாத விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். அது ரொம்பவே ப்ரஷ்ஷாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. மறுபடியும் சினிமாவை ரொம்ப ரசித்து, சந்தோஷமாக நடித்தது ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பில் கிடைத்தது.

‘சேது’ பார்த்தவுடன் பாலா சாருடன் ஒரு படம் பண்ண வேண்டும் எனத் தோன்றியது. அப்படி, ‘இறுதிச்சுற்று’ படம் பார்த்துவிட்டு, இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு ராக்கி கட்டிவிடும் சகோதரி சுதா கொங்கரா. நண்பர்களுக்குள் வியாபாரம் என்று வரும் போது, கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என நினைத்து நட்பாகவே இருப்போமே என்று கூறி தவிர்த்தது உண்டு. அப்படித்தான் சுதா கொங்கராவிடம் நிறைய விஷயங்கள் பேசுவோம், ஆனால் படம் பண்ணுவோம் என்று சீரியஸாக உட்கார்ந்து பேசியது கிடையாது.

‘இறுதிச்சுற்று’ பார்த்துவிட்டு என் கேரியர் முடிவதற்குள் இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் என தவித்தேன். அப்படி செய்த படம் தான் ‘சூரரைப் போற்று’. என்னை வைத்து அவரால் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க முடிந்தது. ரொம்ப அழகான ஒரு பயணமாக இருந்தது.

இயக்குநராக அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்
‘சூரரைப் போற்று’ படம் பெரிய பயணம். அந்த அனுபவம் எப்படியிருந்தது?

‘SIMPLY FLY’ என்ற புத்தகத்தில் உள்ள ஐடியாவாக இருந்தாலும், 44 பக்க கதையாக கொடுத்தார் சுதா கொங்கரா. அப்போதிலிருந்து பல மாறுதல்கள், ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கிடல் என நானும் கூடவே பயணித்தேன்.

இந்த அனுபவம் எனக்கு வேறு எந்தவொரு படத்திலும் கிடைத்தது கிடையாது.
இந்தியாவின் முகத்தையே ஒரு சிலர் தான் மாற்றினார்கள். அதில் முக்கியமானவர் கோபிநாத்.

ஏனென்றால் விமான போக்குவரத்து துறையை அப்படியே மாற்றினார். அவரைப் பற்றிய விஷயங்களில் எதை எல்லாம் வைத்து கதையாக சொல்லலாம் என எடுத்து சுவாரசியமான திரைக்கதையாக எழுதியிருக்கிறார். பாட்டு, சண்டைக் காட்சி என்பதெல்லாம் இல்லாமல் வெறும் கதையை எமோஷனல் காட்சிகள் மூலமாகவே எந்தளவுக்கு நம்பவைக்க முடியும் என்பதை ‘சூரரைப் போற்று’ உருவான விதத்தின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

எனக்கு ஒரு சில விஷயங்களை அழுத்தமாக சொல்வது பிடிக்கும். இதெல்லாம் முந்தைய படத்தில் பண்ணியிருக்க, அப்படி பண்ணாதே என்று சொல்லி சொல்லி படமாக்கினார் சுதா.

படமாக திரையில் பார்க்கும் போது எனக்கொரு பாடமாக இருந்தது. சுதா இயக்கத்தில் என்னையே நான் வித்தியாசமாக பார்த்தேன்.

சிரிக்காதே என்று அடிக்கடி சொல்வார். படம் முழுக்க சிரிக்காமல் நடித்ததே பெரிய சவாலாக இருந்தது. ஒரு நடிகராக சுதாவின் இயக்கத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தக் கதைக்காக சுதா கொங்கராவின் உழைப்பு பற்றி?..

படப்பிடிப்பு இருக்கோ இல்லையோ, 4 மணிக்கு எழுந்துவிடுவார் சுதா கொங்கரா. ஒரு நாளைக்கான 24 மணி நேரத்தில், 4 – 5 மணி நேரம் மட்டுமே தூங்குவார். மற்ற நேரங்களில் இந்தப் படத்துக்குள் என்ன பண்ணலாம், இன்னும் என்ன மெருக்கேற்றலாம் என்பதை மட்டுமே சிந்திப்பார்.

