இயக்குநர் ஜீத்து ஜோசப் கதைக்குள் வந்ததும் ‘தம்பி’க்கு சிறப்பு கூடியது – நடிகர் கார்த்தி

இயக்குநர் ஜீத்து ஜோசப் கதைக்குள் வந்ததும் ‘தம்பி’க்கு சிறப்பு கூடியது – நடிகர் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthi‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நடிகர் கார்த்தி பகிர்ந்துக்கொண்டதாவது.

இந்த படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு கதையை விரிவாக எழுதி கூறும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு அண்ணி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், அவரிடம் ஆலோசித்திருக்கிறார்கள். அண்ணி சம்மதம் தெரிவித்துள்ளார். எனக்கு முன்பே அண்ணி கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். என்னிடம் அதைக் கூறும்போது உற்சாகமாக இருந்தது. இருவரும் பணியாற்ற வேண்டுமென்பதால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா? என்று யோசித்து தான் முடிவெடுத்தோம். மேலும், ஜீத்து ஜோசப் சார் இயக்கம் என்றதும் இன்னும் சிறப்பு கூடியது. ஏனென்றால், அவருடைய ‘த்ரிஷ்யம்’ பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணியில் இருக்கும். அதேபோல், அவர் கதை கூறும் பாணியும், நேர்த்தியும் உறுதியாக இருக்கும். அவர் கதைக்குள்ள வந்தபிறகு இன்னும் சற்று மெருகேற்றினார். இப்படம் குடும்ப கதையை மையப்படுத்தியது என்பதால், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

இக்கதையைப் பற்றி நான் கூறினால் முழு படத்தையும் வெளியிடுவது போல் ஆகிவிடும். ஆகையால், ஏதோ ஒரு விஷயம் பிடித்ததால் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். நிச்சயம் வித்தியாசம் இருக்கும். உதாரணத்திற்கு, ‘பையா’ படத்தில் வித்தியாசமான காதல் கதை. படம் முழுவதும் இரண்டே பேர் தான். அதிலும், காரில் தான் பயணம். இதுபோன்ற தனித்தன்மையான, வித்தியாசமான கதை மற்றும் நடிப்பிற்கு வாய்ப்பும் இருந்தது என்பதால் தான் நடித்தேன். மேலும், என் கதாபாத்திரமும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தது.

எனது அண்ணியை படப்பிடிப்பில் பார்க்கும்போது வீட்டில் எப்படியோ.. அப்படித்தான் தோன்றினார். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால், அவர் பணிபுரிந்து நான் பார்த்ததில்லை. இங்குதான் பார்த்தேன். படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேசவேண்டும்? என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு தயாராக வருவார். அவருடைய கலாச்சாரம் எனக்கு பிடித்திருந்தது. அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள பெரிய உழைப்பு தெரிந்தது.

மேலும், இப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. என்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. ஆகையால், என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்திற்கு ஒன்றி இருப்பதால், நடிப்பது சுலபமாக இருந்தது. இப்படத்தின் கதை கோவாவில் ஆரம்பிக்கும். அங்கிருக்கும் மக்களுக்கேற்ப பார்வையை மட்டும் சிறிது மாற்றினோம். அங்கிருந்து கதை மாறும்போது என்னுடைய கதாபாத்திரமும் மாறும்.

இப்படத்தின் பலமே நடிகர்கள் தான். சத்யராஜ் சார் பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இளவரசு இருக்கிறார். ‘சௌகார்’ ஜானகி அம்மா நடித்திருக்கிறார். அவருக்கு 88 வயதாகிறது. இதுவரை கிட்டதட்ட 400 படங்களில் நடித்துவிட்டார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கும். அனைத்துமே சுவாரஸ்யமான காட்சிகளாக இருக்கும். இத்தனை வயசானாலும் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். ஒருசில தோல்விகளிலேயே நாம் துவண்டு விடுகிறோம். ஆனால், அவர் இத்தனை ஆண்டு அனுபவத்தில் எத்தனை தோல்விகளைச் சந்தித்திப்பார். இருப்பினும், துவண்டுவிடமால் கொள்ளு பேரப்பிள்ளைகள் வரை அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இன்றும் தானே சமைத்து சாப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல், படக்குழுவிற்கு இரண்டு நாட்கள் சமைத்துக் கொடுத்திருக்கிறார். வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார். பணி என்று வந்துவிட்டால் நேர்மையாக இருக்கிறார். அவர் காலத்து கலாச்சாரம் நம்மை வியப்படைச் செய்கிறது.

