அமெரிக்காவில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

அமெரிக்காவில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்படவிழாவிலும் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” தேர்வாகியுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டுகொண்டிருக்கும் இத்திரைபடத்திற்க்கு திரைப்ப்ட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது
சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது.

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடதக்கது.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரன்; கடுப்பான ரஜினி ரசிகர்கள்

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரன்; கடுப்பான ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Suseenthiran invites Ajith to enter into Politics தமிழக அரசியல் எப்படி இருக்கிறது? என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். யாராவது நல்லவர் ஒருவர் வந்து தமிழகத்தை காப்பாற்ற மாற்றாரா? என அனைவரும் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவர்கள்.. தலைவா…. வா.. நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டார்.

பொதுவாக திரையுலகினர் ரஜினியை தலைவா என அழைப்பார்கள். எனவே அவர் ரஜினியைத்தான் குறிப்பிடுகிறார் என நினைத்தனர்.

ரஜினி ரசிகர்களும் அவ்வாறே நினைத்து உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு தலைவா என்பதை அஜித்தை குறிப்பதாக சுசீந்திரன் பதிவிட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகினர்.

அந்த பதிவில் “40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன்.

இது தான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு…. உங்களுக்காக காத்திருக்கும், பலகோடி மக்களில் நானும் ஒருவன்” என்று தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2017-ம் ஆண்டு “சினிமா துறையில் இருந்து அடுத்து யார் முதல்வராக வர தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு, நான் அளித்த பதில் கமல் சார், அஜித் சார் வந்தா நல்லா இருக்கும்” என்று சுசீந்திரன் கூறியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால் அரசியலே வேண்டாம். அஜித்தே போதும என தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏனென்றால் 2 மாதங்களுக்கு முன் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என அஜித் அறிக்கை விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Suseenthiran invites Ajith to enter into Politics

இந்தியாவிலேயே இந்த வார சிறந்த படமாக ‘நெடுநல்வாடை’ தேர்வு

இந்தியாவிலேயே இந்த வார சிறந்த படமாக ‘நெடுநல்வாடை’ தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pycker website selected Nedunalvaadai as best movie in this weekபலகோடிகளில் சம்பளம் வாங்குகிற டாப் ஸ்டார்களின் படங்களே வசூலுக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும் சூழலில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள ‘நெடுநல்வாடை’ படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

இச்செய்திக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் வட இந்திய இணையதளம் ஒன்று இப்படத்தை இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வங்க மொழி ஆகிய 5 மொழிகளில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அனைத்து படங்களையும் தீர ஆராய்ந்து, அதில் ஒரே ஒரு படத்தை மட்டும் வாரத்தின் சிறந்த படமாக தேர்வு செய்து வெளியிடுகிறது பைக்கர்.காம் (pycker.com) எனும் இணைய தளம்.

இந்த வாரம், தெலுங்கில் 5 படங்களும் (வேர் ஸ் த வேங்கடலட்சுமி, ஜஸ்ஸி, பிலால்பூர் போலிஸ் ஸ்டேஷன், மவுனமே இஷ்டம், வினரா சோதரா வீர குமாரா), இந்தியில் மேரே பயாரே பிரைம் மிநிஸ்ட்டர் மற்றும் போட்டோகிராப் உட்பட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் வெளியானபோதும், இந்நிறுவனம் தமிழ் படமான ’நெடுநல்வாடை’யை இவ்வாரத்தின் மிகச்சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழில் சமீபத்தில் வந்த படங்களில் அதிகபட்சமாக இந்தப் படத்துக்கு 3.7 ரேட்டிங் கொடுத்துள்ள இந்தத் தளம் இப்படத்தையும் அதில் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ள பூ ராமுவையும் பெரிதும் பாராட்டி உள்ளது.

இந்த வெற்றிச்செய்தியால் பூரித்துப்போயுள்ள அவரது நண்பர்களான 50 தயாரிப்பாளர்களும் இயக்குநர் செல்வக்கண்ணனுக்கு என்ன பரிசளிக்கலாம் என்று தங்களது வாட்ஸ் அப் பக்கத்தில் பரபரப்பாக விவாதித்து வருகிறார்களாம். சினிமாவில் போட்ட பணம் திரும்பிவருவதென்றால் சும்மாவா?

