தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தான் சொல்ல விரும்பும் கருத்தை பெரும்பாலும் ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகிறார்.
இதனால் இவரை அடிக்கடி ட்விட்டர் அரசியல் செய்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் இருளை அகற்ற அனைவரும் அகல் விளக்கு ஏற்ற சொல்லியிருந்தார் பிரதமர் மோடி.
மோடியின் இந்த செயலைக் கண்டித்து 3 பக்க கடிதம் ஒன்றை கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
ஒரு பிரதமருக்கு இப்படியொரு காட்டமான கடிதத்தை யாரும் எழுதியிருக்க மாட்டார்கள் என்றனர்.
அந்த கடிதத்தில் பண மதிப்பிழப்பு எப்படித் திட்டமிடப்படாமல் நடத்தப்பட்டதோ, அதேபோல் ஊரடங்கும் சரியாகத் திட்டமிடப்படவில்லை.
அடித்தட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.. இது பால்கனியில் வாழும் மக்களுக்கான பால்கனி அரசு… என பல விஷயங்களை சுட்டிக் காட்டியிருந்தார் கமல்.
சிலர் வழக்கம் போல விமர்சித்தாலும் பலர் பாராட்டியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று தான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஸ்ரீப்ரியா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
“ஏன் கடிதம் எழுதுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, என்ன செய்வது? நேரே சென்று மனுக்கள் கொடுக்க முடியாது, பொதுக்கூட்டங்கள் போட்டு மக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூற இயலாது. அப்புறம்? சமூக ஊடகம், தொலைப்பேசி, கடிதம். தகவல் போய்ச்சேர வேண்டுமே… சரிதானே?” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sri Priya clarifies Why Kamal wrote letter to Modi