ஒரு அறையில் உள்ள மனிதர்களில் ஒருவர் ரொம்ப சின்சியராக இருக்கிறார் என்றால் அவரைச் சுற்றியிருப்பவர்களும் அதை பின்பற்ற தொடங்குவார்கள்.
சில படப்பிடிப்பு தளங்களில் காலை 7 மணிக்கு தான் லைட் எல்லாம் இறக்கி வைப்பார்கள். ஆனால், சுதாவினால் காலை 6:40 மணிக்கு ஷாட் எடுக்க முடிந்தது.

ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளமும் அதற்கு முன்னால் தயராக இருக்கும். சுதா கொங்கரா அவ்வளவு உழைத்ததால் தான், நாங்களும் அவரைப் பார்த்து உழைக்க முடிந்தது. யாருமே கொஞ்சம் கூட முகம் சுளிக்கவில்லை.

முன்னணி நடிகராக ஒரு பெண் இயக்குநருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?

பள்ளி, கல்லூரியில் பெண்கள் ஆசிரியர்களாக வரும் போது கற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருப்போமா?. முன்பு திரைத்துறையில் பெண் இயக்குநர் என்ற பார்வை இருந்திருக்கலாம்.

ஆனால் இப்போது அனைத்துமே மாறிவிட்டது. விளையாட்டு தொடங்கி அனைத்து விஷயங்களிலுமே பெண்களிலிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளோம். பெண் இயக்குநராக இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது.

‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பு தளத்தில் சுமார் 200 பேரை அவருடைய கட்டுக்குள் வைத்திருந்தார். அனைவருமே அவருடைய கனவு நனவாக உழைத்திருக்கிறோம். சுதாவிடம் அடுத்தக் கதை எழுதும் போதும் என்னை நினைத்தே எழுது எனக் கேட்டிருக்கிறேன்.

நான், மாதவன், சுதா மூவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். மாதவனுக்கு நான் நன்றி சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் ‘இறுதிச்சுற்று’ ஏற்படுத்திய தாக்கத்தால் தான், இந்த மாதிரியான படங்கள் பண்ண வேண்டும் எனத் தோன்றியது.

இந்தப் படத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால் எது?

இதில் மனைவியிடம் 12 ஆயிரம் ரூபாய் கடன் தர்றீயா என்று கேட்கும் அளவுக்கு உடைந்து போய் தரையோடு தரையாக இருப்பது மாதிரியான கேரக்டர். நான் ஒரு பிரமாதமான நடிகர் கிடையாது. என்னால் கேமிரா முன்னால் உடனே நடிக்க எல்லாம் முடியாது.

ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு ஒரு கதையில் என் வாழ்க்கையில் நடந்த எமோஷன் இருந்தது என்றால் தைரியமாக நடிக்கத் தொடங்கிவிடுவேன்.

சுதாவை எனக்கு முன்பே நல்ல தெரியும் என்பதால், சில காட்சிகளுக்கு முன்பு நிறையப் பேசி நடித்தேன். அது ரொம்ப எளிதாகவே இருந்தது. அதே போல், ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்புக்கு முன்பே அனைத்து விஷயங்களுமே பேசி முடிவு செய்துவிட்டோம்.

ஆகையால் அனைத்து காட்சிகளுமே ஒரு டேக், 2 டேக் தான். சுதாவும் ரொம்பவே உணர்ச்சிமிக்க இயக்குநர். அவர் கண்களில் கண்ணீர் வரும் போது தான் சில காட்சிகள் ஓகே ஆகும்.
இந்தப் படத்தில் மொத்தம் 96 கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள்.

ஒரு வசனம் பேசக் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும், அலுவலகத்துக்கு வரவைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளார் சுதா. க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் டிரைவர் ஒரு வசனம் பேசுவார். அந்த டிரைவரை கூட ஒரு நடிகராக, ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பார்க்க முடியவில்லை.

