தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல பல நாடுகளில் அதன் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் மூலமாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் பாலிவுட் பாடகி கனிகா கபூர் செய்த காரியத்தை பார்த்தால் நிச்சயம் எல்லாரும் ஆவேசம் அடைவார்கள் என்பதுதான் உண்மை.
இவர் லண்டனுக்கு சென்று மார்ச் 15ம் தேதி இந்தியா திரும்பினார்.
இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இரண்டு வாரங்கள் தனிமை படுத்தப்படுவதில் இருந்து தப்பிக்க கனிகா ஏதோ ஒரு வழியில் தப்பியுள்ளார்.
தான் லண்டன் சென்று வந்ததை மறைத்துள்ளார்.
மேலும் தன் நண்பர்களுக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளார்.
அதில் சுமார் 100 பிரபலங்கள் வரை பங்கேற்றுள்ளனர். இதனால் பலருக்கும் பரவியிருக்கலாம் எனலாம் தெரிய வந்துள்ளது.
மேலும் கனிகா தங்கியிருந்த அபார்ட்மென்டில் வசித்து வரும் பலருக்கும் கொரோனா பரவி இருக்குமா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
எனவே அந்த கட்டிட வாசிகள் முழுவதையும் தனிமை படுத்தவுள்ளனர் என கூறப்படுகிறது.
தன்னிடம் நோயுள்ளதை தெரிந்த பின்னும் மற்றவர்களின் வாழ்க்கையைல் விளையாடிய கனிகா கபூர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Kanika Kapoor tests corona positive She hid travel and threw party