சத்யராஜ் சார் இத்தனை படங்கள் நடித்துவிட்டோம். நமக்கு எல்லாம் தெரியும் என்றில்லாமல், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய முதல் படம் மாதிரி இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இத்தனை ஆண்டுகள் நடித்தாலும் சிறிதும் சலிப்படையாமல் ஆர்வத்துடன் ரசித்து செய்கிறார்.

ஜீத்து ஜோசப் படம் என்றால், அவர் கதையை நேர்த்தியாக நகர்த்திக் கொண்டுபோகும் விதம், கதாபாத்திரங்கள், அனைத்து நடிகர்களுக்கும் நடிப்பதற்கான சந்தர்ப்பம் இப்படி அனைவரும் என்ன எதிர்பார்த்து வருவார்களோ, அது அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. முக்கியமாக, உணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. இது மாதிரி நிறைவான படம் அரிதாகத்தான் வருகிறது. மலையாளத்தில் கலைஞர்களுக்கு நடிப்பதற்கான இடமும், சந்தர்ப்பமும் நிறைய இருக்கும். அதை எங்களுக்கும் கொடுத்தார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்த அனுபவம், பெரிய இயக்குநரிடம் நடிக்கிறோம் என்றில்லாமல் இயல்பாக இருந்தது. அனைவரும் இணைந்து தான் இப்படத்தை எடுக்கிறோம். அனைவரும் ஒரே குடும்பமாக செயலாற்றி இப்படத்தை முடித்தோம். 2 1/2 மணிநேரம் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பவர்கள் நிறைவாக திரும்ப வேண்டும் என்று கூறினார். மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் என்னிடம் மட்டுமல்லாமல், உதவி இயக்குநர், நடிகர் நடிகைகள், அண்ணி என்று எல்லோருடனும் கலந்து ஆலோசிப்பார். இந்த காட்சியை இதைவிட இன்னும் சிறிது மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினால், அதையும் ஏற்றுக் கொள்வார். அதேபோல், அன்று வரவேண்டிய நடிகர் நடிகைகள் யாரேனும் வரமுடியாது என்று கூறினால், படப்பிடிப்பை ரத்து செய்ய மாட்டார். உடனே முடிவெடுத்து வேறு விஷயங்களை செய்து முடிப்பார்.

வசனங்களுக்கு மணிகண்டனிடமும், மேலும் இரண்டு இணை இயக்குநர்களிடமும் கலந்தாலோசித்து அன்றைக்குத் தேவையான வசனங்கள் அர்த்தம் மாறாமல் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்வார்.

‘96’ படத்திற்குப் பிறகு கோவிந்த் வசந்தா இசையமைக்கும் படம் இது. அவர் கூறும்போது, இப்படத்திற்காக நான் வித்தியாசமான, பலவிதமான இசையை முயற்சி செய்திருக்கிறேன் என்றார். ஒரு காதல் பாடல் இருக்கிறது. சின்மயி பாடியிருக்கிறார். திரில்லர் படம் என்பதால் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை கோவிந்த் வசந்தா சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு உணர்வையும் தன் இசையின் மூலம் மேலெடுத்துக் கொடுத்திருக்கிறார். இவரின் இசை இப்படத்திற்கு பெரிய பலம்.

டிசம்பர் 20-ம் தேதி ‘தம்பி’ படம் வெளியாகிறது. இப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. வருட கடைசியில் பண்டிகை தருணத்தில் அனைவரும் கொண்டாடக்கூடிய படமாகவும், புது அனுபவமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு நடிகர் கார்த்தி ‘தம்பி’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

சூர்யாவின் 2D Entertainment வழங்கும் “சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !

