தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாவீரன் கிட்டு படத்தை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு அறம் செய்து பழகு என பெயரிட்டு சூட்டிங்கை நடத்தினார் சுசீந்திரன்.
இத்திரைப்படத்தை “அன்னை ஃபிலிம் பேக்டரி” என்ற நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார்.
இதில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இதில் சந்தீப்க்கு ஜோடியாக “கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா” என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் (Mehreen) இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
ஒளிப்பதிவை லஷ்மண் கவனிக்க, இமான் இசையைமைத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை மாற்ற உள்ளதாக அறிவித்தார் சுசீந்திரன்.
அதன்படி சற்றுமுன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தன் தந்தை நல்லுசாமி படத் தலைப்பை அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
இப்படத்திற்கு நெஞ்சில் துணிவிருந்தால் என்று புதிய தலைப்பை வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
Suseenthiran dad Nallusamy changed Aram Seidhu Pazhagu title