Pycker website selected Nedunalvaadai as best movie in this week

இசையோடு மொழி உச்சரிப்பும் அமைந்தால்தான் அழகு.. : இமான்

இசையோடு மொழி உச்சரிப்பும் அமைந்தால்தான் அழகு.. : இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composer Imman talks about Universal Vocals and Sabthaswaram 2இசைக்கு தேசங்கள் மாநிலங்கள் என்ற பேதம் கிடையாது. இசையால் எந்த தேசத்தில் இருக்கும் இதயங்களையும் ஒரு புள்ளியில் இணைக்க முடியும். அப்படியான இசையால் பலரையும் கவர்ந்திழுத்த கனடா இசைக்கலைஞர்கள் சப்தஸ்வரங்கள் 2 என்ற இசை ஆல்பத்தை வெளியீட்டார்கள்.

கனடாவில் யுனிவர்செல் வோக்கல் அமைப்பை நிறுவி தமிழ் கலைஞர்களை ஊக்குவித்து வருபவர் ரூபன்ராம். யுனிவர்செல் வோக்கலின் இந்திய ஒருங்கிணைப்பாளர் துஷ்யந்தன் மற்றும் பாடகர் மகாலிங்கம் விழாவிற்கான அனைத்தையும் ஏற்பாடு செய்தனர்.

இந்த விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் டி.இமான், தினா, பாடலாசிரியர் அருண்பாரதி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

விழாவில் இசை அமைப்பாளர் இமான் பேசியதாவது..

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் யுனிவர்செல் வோக்கல் டீமிக்கு எனது வாழ்த்துகள். கனடாவில் நான் இரண்டு இசை ஆல்பம் பண்ணியிருக்கிறேன். கனடா எனக்கு நிறைய கெளரவம் கொடுத்திருக்கிறது.

தமிழ் இருக்கை அமைப்பிற்கான அம்பாசிடராக இருக்கும் பெருமையையும் பெற்றிருக்கிறேன். அங்குள்ள திறைமையாளர்கள் இங்குள்ளவர்களோடு இணைந்து இப்படி ஒரு ஆல்பத்தை கொடுத்திருக்கிறார்கள். இதுபோல் இன்னும் நிறைய ஆல்பங்கள் அவர்கள் பண்ண வேண்டும்.

மேலும் வேறலெவல் விசயங்கள் நிறைய அவர்கள் செய்யவேண்டும். இந்தவிழா சாதாரண இசை ஆல்ப வெளியீட்டு விழா போல் அல்ல. ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா போன்று இருந்தது.

இந்தக் குழந்தைகள் இன்னும் பெரிதாக சாதிக்க வேண்டும். அவர்கள் மொழியை உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகாக இருந்தது. இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு” என்று மனதார வாழ்த்தினார்.

விழாவில் இசை அமைப்பாளர் தீனா பேசியதாவது..

“முதலில் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு சார்பாக கனடா தமிழ் இசைக் கலைஞர்களை வருகவருகவென வரவேற்கிறேன். கனடாவில் நம் தமிழர்கள் 300ஆண்டுகளுக்கு முன்பே அங்கு சென்று தங்களது யுக்திகளையும்திறமைகளையும் நிறுவியவர்கள்.

அவர்களுக்குள் ஒரு பயம் இருந்தது. நம்மால் நம் பூர்வ பூமியான தமிழ்நாட்டில் நம் இசையையும் பாடல்களையும் அரங்கேற்ற முடியுமா என்ற பயம் இருந்தது. அந்தப் பயத்தை இந்த யுனிவெர்செல் வோக்கல் குழுவினர் போக்கி விட்டார்கள்.

ஒரு நல்ல துவக்கத்தை இங்கு பிரம்மாண்டமாக ஏற்படுத்தி விட்டார்கள்அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. இங்கு பாடிய அனைவருமே மிகச் சிறப்பாக பாடினார்கள். இந்தத் திறமையாளர்களை இங்கிருக்கும் இசை வல்லுநர்கள் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த அவையை மறக்க முடியாத அவையாக மாற்றி இருக்கிறீர்கள். இதில் பங்குபெற்ற இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,பாடகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்” என்றார்.

விழாவில் கன்னட ஒருங்கிணைப்பாளர் டொனால்ட் ஜே அனைவரையும் வரவேற்று பேசினார். யுனிவர்செல் வோக்கல் நிறுவனர் ரூபன்ராம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Music composer Imman talks about Universal Vocals and Sabthaswaram 2

Music composer Imman talks about Universal Vocals and Sabthaswaram 2

விருது படங்கள் எல்லாம் ‘டுலெட்’ போல வெற்றி பெறுவதில்லையே ஏன்?