சூர்யாவின் 2D Entertainment வழங்கும் “சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sunaina and samuthirakaniநல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் அடையாளம் மூலம் அறிமுகமாகும் போது அதன் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு சரியான முறையில் மார்கெட்டிங் செய்யப்பட்டு, பெருமளவு மக்களை சென்றடைந்து,வெற்றி பெறும் போது தான் அவனது படைப்புலகம் பூரணத்துவம் பெறுகிறது.

கடந்த சில வருடங்களில் மிக நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் மிக பெரிய நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியாகி பெரு வெற்றியை அடைந்து வந்துள்ளது.

ஒரு சிறு டீஸர் மூலமாகவே இணைய உலகின் கவனம் ஈர்த்த படம் “சில்லுக்கருப்பட்டி”. இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ( 2D Entertainment ) வாங்கியிருப்பது இப்படத்தின்மீது பன்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிறந்த வெளியீடாக உருவாகியுள்ள சிக்னேச்சர் வெளியீடாக ( Sakthi film factory signature release ) இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள படங்களை கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து தந்து வருகிறது. அந்த வகையில் மிக நல்ல படமாக இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள “சில்லுக்கருப்பட்டி” படத்தின் மீதான ஈர்ப்பில் அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளார் 2D Entertainment நிறுவன CEO ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிக்னேச்சர் வெளியீடு ( Sakthi film factory signature release ) என்பது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட, சினிமாவை பெரும் காதலுடன் அணுகும் படங்களை மட்டும், மிக கவனமுடன் தேந்தெடுத்து, பெருமளவு ரசிகர்களுக்கு, பிரத்யேகமாக இந்த அடையாளத்துடன் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி ஆகும். இந்த அடையாளத்துடன் வெளியாகும் முதல் திரைப்படம் “சில்லுக்கருப்பட்டி” என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை மிகச்சரியான தேதியில் மிகப்பிரமாண்ட வெளியீடாக வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம் என்கிறார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிர்வாகி சக்திவேலன்.

இயக்குநர் ஹலிதா சமீம் கூறியதாவது…
நான் மிகப்பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன் “சில்லுக்கருப்பட்டி” படத்தினை பார்த்த மாத்திரத்தில் சூர்யா சார், ஜோதிகா மேடம் இருவரும் மனதார எங்களது குழுவை பாராட்டினார்கள். மேலும் உடனடியாக இப்படத்தின் உரிமையை வாங்குவதாக அறிவித்தார்கள் இதை விட மகிழ்ச்சி தரும் விசயம் எங்களுக்கு ஏதுமில்லை என்றார்.

“சில்லுக்கருப்பட்டி” நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளை கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். Divine Productions சார்பில் வெங்கடேஷ் வேலினீனி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன். சாரா அர்ஜீன், மணிகண்டன் K, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் சாக்ஷி அகர்வால்

ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sakshi Aggarwalதமிழ் திரை உலகில் தொடர்ந்து நாயகிகள் ஆதிக்கம் செலுத்தும் காலக் கட்டம் இது. Holly wood மற்றும் ஹிந்தி திரைப் படங்களின் பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்டு வரும் படங்களின் எண்ணிக்கை தமிழ் திரை உலகில் வெகுவாக வளர்ந்து வருகிறது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படும் இந்த வகை படங்கள் பெரும்பாலும் action படங்களே.

