தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இறைவி படம் நேற்று வெளியானது.
இதில் சில காட்சிகளில் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்துள்ளதற்கும், அவதூறாகப் பேசியதற்கும் தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
எனவே, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட் கார்டு விதிக்குமாறு தயாரிப்பாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே இன்று தயாரிப்பாளருக்களுக்கான சிறப்பு காட்சியை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜா ஏற்பாடு செய்துள்ளார்.
இதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் மீதான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் கங்காரு, லட்டு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனருக்கு அறிக்கை எழுதியுள்ளார். அதில்…
“உங்களின் இறைவி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அற்புதம்.
சிறிய வயதிலேயே இயக்குநராகும் அதுவும் தயாரிப்பாளர் மனது வைத்ததால் இயக்குனராகும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். தற்போது 3வது படத்திலேயே முக்கியத்துவம் பெற்றுவிட்டீர்கள்.
இதற்கு காரணமான தயாரிப்பாளர்களை என்கிற ஒரு இனத்தையே விஜி முருகன் என்பவரின் கேரக்டர் மூலம் அவ்வளவு கேவலப்படுத்தியுள்ளீர்கள்.
தயாரிப்புக்கு முன்னாடி நான் என்ன பண்ணிக்கிட்டிருந்தேன்னு தெரியுமா? என்று கேட்பது முதல் தொடங்கி, ஒரு தயாரிப்பாளர் என்பவன் படு கேவலமானவன் போன்று சித்தரித்துள்ளீர்கள்.
தயாரிப்பாளருக்கு கதை ஞானமே கிடையாது என்பதைப் போலவும் காட்டியுள்ளீர்கள்.
உயிரைச் சிந்தி காசு எடுத்துட்டு ஒருவன் வருவான். அவன் காசில் படமெடுத்துவிட்டு அவனையே காறி உமிழ்வது போன்ற காரியத்தை எப்படி உங்களால் செய்ய முடிந்தது?
ஏவிஎம் சரவணன் சார் மாதிரி பெரியவர்கள் இப்படத்தைப் பார்த்தால் எப்படி நொந்து போவார்கள்?
தயாரிப்பாளர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியதை ஒரு தயாரிப்பாளனாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
படம் எடுத்து தோல்வி அடைந்து வாழ்க்கையின் அடித்தட்டுக்கே வந்துவிட்ட தயாரிப்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஆனால் நடுத்தெருவுக்கு வந்த இயக்குனர்களை உங்களால் காட்ட முடியுமா? பார்ப்போம்?
காட்சிப்படுத்துதல் முக்கியம்தான். ஆனால் காயப்படுத்துதல் கூடாது என்பதில் கவனமாக இருங்கள் கார்த்திக்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.