தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையைச் சேர்ந்த ரஜினி ரசிகரான இளைஞர் முரளி தற்போது மும்பையில் வசிக்கிறார்.
இந்த ரசிகர் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கொரோனாவில் பெற்றோரை இழந்தவர். தற்போது இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது கிட்னி இரண்டும் செயலிழந்த நிலையில் ட்வீட்டர் தளத்தில் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டிருந்தார்.
அவரின் மகன் தர்சனின் ட்விட்டர் பக்கத்தில்…
தலைவா ரஜினிகாந்த்.. என் இறுதி ஆசை… 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் ரூ. 25000 என்ற நிலையை உருவாக்கி கொடு.
உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரு வருத்தம் என உருக்கமாக பதிவிட்டுள்ள்ர்.
இதனையறிந்த ரஜினிகாந்த் தன் ஆடியோவில்..
முரளி கண்ணா.. நீ நிச்சயம் குணமடைந்து வருவாய்… என் வீட்டிற்கு உன் குடும்பத்துடன் வா. நாம் சந்திப்போம்.
நம்பிக்கையுடன் இரு. நான் இறைவனிடம் உனக்காக பிரார்த்தனை செய்கிறேன் என பேசியுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினியின் ஆடியோவை கேட்ட அந்த ரசிகர் உற்சாகமாகி குணமடைந்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
தற்போது அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாம்.
Rajinikanth wished his fan for speedy recovery