விருது படங்கள் எல்லாம் ‘டுலெட்’ போல வெற்றி பெறுவதில்லையே ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thought To Let movie award movie it has good opening in Box officeவிருது வாங்கும் படங்கள் என்றால் வணிக ரசனைக்கு எதிரான படங்கள் , ஆமை வேகப் படங்கள், போரடிக்கும் கதைகள், இருள் சூழ்ந்த காட்சிகள் என்றே இருக்கும் என்கிற பொதுவான மனநிலை நிலவுகிறது.

ஆனால் இதற்கு நேர் மாறான ஒரு படம்’ டு லெட்’.

செழியன் இயக்கியுள்ள இப்படம், உலகத்தரத்தில் ஓர் உள்ளூர் சினிமா.சிவகங்கை மனிதன் இசைத்துள்ள சிம்பொனி.

32 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது இப்படம்.

‘டுலெட் ‘ஒரு நிஜவாழ்க்கையைக் கண்முன் தரிசிக்கும் அனுபவத்தையும் சீரான திரைக்கதை ஓட்டத்தையும் தன்னகத்தே கொண்ட படமாக இருந்தது.

ஊடகங்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற ஒரு படமாக அமைந்துள்ளது .இது எப்போதாவது மட்டுமே நிகழும்.

தரத்துக்கான பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று விட்டால் அது எளிதில் வெற்றி பெற வாய்ப்பில்லாத திரைப்படம் என்கிற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

அதை உடைத்தெறியும் ஒரு படமாக ‘டு லெட் ‘ மாறியிருக்கிறது.

வெளியான திரையரங்குகளில் 4வது வாரமாக ரசிகர்கள் ஆதரவுடன் அதிகரிக்கும் காட்சிகளும் திரையிடுவதற்கு கூடுதலாகி வரும் திரையரங்குகளும் டு லெட் படம் புதிய வரலாறு படைத்து வருவதை உறுதி செய்கிறது.

திரை ரசனையின் இரு வேறு துருவங்கள் ஆக கலைப் பட, வணிகப் பட ரசிகர்கள் இருப்பார்கள்.

யதார்த்த பூர்வமான ரசனை கொண்ட வணிகப் பட ரசிகர்கள் இப்படிப்பட்ட மிடில் சினிமாவைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அந்த நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கையைப் பெற்றதொரு படமாக ‘டு லெட்’ மாறியிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் Review வில் வரவேற்பு பெற்ற இப்படம் Revenue விலும் வெற்றி பெற்றுள்ளது.

Thought To Let movie award movie it has good opening in Box office

சமூகத்தையே குற்றவாளியாக்கியது பொள்ளாச்சி சம்பவம்..: சூர்யா

சமூகத்தையே குற்றவாளியாக்கியது பொள்ளாச்சி சம்பவம்..: சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriya talks about Pollachi sexual abuse crimesபொள்ளாச்சி பாலியல் கொடுமை பற்றி பல நடிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தன் கண்டன பதிவை ஒரு வீடியோவாக பதிவிட்டு இருந்தார். தற்போது நடிகர் சூர்யாவும் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு….

அடிக்கடி நெருடலாக எனக்குள் வந்து போவதுண்டு. ஆண் குழந்தையின் உடல் மீது எனக்கு எவ்விதமான கற்பிதங்களோ, ஒழுக்க வரையறைகளோ இருப்பதே இல்லை. ஆனால், பெண் குழந்தையின் உடல் குறித்து, என்னையறியாமலேயே நிறைய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் திணித்துக்கொண்டே இருக்கிறேன்.

‘நீ எப்படி உடுத்த வேண்டும், நீ எப்படி உட்கார வேண்டும், மற்றவர்கள் பார்வைக்கு உன்னை எப்படி வெளிப்படுத்த வேண்டும்’ என்பதுபற்றி, சமூகம் எனக்குக் கற்றுக் கொடுத்த வரைமுறைகளை அறிவுரையாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

’துணிவு மிக்க பெண்ணாக’ மகளை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கும், என் செயலுக்கும் இடைவெளி இருப்பதை என்னாலேயே உணர முடிகிறது.