அந்த வசனம் படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது மாதிரி இருந்தது. அந்தளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மெனக்கிட்டுள்ளார் சுதா.

பி அண்ட் சி சென்டர் ரசிகர்கள் உங்களுக்கு அதிகம். அவர்களுக்கு அந்நியப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்களே. இது எந்தளவுக்கு ரீச்சாகும் என நம்புகிறீர்கள்?

ஒரு ஊருக்கு போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே புரியும். ஒரு போக்குவரத்தின் மூலம் நினைத்த இடத்துக்கு போக முடிகிறது என்றால் மட்டுமே கல்வி, தொழில் அனைத்திலுமே மாற்றம் உண்டாகும். எல்லா வகையான போக்குவரத்தும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் நோக்கம். மாட்டு வண்டி, ஆட்டோ, பஸ் என இருக்காமல் விமான பயணம் கிடைத்ததாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கனவின் எந்தளவுக்கு வைராக்கியம் இருந்தால், அது சாத்தியப்படும் என்று சொல்கிற படமாகவும் ‘சூரரைப் போற்று’ இருக்கும்.

இந்தப் படமே மதுரையில் தான் தொடங்கும். படத்தின் கதையே நீங்கள் கேட்ட மக்களிடமிருந்து தான் தொடங்கும். ஆகையால் எந்த தரப்பு மக்கள் பார்த்தாலும் இது அந்நியப்பட்ட கதையாக கண்டிப்பாக இருக்காது.

சமீபமாக நீங்கள் சொல்லும் சமூக கருத்துகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்தக் கருத்துக்களால் இந்தப் படத்துக்கு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் இருந்ததா?

இதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு செய்தது கிடையாது. பழுதடைந்த ஓடாத விமானத்தில் தான் படப்பிடிப்பு செய்திருப்பார்கள். ஆனால், நாங்கள் நிஜமான விமானம், ஜெட்களில் எல்லாம் படப்பிடிப்பு செய்திருக்கிறோம்.

பாலிவுட்டில் முக்கியமான தயாரிப்பாளர்களுக்கு கூட அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதி என்பது ஒரு பெரிய நடைமுறை. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் எதுவுமே சொல்லவில்லை.

ஒவ்வொரு அலுவலகத்திலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி, இறுதியில் சான்றிதழ் கிடைத்தது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளும் படத்தின் சான்றிதழ் தாமத்துக்கும் சம்பந்தமில்லை.

சினிமாவில் தொடர்ச்சியாக பயணித்து வெற்றி – தோல்வியை பார்த்துவிட்டீர்கள். எந்த விஷயம் உங்களை முன்னோக்கி ஓட வைக்கிறது?

ஏன் பண்ணக் கூடாது, இந்த முயற்சியை ஏன் எடுக்கக் கூடாது என்பது தான் காரணம். நான் நினைத்துப் பார்க்காத ஒரு இடமும் எனக்கு தரப்பட்டுள்ளது.

மறுபடியும் மறுபடியும் நல்ல வாய்ப்புகள் வரும் போது, ஏன் மெனக்கிடக் கூடாது என்ற விஷயம் தான். ஒவ்வொரு புது முயற்சியும் நமக்கு பயத்தைக் கொடுக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஒரு வளர்ச்சி இருக்கும், அடுத்த கட்டத்துக்குப் போக முடியும் என்பது என் நம்பிக்கை. அப்படி வரும் அனைத்து கதைகளுமே நம்மை பயமுறுத்தி, சவாலாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

‘சூரரைப் போற்று’ மாதிரியான வாய்ப்பு வரும் போது, விட்டுவிடக் கூடாது என்பது தான். திடீரென்று சுதா என்னை இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும் என்று சொன்னார்.

கடைசி வரை வேறு யாரைவாது வைத்து செய்துவிடுங்கள், எனக்கு 45 வயதாகப் போகிறது எனச் சொன்னேன்.