பிக் பாஸ் சீசன் 3 மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற சாக்ஷி அகர்வால் பெயரிடப் படாத ஒரு புதிய படத்தின் மூலம் action அவதாரம் எடுக்க இருக்கிறார். “களிறு” என்ற படத்தை இயக்கிய ஜி ஜே சத்யா இயக்கும் இந்தப் படத்துக்காக சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிட தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள பெயரிடப்படாத இந்த படத்தை பற்றி இயக்குனர் ஜி ஜெ சத்யா கூறியதாவது ” பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மன உறுதியை வெளிப் பட செய்தார் என்றால் மிகை ஆகாது. அந்த மன உறுதியும், திடமும் என் கதையின் நாயகி அவரே என தீர்மானிக்க உதவியது. அவரை அணுகிய போது சற்றே தயங்கினாலும் பின்னர் முழு மனதுடன் ஒப்புக்கு கொண்டார். நாயகியின் பாத்திர தன்மைக்கு ஏற்ப தீவிர சண்டை பயிற்சியில் ஈடுப் பட்டு தன் திறமையை மெருகேற்றிக் கொண்டார். இந்த அர்ப்பணிப்பு இவரை மென்மேலும் உயர்த்தும் என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை. கதைக்கு ஏற்ப சில தலைப்புகளை நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். ஒரு சில நாட்களில் ஒரு சிறப்பான தலைப்பை வெளி இடுவோம். படத்தில் மேலும் இரண்டு முக்கிய கதா பாத்திரங்கள் உள்ளன, அதற்காக பல்வேறு பெயர்கள் பரிசீலனை செய்து வருகிறோம். விரைவில் மற்ற நடிக, நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரங்களையும் வெளி விடுவோம்” என்றார்.

தர்பார் டிரைலர் நாளை ரிலீஸ்; சும்மா கிழி லெவல் ரஜினி போஸ்டர்

தர்பார் டிரைலர் நாளை ரிலீஸ்; சும்மா கிழி லெவல் ரஜினி போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar Trailer launch will be held at Mumbai on 16th Dec 2019சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் முதன்முறையாக இணைந்துள்ள படம் தர்பார்.

நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில்ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் சென்னையில் டிசம்பர் 7ஆம் தேதி வெளியானது. இந்த பாடல்கள் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் தர்பார் டிரைலர் நாளை டிசம்பர் 16ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என முருகதாஸ் அறிவித்தார். அப்போது போஸ்டர் ஒன்றும் வெளியிடவில்லை.

இதனை முன்னிட்டு இன்று தர்பார் பட ஆக்சன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நாளை மும்பையில் நடைபெறவுள்ள விழாவில் தர்பார் டிரைலர் வெளியாகிறது.

இதில் ரஜினி, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

Darbar Trailer launch will be held at Mumbai on 16th Dec 2019

Darbar Trailer launch will be held at Mumbai on 16th Dec 2019

மறுபிறந்தாள் (HRE REBIRTH); யுவன் அறிமுகப்படுத்தும் இசை ஆல்பம்

மறுபிறந்தாள் (HRE REBIRTH); யுவன் அறிமுகப்படுத்தும் இசை ஆல்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marupiranthaal Her Rebirth Yuvan brings yet another musical showpieceயுவன் சங்கர் ராஜாவின் U1 Records நிறுவனம் தொடர்ச்சியாக புதிய இசையை, புத்தம் புது திறமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் தான் ஷஹானி ஹஃபீஸ்ன் “மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ). யெல்தோ P ஜான் இசையில் ருக்‌ஷீனா முஸ்தபா வரிகளில் அம்மா, மகள் கூட்டணியான Dr ஷஹானி ஹஃபீஸ்,ரெஹயா ஃபாத்திமா பாடியுள்ள வீடியோ பாடலே “மறுபிறந்தாள்”.

Dr ஷஹானி ஹஃபீஸ் இந்த இசை ஆல்பத்தின் திரைவடிவத்தின் கருவை உருவாக்கி, தயாரித்துள்ளார். மேலும் ஆதர்ஷ் N கிருஷ்ணாவுடன் இந்த இசை ஆலபத்தை இயக்கியுள்ளார் Dr ஷஹானி ஹஃபீஸ்.

பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட், சமூக செயற்பாட்டாளர், மேடை நாடக கலைஞர், திருநங்கை ரெஞ்சு ரெஞ்சிமார், ரோஸ் ஷெரீன் அன்சாரியுடன் இணைந்து நடித்திருக்கும் இந்த ஆல்பம் பாடல், திருநங்கை தாயுக்கும் அவரது வளர்ப்பு மகளுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

ஆணாதிக்கம் மாறாத இவ்வுலக சமுதாயத்தில் அனைத்து குற்றங்களுக்கும் குற்றவாளியாக பெண்ணையே கை காட்டுகிறது. பெண்ணின் ஒழுக்கம் காக்க சொல்லும் சமுதாயம் அவளை அடக்குவதிலேயே தான் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறது.