குழந்தைப்பேறு காலத்தில், மனைவியுடன் மருத்துவமனை செல்லும்போதெல்லாம் ஒரு வாசகம் மனதை நெருடும். ‘தாயின் கருவில் இருக்கிற குழந்தை, ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றம்’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

படித்தவர்களும், பணக்காரர்களும் வந்துபோகிற மருத்துவமனையில்கூட இப்படி எழுதிப்போட வேண்டிய அவலத்தில் வாழ்கிறோமே என்று வெட்கமாக இருந்தது. பெண் வெறுப்பிலும், எதிர்ப்பிலும் இங்கே படித்தவர்கள், பாமரர்கள்; ஏழைகள், பணக்காரர்கள் என்கிற எந்த வேறுபாடும் இல்லை.

சுமத்தப்படும் பெருமை

இது ஆண்களுக்கான உலகம்; இங்கே பெண்களுக்கு இடமே இல்லை என்று அர்த்தமல்ல. ஆனால், ‘கற்பு, ஒழுக்கம், கலாச்சாரம், குடும்பக் கௌரவம், சாதிப்பெருமை, மதக் கட்டுப்பாடு’ என நிறைய ‘ஆண் பெருமை’களைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் இங்கு இருக்கிறது.

அந்தப் பொறுப்பை நிறைவேற்றிய படியே, ஆண்களின் ‘கருணை’யில் அவர்களின் வசதிக்கேற்ப, தேவைகளைப் பூர்த்திசெய்து, மனம் கோணாமல் பெண்கள் இவ்வுலகில் இருந்துகொள்ளலாம்.

சிரித்த முகத்துடன், உடையில்லாமல் நிற்கிற ஒரு வயது பெண் குழந்தையிடம், நம்முடைய ‘மானப் பிரச்சனை’யை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரசாரம்செய்ய தொடங்குவதில் ஆரம்பிக்கிறது நம்முடைய வன்முறை.

இதிகாசமாக, வரலாறாக, பண்பாடாக, வீரமாக நாம் கொண்டாடுகிற அனைத்திலும் பெண் உடலுக்கு எதிரான அந்தக் கருத்தியல் வன்முறை நிரம்பி வழிகிறது.

கடவுளின் அவதாரமாகவே இருந்தாலும், நெருப்பில் இறங்கித்தானே இங்கே ‘கற்பை’ நிரூபித்து அவள் மீண்டு வர வேண்டும்! ‘என் மனைவியின் ஒழுக்கத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவள் நலமுடன் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி. கற்பாவது, வெங்காயமாது’ என்று சொல்லும் தைரியம் இங்கே நம்முடைய கடவுளுக்கேகூட இல்லையே

சில வருடங்களுக்கு முன்பு, சேலத்தில் ஒரு பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகிறான் அவளுடைய முன்னாள் காதலன்.

அந்தப் பெண் தன் வீட்டில் உண்மையைச் சொல்கிறாள். ‘குடும்ப மானத்தைக் கெடுத்துட்டியே’ என்று அடித்துத் துன்புறுத்துகிறார்கள். அந்த புகைப்படங்கள் மேலும் இணையத்தில் பரவிவிடக் கூடாது என்று புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால், ‘இப்படி பொண்ணை பெத்து ஊர் மேய விட்டுட்டு, இப்ப வந்து நில்லுங்க’ என்று பெற்றோரையே வசை பாடுகிறார் காவல் அதிகாரி.

இந்த அவமானத்தையெல்லாம் மீண்டும் அந்தப் பெண்ணின் மீது கொட்டுகின்றனர் பெற்றோர். கொடுமை தாள முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாள். உடலை படம் பிடித்து மிரட்டியவனைகூடப் போராடி எதிர்கொண்ட அந்தப் பெண்ணால், தன் நிலையுணர்ந்து துணை நிற்க வேண்டிய குடும்பமும், சமூகமும் எதிராக திரும்பும்போது போராட முடியவில்லை; உயிரை மாய்த்துக்கொண்டாள்.

சிதைக்கப்படும் நம்பிக்கை

தன்னை காதலிக்கும் ஒருத்தனை நம்பாமல், ஒரு பெண் வேறு யாரை நம்புவாள்? பெண்களின் நம்பிக்கையை உடைக்கிற ஆண்கள் உயிரோடு வலம் வருகிறார்கள். ஆனால், ‘மானம் காக்கும் வீரர்கள்’ குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண்களையே தண்டிக்கிறார்கள்.

பாதிப்புக்கு ஆளான பெண்களுக்கு, இந்தச் சமூகத்தில் தொடர்ந்து வாழ்கிற தண்டனையைவிட, தற்கொலை என்கிற தவறான முடிவு எளிய தீர்வாக இருக்கிறது என்றால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டாமா?

சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியான, பாலியல் தொந்தரவுக்கு ஆளான ஒரு சிறுமியின் தந்தை எழுதிய கட்டுரையைப் படித்தபோது நெஞ்சை உலுக்கியது.

தன் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றபோது, ’செக்ஸ் கம்ளைண்ட் குடுத்தது யாரு?’ என்று பலரின் முன்னிலையில் குரல் உயர்த்தி கேட்கின்றனர் காவலர்கள்.

இரவு பதினொரு மணிக்கு குழந்தையை அழைத்துக்கொண்டு நீதிபதி வீட்டிற்குப் போகிறார்கள். அவர் தூங்கிக் கொண்டிருக்க, நான்கு மணிநேரம் அந்த நள்ளிரவில் காத்திருகிறது அந்தக் குழந்தை. அதற்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்கு போனால் அங்கும், ‘ஒரு குழந்தையைக் கையாளுகிறோம்’ என்ற உணர்வே இல்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் நடந்துகொள்கின்றனர்.

‘அந்த நபர், வேறொரு குழந்தைக்கு பாலியல் தொந்தரவு தந்துவிடக்கூடாது’ என்ற நோக்கத்திற்காக புகார் கொடுக்க சென்றவரை சட்டமும், சமூகமும் நடத்திய விதம் ஒரு சோறு பதம்.

பெண் வெறுப்புப் பிரச்சாரம்

இதோ ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறது பொள்ளாச்சி சம்பவம். கொடூரமான பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் துணிந்து புகார் அளிக்கிறார்.

ஆனால், அந்தப் பெண்ணைப் பற்றிய எல்லா விவரங்களும் காவல் துறையின் மூலமாகவே வெளியானதும், அந்தக் குடும்பம் மிரட்டப்பட்டதும் நம்முடைய அலட்சியத்தையும் அமைப்புகளின் சரிவுகளையும் தோலுரிக்கிறது. இந்த நிகழ்வை ஒட்டி, பொதுவாக இரண்டுவிதமான எதிர்வினைகள் வருகின்றன. ’பெண்களே இதைப் பார்த்தாவது திருந்துங்கள்.

அறிமுகம் இல்லாத ஆண்களை நம்பாதீர்கள்’ என்று அன்போடு அறிவுரை சொல்கிறது ஒரு கூட்டம். ‘ஊசி இடம்கொடுக்காமல் நூல் நுழையுமா?’ என்று இந்த நேரத்திலும் பெண் வெறுப்புப் பிரச்சாரம் செய்கிறது இன்னொரு கூட்டம்.

பெண்கள் மீதான இத்தகைய ‘அன்பு’, ‘வெறுப்பு’ இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். ‘ஆண்கள் அப்படிதான் இருப்பார்கள். நீங்கள் அடங்கி ஒடுங்கி இருங்கள்’ என்பதே அது.

அறிமுகம் இல்லாத எந்த ஆணையும் நம்பாதே என்று பெண்களுக்கு சொல்கிற நாம், ஏன் ‘பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்’ என்று ஆண்களுக்குச் சொல்லத் தவறுகிறோம்? ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று வீட்டின் முன்னே எச்சரிகை வாசகம் இருப்பதைப் போல, ஒவ்வொரு பெண்ணும், ‘ஆண்கள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்தை மனதில் ஒரு எச்சரிக்கைப் பலகையை மாட்டிக்கொண்டு அலைய வேண்டுமா?

தொழில்முறைக் குற்றவாளிகள்

பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் காட்சிப் பதிவுகளில் உள்ள பெண்களின் கதறல் நம் ஈரக்குலையை அறுக்கிறது. தனிப்பட்ட இச்சைக்காக மட்டும் அந்தக் கயவர்கள் இதைச் செய்யவில்லை.

பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து, மிரட்டி காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள். மறுத்த பெண்களை அடித்து, துன்புறுத்தியிருக்கிறார்கள். வசதியானவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக இதை ஒரு ‘தொழில்’ ஆகவே செய்துவரும் இவர்களைத் தொழில்முறைக் குற்றவாளிகளாகவே கருத வேண்டும்; கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.

அதேசமயம், இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டதோடு பிரச்சினை முடிந்துவிடும் என்று நாம் நினைத்தால், அது அபத்தமானது.