விமான போக்குவரத்தை வைத்து இதற்கு முன்பு யாரும் இவ்வளவு பெரிய படமெடுத்தது கிடையாது. ஆகையால், இதில் நிறைய விஷயங்கள் முதல் முயற்சியாக இருந்தது. அப்படியிருப்பதால் மட்டுமே சமரசமில்லாமல் நம்மளே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

அவ்வளவு பெரிய விமான போக்குவரத்து துறையில் எப்படி ஒருவர் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்றார். அவருடைய சவாலான வாழ்க்கை நம்மிடம் வரும் போது, எப்படி நடிக்காமல் விட முடியும் என்பது தான்.

18 வயது பையனாக நடித்த அனுபவம்?

மீசை, தாடியுடன் எல்லாம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்டு, அடுத்த நாளே 18 வயது பையனாக நடிக்க வேண்டியதிருந்தது.

ஆகையால், ஒரே சமயத்தில் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். வருடம் முழுக்க உடலமைப்பில் ஒரு ஒழுக்கத்தை பின்பற்றி வருகிறோம். வருடம் முழுக்க 80% உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது, இந்த கதாபாத்திரத்துக்கு 100% உடற்பயிற்சி செய்ய வேண்டியதிருந்தது அவ்வளவு தான்.

அதுவும் முதல் நாள் படப்பிடிப்பில் முகத்தில் கிராபிக்ஸுக்காக மார்க் எல்லாம் வைத்தார்கள். ஆனால் நானே அந்த வயதுக்கு பொருத்தமாக இருக்கிறேன் என்று விட்டுவிட்டார்கள்.

ட்ரெய்லர் நிறைய காட்சிகள் ரொம்ப மாஸாக இருந்தது. கதையாக கேட்கும் போது எப்படி உணர்ந்தீர்கள்?

ட்ரெய்லரில் பார்த்த மாதிரி நிறைய காட்சிகள் படத்தில் இருக்கிறது. ஊர்வசி மேடம், மோகன் பாபு சார், பரேஸ் ராவல் சார், காளி வெங்கட், கருணாஸ் என அனைவருமே சும்மா ஒரு படத்துக்குள் வந்துவிட மாட்டார்கள். எத்தனை பேருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய வசனங்களோ, காட்சிகளோ இந்தப் படத்தில் இருக்கும். அப்படியொரு கதை, திரைக்கதையை சுதா உருவாக்கியிருந்தார்.

எவ்வளவு நல்ல சினிமா பண்ண முடியும் என்பது சுதா மாதிரி அனைத்து இயக்குநர்களும் பொறுமையாக இருக்க வேண்டும். 2 வருடங்கள் ஆனாலும் உயிரைக் கொடுத்து எழுத வேண்டும். அப்படி எழுதினால் கோடிக்கணக்கான பேருக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்க முடியும்.

இரண்டரை வருட பயணம், அதிகமான பொருட்செலவு அடங்கியிருக்கிறது. இந்தச் சமயத்தில் நீங்கள் 2- 3 படங்களில் நடித்திருக்கலாம். எதற்காக ரிஸ்க் எடுக்கிறீர்கள்?

புகழுக்காகவோ, நம்மளும் இந்தத் துறையில் இருக்கிறோம் என்பதற்காக சினிமா பண்ண மாட்டேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எந்தக் கனவும் பெரியது கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும். அனைத்துமே யாரை சந்திக்கிறோம், யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பது தான்.

இந்தக் கதையைக் கேட்டவுடன் ஏன் நம்ம பண்ணக் கூடாது எனத் தோன்றியது. அதற்குக் காரணம் சுதாவின் எழுத்தில் இருந்த வீரியம் தான். அது தான் அனைத்து நடிகர்களையும் ஒன்று சேர்த்தது என்று சொல்வேன். இந்தப் படம் பட உருவாக்கம், கதை தேர்வு என அனைத்து விஷயத்திலும் என்னை கேள்வி கேட்க வைத்துள்ளது என்று சொல்வேன்.

Actor Suriya shares an emotional post about Soorarai Pottru

More Articles
Follows