தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொலைக்கார பாவி… இந்த சொல் கொரோனா வைரசுக்கு மிகச்சரியாக பொருந்தும். கடந்த 1 மாத காலமாக உலகில் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.
சீனாவில் தொடங்கி அங்கு பல உயிர்களை கொன்று இத்தாலி நாட்டுக்கு சென்றது.
அந்த நாட்டில் விடுமுறை மற்றும் ஊரடங்கு உத்தரவு விடுத்தும் மக்கள் எச்சரிக்கையாக இல்லாமல் வாழ்ந்தனர்.
இதனால் இந்த கொரோனா வைரஸ் பல உயிர்களை கொன்றுவிட்டது.
இந்த நிலையில் தான் நாளை மார்ச் 22ஆம் தேதி கொரோனாவை தடுக்க காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வைரசானது கிட்டதட்ட 12 முதல் 14 வரை மணி நேரம் வரை தான் உயிரோடு இருக்கும். அப்போது மனிதர்களை வெளியே செல்லாமல் இருந்தால் மற்ற ஒருவருக்கு தொத்திக் கொள்ளாமல் இருக்கும்.
மேலும் நாளை மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து கைத்தட்டி இந்த கொரானாவை எதிர்த்து போராடும் மக்களுக்கு தங்களை பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மோடி.
தற்போது இது தொடர்பான கொரானா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
Super Star Rajinis Corona awareness video released
இதோ அந்த வீடியோ….