பெண்ணின் உடலை வைத்து இந்தச் சமூகம் ஆடுகிற கேவலமான விளையாட்டின், சிறிய விளைவுதான் பொள்ளாச்சி சம்பவம். நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஏன் எந்தப் பெண்ணும் முன்வந்து நம் சட்டத்திடமும், நீதியிடமும் பாதுகாப்பு கோரவில்லை? நம்பிக்கைக்குரிய ‘ஆண்கள்’ நிரம்பி இருக்கிற வீட்டிலும், தாங்கள் மிரட்டப்படுவதைச் சொல்லவிடாமல் அந்தப் பெண்களை எது தடுத்தது?

அவர்களுக்கு நிகழ்ந்த அநீதியைவிட, அதை முறையிட்டு தீர்வு தேட முடியாத நம்முடைய கொடூரச் சூழல் மேலும் அபாயகரமானது இல்லையா? ‘என்னை இப்படி தலைகுனிய வெச்சிட்டீயே’ என்று ஓலமிடுகிற அன்பானவர்கள்தான், ‘ஆபாசத்தை வெளியே பரவ விடுவேன்’ என்ற குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பெண்கள் பலியாக முக்கியமான காரணமாகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஒருவகையில் நிகழ்ந்திருக்கும் குற்றத்தில் நமக்கும் முக்கியமான பங்கிருக்கிறது. ‘யார் உன்னை மிரட்டுகிறானோ, அவனைப் பொதுவெளியில் நிறுத்தி அசிங்கப்படுத்து. சிறைக்கு அனுப்பு.

நாங்கள் உன்னோடு இருக்கிறோம்’ என்று குடும்பம் சொன்னால், இந்த மிரட்டல் ஒருபோதும் பலிக்காது. சட்டத்தைவிட, நம் பெண்களுக்கு இந்தப் பாதுகாப்புணர்வுதான் பலம் கொடுக்கும்.

குடும்பத்தாலும், சமூகத்தாலும் தன் உடலை வைத்தே பலவீனமாக வளர்க்கப்படுகிறாள் பெண். சமூக விரோதிகள் அதை பயன்படுத்திக்கொள்கிறார்கள். பிரச்சினையின் வேர் நம்மிடம்தான் இருக்கிறது. சிக்கிவிட்ட நான்கு குற்றவாளிகளின் மீது கல்லெறிந்துவிட்டு, பெண்களுக்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமாக நாம் நிகழ்த்துகிற குற்றங்களை மறைக்க முயற்சிக்கிறோம்.

பெண்களுக்குத் துணை நிற்போம்

கோவை மண்ணிலிருந்து படித்து முடித்து வெளியூரில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் முகநூல் பதிவு என்னை மிகவும் நெகிழச் செய்தது. “எவனாச்சும் உன் போட்டோ, வீடியோவ வெச்சி மிரட்டினா பயப்படாத. ‘என்ன வேணா பண்ணிக்கோடா.

உலகத்துல இருக்கிற எல்லா பொண்ணுக்கும் இருக்கிற உடம்புதான் எனக்கும் இருக்குனு சொல்லு’ என்று தொலைபேசியில் கூறிய தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழ வேண்டுமென்று தோன்றியது” என்று அந்தப்பெண் எழுதியிருந்தார்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தகைய நம்பிக்கை நிறைந்த, பாதுகாப்பான இடமாக குடும்பங்கள் மாறாதவரை, இந்தக் குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும். இந்த மாற்றத்தின் முதல் முயற்சியாக, ‘பெண்ணின் வெற்றுடல் ஆபாசமானதல்ல ’ என்ற முழக்கம் நம் குடும்பங்களில் இருந்து ஒலிக்கட்டும்.

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாருக்கும் அஞ்சாமல் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நீதிமன்றம் உறுதிசெய்து, இக்குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும்.

அதேசமயம், ‘என் உடலை வைத்து நீ என்னை பணியச் செய்ய முடியாது. உன் வக்கிரத்தைவிட என் வெற்றுடல் ஆபாசமானது இல்லை’ என்று பெண்கள் துணிந்து நிற்பதும், அதற்குத் துணையாக நாம் இருப்பதும் அனைவரின் கடமை.

’பாலியல் வன்முறையை’விட ஆபத்தானது, பெண்களுக்கு எதிராக நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்முறை என்பதை உணருவோம்.

-சூர்யா

Actor Suriya talks about Pollachi sexual abuse crimes

 

More Articles
Follows