தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வடமாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது.
இங்கே வந்த அந்த கிரிமினல்ஸ் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர்.
பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது.
ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்கு சென்ற நாயகன் பண்னையாரின் மகளை நேசிக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையை காட்ட, இதை அறிந்து கொண்ட ஹீரோ அக்கும்பளை சூறாவளி போல் சூறையாட தயாராகிறார்.
அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா?
கதை சுருக்கம்
தமிழில் கவர்ச்சியில் புகழ் பெற்ற சில்க் ஸ்மிதா அளவுக்கு கன்னடத்தில் தற்போது கவர்ச்சியில் கலக்கும் ஆலிஷா “சூறாவளி” தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கார்.
சென்னைக்கு வர தேதியில்லாததால் சூறாவளி படக்குழுவினர் மைசூர்க்கு சென்று அரசுக்கு சொந்தமான ஒரு காட்டு பங்களாவில் அனுமதி வாங்கி படப்பிடிப்பிற்கு தயாரான, கூட்டத்தை பார்த்து மிரண்டு போன அதிகாரிகள் அனுமதி மறுக்க அன்று ஒரு இரவுக்கு மட்டும் அனுமதி வாங்கி அன்றே படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கிறார்கள்.
பாடல் சூப்பராக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
தயாரிப்பு நிறுவனம் – லால்ராய் அசோசியேட்ஸ்
நடிகர்கள் – தர்மா, தர்ஷினி, ஆலிஷா
இசை அமைப்பாளர் – ஜேக்கப் சாம்யேல்
கேமராமேன் – சந்திரன்சாமி
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாலு & பால்கி
தயாரிப்பு – P. லால்பகதூா்
Sooravali movie shoot wrapped up in mysore