ஆனால் இங்கு மாற வேண்டியது சமுதாயமே. பெண்ணிற்கான உரிமையை அளிப்பதான சமூகமாக, நாம் அனைவரும் இணைந்தே இந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனும் கருத்தை தான் இந்த பாடல் சொல்கிறது.

இந்த ஆல்பம் பாடலுக்கு அபி ரெஜி ஒளிப்பதிவை கையாள ப்ரேம்சாய் முகுந்தன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஆல்பம் பாடலை உருவாக்கிய Dr ஷஹானி ஹஃபீஸ் ஒரு ஆயூர்வேத நிபுணர். கேராளாவில் இயங்கி வ்ரும் ஆயூர்வேத மருந்துகள் தயாரிக்கும் Ayurveda Naturals நிறுவனத்தை நிறுவியவர். இது தவிர கேரளாவை தலைமையிடமாக கொண்டு வரும் Ayurveda Media company ன் நிறுவனராகவும் நிர்வாக பங்குதாரராகவும் உள்ளார்.

கவிதைகள், இலக்கியம், இசை மீது அதீத ஆர்வம் கொண்டு தன்னை அவ்வுலகில் இணைத்துகொண்டுள்ளார். தற்போது சமூக நல நோக்குடன் கூடிய கருத்தை மையமாக கொண்டு ஒரு குறும்படம் இயக்கி வருகிறார்.

மறுபிறந்தாள் ( அவளது மறுபிறப்பு ) உலகம் முழுதும் திரைவிழாக்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

சிறந்த வீடியோ பாடல் விருதை International Thai Film Festival, Bangkok ல் பெற்றுள்ளது. (இந்தியாவிலிருந்து அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மியூசிகல் வீடியோ என்பது குறிப்பிடதக்கது ), Calcutta International Cult Film Festival ( Entry for Golden Fox Awards), Buddha International Film Festival – Pune, Festigious International Film Festival, Los Angeles, ( Bronze medalist) Global Music Awards, California, Semi Finalist to Rome Prisma Awards – Italy. ஆகிய இடங்களில் கலந்து கொண்டுள்ளது.

மேலும் இந்தியாவில் International Documentary & Short Film Festival of Kerala, AAB International Film Festival, Punjab, LGBTQ Shorts Film Festival – United States, International Short Film Festival of Pune, Chambal International Film Festival, Rajasthan and Jaipur International Film Festival 2020 ஆகிய இந்திய திரைவிழாக்களுக்கும் இந்த வீடியோ பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Marupiranthaal Her Rebirth Yuvan brings yet another musical showpiece

Link : https://youtu.be/A6NNARFewFs

ரஜினியை காக்க வைத்த யோகிபாபு; தர்பார் சூட்டிங்கை முடிக்காத முருகதாஸ்

ரஜினியை காக்க வைத்த யோகிபாபு; தர்பார் சூட்டிங்கை முடிக்காத முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director AR Murugadoss shoot Darbar final shotsமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் அடுத்த ஆண்டு 2020 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் பாடல்களை கடந்த டிசம்பர் 7ஆம் தேதி வெளியிட்டனர்.

டிசம்பர் 16ஆம் தேதி மும்பையில் இப்பட டிரைலரை வெளியிட உள்ளனர்.

இந்த படத்தை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இந்த செய்தி இருக்கும் எனத் தெரிகிறது.

படத்தில் சில காட்சிகளில் திருத்தம் இருப்பதால் சில காட்சிகளை ரீ சூட் செய்திருக்கிறார்களாம். முன்பே இது தெரிந்தாலும் அந்த காட்சிக்கு யோகிபாபுவின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.

எனவே யோகிபாபு வரும் வரை காத்திருப்போம் என ரஜினி பெருந்தன்மையுடன் கூறியிருந்தாராம். தற்போது யோகிபாபு வந்துவிட்டதால் மீதமுள்ள அந்த காட்சிகளை முருகதாஸ் சூட் செய்திருக்கிறார்.

Director AR Murugadoss shoot Darbar final shots

More Articles
Follows